FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, July 10, 2017

காதுகேளாதோருக்கான சதுரங்க போட்டி: 11 மாவட்ட மாணவர்கள் பங்கேற்பு

08.07.2017
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காதுகேளாத பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான 4வது சதுரங்க போட்டிகள் துவங்கியது.

ஓசூரில் 4வது ஆண்டு மாநில அளவிலான காதுகேளாதோர் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் சதுரங்க போட்டிகள் துவங்கியது.

இந்த போட்டிகளில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், காஞ்சிபுரம், நெல்லை உள்ளிட்ட தமிழகத்திலுள்ள 11 மாவட்டங்களை சோந்த காதுகேளாத பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர்.

போட்டியானது இரண்டு நாட்களாக சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து நடைபெற உள்ளன.

இறுதிப்போட்டியில் வெற்றி பெரும் மாணவ, மாணவியர்கள் தேசிய அளவில் நடைபெறும் காதுகேளாதோருக்கான சதுரங்க போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த சதுரங்க போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு காதுகேளாதோர் சதுரங்க விளையாட்டு கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட காதுகேளாதோர் சதுரங்க விளையாட்டு சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

No comments:

Post a Comment