FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, July 10, 2017

காது கேட்க உதவும் கருவிகளுக்கு காசு கொடுக்காமல் போன சசிகலா!

09.07.2017
சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி இருக்கும் அதிமுக (அம்மா) கட்சி பொதுச்செயலாளர் சசிகலா சிறை செல்லும் முன்பு ராமபுரம் தோட்டத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார். அங்கு எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்த சசிகலா, அதே வளாகத்தில் உள்ள வாய்பேசாதோர் மற்றும் காது கேளாதோர் பள்ளிக்கு விசிட் செய்து அங்குப்படிக்கும் குழந்தைகளுக்குக் காது கேட்க உதவும் கருவிகளை வழங்கினார்.

'18 லட்ச ரூபாய் மதிப்பில் 245 காது கேட்க உதவும் கருவிகள் வாங்கிக்கொடுத்ததோடு சரி. ஆறு மாதம் காலமாகியும் இன்னும் எங்களுக்கு பணம் கொடுக்கவில்லை. இதனால் நாங்கள் அந்தக் கருவியை உடனே திரும்பி எடுத்துக்கொள்ள வேண்டியதாகி விட்டது' என்று கருவி வழங்கிய நிறுவனம் கதறலோடு ஊடகத்துறைக்கு தகவல் வழங்கி இருக்கிறார்கள். மேலும், 'எங்களுக்கு பணம் வழங்காத தகவலை போயஸ் கார்டனிலும் தெரிவித்து விட்டோம். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. கருவிகள் வழங்கிய கையோடு பள்ளிக்கு பத்து லட்ச ரூபாய் காசோலையையும் வழங்கினார் சசிகலா. அந்தக் காசோலையில் உள்ள கையெழுத்து சரியாகப் பொருந்தி வரவில்லை என்று காசோலையை வங்கியும் திருப்பி அனுப்பி விட்டது' என்று கூடுதல் தகவலைச் சொல்லி இருக்கிறார்கள்

இது குறித்து வாய்பேசாதோர் மற்றும் காது கேளாதோர் பள்ளியில் செய்தியாளர்கள் கருத்துக்கேட்ட போது "காசோலை திரும்ப வந்தது குறித்து நாங்கள் கருத்துச் சொல்ல விரும்ப இல்லை. ஆனால், கடந்த காலங்களில் எங்கள் பள்ளிக்கு ஜெயலலிதாவும், சசிகலாவும் எங்களுக்கு நிறைய உதவி செய்திருக்கிறார்கள். சென்னையில் வெள்ளம் வந்த போது எங்களது பள்ளி பெரிய அளவில் பாதிப்படைந்தது. அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரவும் அதிமுக தலைமைக்கழகம்தான் நிறைய நிதி உதவி வழங்கி இருக்கிறது' என்று சொல்லி இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment