FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, July 25, 2017

பாலியல் புகாரால் காதுகேளாதோர் பள்ளி உரிமம் ரத்து: மாற்றுப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க உத்தரவு

25.07.2017
திருப்பூரில் காதுகேளாதோர் பள்ளி நிர்வாகிகள் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டதால், அங்கு பயின்ற மாணவர்களை கோவை மாவட்டத்திலுள்ள காதுகேளாதோர் பள்ளியில் சேர்க்க ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டங்களில் காதுகேளாத, வாய்பேசாத முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 3 இடங்களில் சிறப்பு பள்ளி நடத்தி வருபவர் முருகசாமி. மாற்றுத்திறனாளியான இவர் நடத்தும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பள்ளியில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கர்ப்பமடைந்த அந்தச் சிறுமியை பொள்ளாச்சி அழைத்து சென்று தனியார் மருத்துவமனையில் ஊழியர்கள் உதவியுடன் கருவை கலைத்தாக கூறப்படுகிறது.

இந்தப் புகாரில் பள்ளி நிறுவனர் முருகசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். அதனால், பள்ளியின் அங்கீகாரத்தை மாநில மாற்றுத்திறனாளிகள் துறை ஆணையர் ரத்து செய்தார். இதனைத் தொடர்ந்து தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த பள்ளியில் பயின்று வந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட மாணவர்களை கோவை மாநகராட்சி காதுகேளாதோர் பள்ளி மற்றும் இன்பேன்ட் ஜீசஸ் பள்ளியில் சேர்க்க கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment