FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Saturday, July 22, 2017

இலவச தையல் மெஷின்; தேதி நீட்டிக்க வலியுறுத்தல்

21.07.2017, திருப்பூர் ·: இலவச தையல் மெஷின் கேட்டு விண்ணப்பிக்க, சமூகநலத்துறை கூடுதல்அவகாசம் வழங்க வேண்டுமென, பெண்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.சமூகநலத்துறை மூலம், கணவரால் கைவிடப்பட்ட, மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இலவச தையல் மெஷின் வழங்கப்படுகிறது. அத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர், 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக உள்ளவர்கள், இருப்பிட சான்று, பதிவு பெற்ற தையல் நிறுவனத்தில் ஆறு மாதம் பயிற்சி பெற்றதற்கான சான்று, ஜாதிச்சான்று, இரண்டு போட்டோவுடன் விண்ணப்பிக்கலாம்.விதவை, ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றிதழையும், ஆதார் அட்டை நகலுடன் இணைத்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில், 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, 5ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஜாதிச்சான்று, பயிற்சி சான்று தயாராக இருந்தாலும், வருமான சான்று பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் சான்று பெற வேண்டும் என்பதால், 5 மற்றும், 6ம் தேதிகளில், ஏழை பெண்கள் வருமானசான்று கேட்டு விண்ணப்பித்தனர். சான்று பெறுவதற்குள், காலஅவகாசம் முடிந்துவிட்டதால், இலவச தையல் மெஷின் கேட்டு விண்ணப்பிக்க இயலவில்லை. மாவட்ட நிர்வாகம் வழங்கிய குறுகிய அவகாசத்தில், 10 பெண்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். ஏழை, எளிய பெண்களின் எதிர்கால நலன்கருதி, இலவச தையல் மெஷின் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்ப அவகாசத்தை மேலும் நீட்டித்து வழங்க வேண்டுமென, பெண்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment