FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, July 22, 2017

இலவச தையல் மெஷின்; தேதி நீட்டிக்க வலியுறுத்தல்

21.07.2017, திருப்பூர் ·: இலவச தையல் மெஷின் கேட்டு விண்ணப்பிக்க, சமூகநலத்துறை கூடுதல்அவகாசம் வழங்க வேண்டுமென, பெண்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.சமூகநலத்துறை மூலம், கணவரால் கைவிடப்பட்ட, மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இலவச தையல் மெஷின் வழங்கப்படுகிறது. அத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர், 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக உள்ளவர்கள், இருப்பிட சான்று, பதிவு பெற்ற தையல் நிறுவனத்தில் ஆறு மாதம் பயிற்சி பெற்றதற்கான சான்று, ஜாதிச்சான்று, இரண்டு போட்டோவுடன் விண்ணப்பிக்கலாம்.விதவை, ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றிதழையும், ஆதார் அட்டை நகலுடன் இணைத்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில், 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, 5ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஜாதிச்சான்று, பயிற்சி சான்று தயாராக இருந்தாலும், வருமான சான்று பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் சான்று பெற வேண்டும் என்பதால், 5 மற்றும், 6ம் தேதிகளில், ஏழை பெண்கள் வருமானசான்று கேட்டு விண்ணப்பித்தனர். சான்று பெறுவதற்குள், காலஅவகாசம் முடிந்துவிட்டதால், இலவச தையல் மெஷின் கேட்டு விண்ணப்பிக்க இயலவில்லை. மாவட்ட நிர்வாகம் வழங்கிய குறுகிய அவகாசத்தில், 10 பெண்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். ஏழை, எளிய பெண்களின் எதிர்கால நலன்கருதி, இலவச தையல் மெஷின் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்ப அவகாசத்தை மேலும் நீட்டித்து வழங்க வேண்டுமென, பெண்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment