FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Monday, July 10, 2017

காது கேட்க உதவும் கருவிகளுக்கு காசு கொடுக்காமல் போன சசிகலா!

09.07.2017
சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி இருக்கும் அதிமுக (அம்மா) கட்சி பொதுச்செயலாளர் சசிகலா சிறை செல்லும் முன்பு ராமபுரம் தோட்டத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார். அங்கு எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்த சசிகலா, அதே வளாகத்தில் உள்ள வாய்பேசாதோர் மற்றும் காது கேளாதோர் பள்ளிக்கு விசிட் செய்து அங்குப்படிக்கும் குழந்தைகளுக்குக் காது கேட்க உதவும் கருவிகளை வழங்கினார்.

'18 லட்ச ரூபாய் மதிப்பில் 245 காது கேட்க உதவும் கருவிகள் வாங்கிக்கொடுத்ததோடு சரி. ஆறு மாதம் காலமாகியும் இன்னும் எங்களுக்கு பணம் கொடுக்கவில்லை. இதனால் நாங்கள் அந்தக் கருவியை உடனே திரும்பி எடுத்துக்கொள்ள வேண்டியதாகி விட்டது' என்று கருவி வழங்கிய நிறுவனம் கதறலோடு ஊடகத்துறைக்கு தகவல் வழங்கி இருக்கிறார்கள். மேலும், 'எங்களுக்கு பணம் வழங்காத தகவலை போயஸ் கார்டனிலும் தெரிவித்து விட்டோம். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. கருவிகள் வழங்கிய கையோடு பள்ளிக்கு பத்து லட்ச ரூபாய் காசோலையையும் வழங்கினார் சசிகலா. அந்தக் காசோலையில் உள்ள கையெழுத்து சரியாகப் பொருந்தி வரவில்லை என்று காசோலையை வங்கியும் திருப்பி அனுப்பி விட்டது' என்று கூடுதல் தகவலைச் சொல்லி இருக்கிறார்கள்

இது குறித்து வாய்பேசாதோர் மற்றும் காது கேளாதோர் பள்ளியில் செய்தியாளர்கள் கருத்துக்கேட்ட போது "காசோலை திரும்ப வந்தது குறித்து நாங்கள் கருத்துச் சொல்ல விரும்ப இல்லை. ஆனால், கடந்த காலங்களில் எங்கள் பள்ளிக்கு ஜெயலலிதாவும், சசிகலாவும் எங்களுக்கு நிறைய உதவி செய்திருக்கிறார்கள். சென்னையில் வெள்ளம் வந்த போது எங்களது பள்ளி பெரிய அளவில் பாதிப்படைந்தது. அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரவும் அதிமுக தலைமைக்கழகம்தான் நிறைய நிதி உதவி வழங்கி இருக்கிறது' என்று சொல்லி இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment