FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, July 10, 2017

காது கேட்க உதவும் கருவிகளுக்கு காசு கொடுக்காமல் போன சசிகலா!

09.07.2017
சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி இருக்கும் அதிமுக (அம்மா) கட்சி பொதுச்செயலாளர் சசிகலா சிறை செல்லும் முன்பு ராமபுரம் தோட்டத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார். அங்கு எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்த சசிகலா, அதே வளாகத்தில் உள்ள வாய்பேசாதோர் மற்றும் காது கேளாதோர் பள்ளிக்கு விசிட் செய்து அங்குப்படிக்கும் குழந்தைகளுக்குக் காது கேட்க உதவும் கருவிகளை வழங்கினார்.

'18 லட்ச ரூபாய் மதிப்பில் 245 காது கேட்க உதவும் கருவிகள் வாங்கிக்கொடுத்ததோடு சரி. ஆறு மாதம் காலமாகியும் இன்னும் எங்களுக்கு பணம் கொடுக்கவில்லை. இதனால் நாங்கள் அந்தக் கருவியை உடனே திரும்பி எடுத்துக்கொள்ள வேண்டியதாகி விட்டது' என்று கருவி வழங்கிய நிறுவனம் கதறலோடு ஊடகத்துறைக்கு தகவல் வழங்கி இருக்கிறார்கள். மேலும், 'எங்களுக்கு பணம் வழங்காத தகவலை போயஸ் கார்டனிலும் தெரிவித்து விட்டோம். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. கருவிகள் வழங்கிய கையோடு பள்ளிக்கு பத்து லட்ச ரூபாய் காசோலையையும் வழங்கினார் சசிகலா. அந்தக் காசோலையில் உள்ள கையெழுத்து சரியாகப் பொருந்தி வரவில்லை என்று காசோலையை வங்கியும் திருப்பி அனுப்பி விட்டது' என்று கூடுதல் தகவலைச் சொல்லி இருக்கிறார்கள்

இது குறித்து வாய்பேசாதோர் மற்றும் காது கேளாதோர் பள்ளியில் செய்தியாளர்கள் கருத்துக்கேட்ட போது "காசோலை திரும்ப வந்தது குறித்து நாங்கள் கருத்துச் சொல்ல விரும்ப இல்லை. ஆனால், கடந்த காலங்களில் எங்கள் பள்ளிக்கு ஜெயலலிதாவும், சசிகலாவும் எங்களுக்கு நிறைய உதவி செய்திருக்கிறார்கள். சென்னையில் வெள்ளம் வந்த போது எங்களது பள்ளி பெரிய அளவில் பாதிப்படைந்தது. அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரவும் அதிமுக தலைமைக்கழகம்தான் நிறைய நிதி உதவி வழங்கி இருக்கிறது' என்று சொல்லி இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment