FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, July 10, 2017

காது கேட்க உதவும் கருவிகளுக்கு காசு கொடுக்காமல் போன சசிகலா!

09.07.2017
சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி இருக்கும் அதிமுக (அம்மா) கட்சி பொதுச்செயலாளர் சசிகலா சிறை செல்லும் முன்பு ராமபுரம் தோட்டத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார். அங்கு எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்த சசிகலா, அதே வளாகத்தில் உள்ள வாய்பேசாதோர் மற்றும் காது கேளாதோர் பள்ளிக்கு விசிட் செய்து அங்குப்படிக்கும் குழந்தைகளுக்குக் காது கேட்க உதவும் கருவிகளை வழங்கினார்.

'18 லட்ச ரூபாய் மதிப்பில் 245 காது கேட்க உதவும் கருவிகள் வாங்கிக்கொடுத்ததோடு சரி. ஆறு மாதம் காலமாகியும் இன்னும் எங்களுக்கு பணம் கொடுக்கவில்லை. இதனால் நாங்கள் அந்தக் கருவியை உடனே திரும்பி எடுத்துக்கொள்ள வேண்டியதாகி விட்டது' என்று கருவி வழங்கிய நிறுவனம் கதறலோடு ஊடகத்துறைக்கு தகவல் வழங்கி இருக்கிறார்கள். மேலும், 'எங்களுக்கு பணம் வழங்காத தகவலை போயஸ் கார்டனிலும் தெரிவித்து விட்டோம். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. கருவிகள் வழங்கிய கையோடு பள்ளிக்கு பத்து லட்ச ரூபாய் காசோலையையும் வழங்கினார் சசிகலா. அந்தக் காசோலையில் உள்ள கையெழுத்து சரியாகப் பொருந்தி வரவில்லை என்று காசோலையை வங்கியும் திருப்பி அனுப்பி விட்டது' என்று கூடுதல் தகவலைச் சொல்லி இருக்கிறார்கள்

இது குறித்து வாய்பேசாதோர் மற்றும் காது கேளாதோர் பள்ளியில் செய்தியாளர்கள் கருத்துக்கேட்ட போது "காசோலை திரும்ப வந்தது குறித்து நாங்கள் கருத்துச் சொல்ல விரும்ப இல்லை. ஆனால், கடந்த காலங்களில் எங்கள் பள்ளிக்கு ஜெயலலிதாவும், சசிகலாவும் எங்களுக்கு நிறைய உதவி செய்திருக்கிறார்கள். சென்னையில் வெள்ளம் வந்த போது எங்களது பள்ளி பெரிய அளவில் பாதிப்படைந்தது. அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரவும் அதிமுக தலைமைக்கழகம்தான் நிறைய நிதி உதவி வழங்கி இருக்கிறது' என்று சொல்லி இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment