FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Saturday, July 22, 2017

இலவச தையல் மெஷின்; தேதி நீட்டிக்க வலியுறுத்தல்

21.07.2017, திருப்பூர் ·: இலவச தையல் மெஷின் கேட்டு விண்ணப்பிக்க, சமூகநலத்துறை கூடுதல்அவகாசம் வழங்க வேண்டுமென, பெண்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.சமூகநலத்துறை மூலம், கணவரால் கைவிடப்பட்ட, மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இலவச தையல் மெஷின் வழங்கப்படுகிறது. அத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர், 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக உள்ளவர்கள், இருப்பிட சான்று, பதிவு பெற்ற தையல் நிறுவனத்தில் ஆறு மாதம் பயிற்சி பெற்றதற்கான சான்று, ஜாதிச்சான்று, இரண்டு போட்டோவுடன் விண்ணப்பிக்கலாம்.விதவை, ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றிதழையும், ஆதார் அட்டை நகலுடன் இணைத்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில், 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, 5ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஜாதிச்சான்று, பயிற்சி சான்று தயாராக இருந்தாலும், வருமான சான்று பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் சான்று பெற வேண்டும் என்பதால், 5 மற்றும், 6ம் தேதிகளில், ஏழை பெண்கள் வருமானசான்று கேட்டு விண்ணப்பித்தனர். சான்று பெறுவதற்குள், காலஅவகாசம் முடிந்துவிட்டதால், இலவச தையல் மெஷின் கேட்டு விண்ணப்பிக்க இயலவில்லை. மாவட்ட நிர்வாகம் வழங்கிய குறுகிய அவகாசத்தில், 10 பெண்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். ஏழை, எளிய பெண்களின் எதிர்கால நலன்கருதி, இலவச தையல் மெஷின் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்ப அவகாசத்தை மேலும் நீட்டித்து வழங்க வேண்டுமென, பெண்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment