FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, July 22, 2017

இலவச தையல் மெஷின்; தேதி நீட்டிக்க வலியுறுத்தல்

21.07.2017, திருப்பூர் ·: இலவச தையல் மெஷின் கேட்டு விண்ணப்பிக்க, சமூகநலத்துறை கூடுதல்அவகாசம் வழங்க வேண்டுமென, பெண்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.சமூகநலத்துறை மூலம், கணவரால் கைவிடப்பட்ட, மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இலவச தையல் மெஷின் வழங்கப்படுகிறது. அத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர், 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக உள்ளவர்கள், இருப்பிட சான்று, பதிவு பெற்ற தையல் நிறுவனத்தில் ஆறு மாதம் பயிற்சி பெற்றதற்கான சான்று, ஜாதிச்சான்று, இரண்டு போட்டோவுடன் விண்ணப்பிக்கலாம்.விதவை, ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றிதழையும், ஆதார் அட்டை நகலுடன் இணைத்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில், 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, 5ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஜாதிச்சான்று, பயிற்சி சான்று தயாராக இருந்தாலும், வருமான சான்று பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் சான்று பெற வேண்டும் என்பதால், 5 மற்றும், 6ம் தேதிகளில், ஏழை பெண்கள் வருமானசான்று கேட்டு விண்ணப்பித்தனர். சான்று பெறுவதற்குள், காலஅவகாசம் முடிந்துவிட்டதால், இலவச தையல் மெஷின் கேட்டு விண்ணப்பிக்க இயலவில்லை. மாவட்ட நிர்வாகம் வழங்கிய குறுகிய அவகாசத்தில், 10 பெண்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். ஏழை, எளிய பெண்களின் எதிர்கால நலன்கருதி, இலவச தையல் மெஷின் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்ப அவகாசத்தை மேலும் நீட்டித்து வழங்க வேண்டுமென, பெண்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment