FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Monday, July 10, 2017

காதுகேளாதோருக்கான சதுரங்க போட்டி: 11 மாவட்ட மாணவர்கள் பங்கேற்பு

08.07.2017
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காதுகேளாத பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான 4வது சதுரங்க போட்டிகள் துவங்கியது.

ஓசூரில் 4வது ஆண்டு மாநில அளவிலான காதுகேளாதோர் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் சதுரங்க போட்டிகள் துவங்கியது.

இந்த போட்டிகளில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், காஞ்சிபுரம், நெல்லை உள்ளிட்ட தமிழகத்திலுள்ள 11 மாவட்டங்களை சோந்த காதுகேளாத பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர்.

போட்டியானது இரண்டு நாட்களாக சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து நடைபெற உள்ளன.

இறுதிப்போட்டியில் வெற்றி பெரும் மாணவ, மாணவியர்கள் தேசிய அளவில் நடைபெறும் காதுகேளாதோருக்கான சதுரங்க போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த சதுரங்க போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு காதுகேளாதோர் சதுரங்க விளையாட்டு கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட காதுகேளாதோர் சதுரங்க விளையாட்டு சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

No comments:

Post a Comment