FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, July 10, 2017

காதுகேளாதோருக்கான சதுரங்க போட்டி: 11 மாவட்ட மாணவர்கள் பங்கேற்பு

08.07.2017
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காதுகேளாத பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான 4வது சதுரங்க போட்டிகள் துவங்கியது.

ஓசூரில் 4வது ஆண்டு மாநில அளவிலான காதுகேளாதோர் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் சதுரங்க போட்டிகள் துவங்கியது.

இந்த போட்டிகளில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், காஞ்சிபுரம், நெல்லை உள்ளிட்ட தமிழகத்திலுள்ள 11 மாவட்டங்களை சோந்த காதுகேளாத பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர்.

போட்டியானது இரண்டு நாட்களாக சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து நடைபெற உள்ளன.

இறுதிப்போட்டியில் வெற்றி பெரும் மாணவ, மாணவியர்கள் தேசிய அளவில் நடைபெறும் காதுகேளாதோருக்கான சதுரங்க போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த சதுரங்க போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு காதுகேளாதோர் சதுரங்க விளையாட்டு கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட காதுகேளாதோர் சதுரங்க விளையாட்டு சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

No comments:

Post a Comment