FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, July 10, 2017

காதுகேளாதோருக்கான சதுரங்க போட்டி: 11 மாவட்ட மாணவர்கள் பங்கேற்பு

08.07.2017
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காதுகேளாத பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான 4வது சதுரங்க போட்டிகள் துவங்கியது.

ஓசூரில் 4வது ஆண்டு மாநில அளவிலான காதுகேளாதோர் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் சதுரங்க போட்டிகள் துவங்கியது.

இந்த போட்டிகளில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், காஞ்சிபுரம், நெல்லை உள்ளிட்ட தமிழகத்திலுள்ள 11 மாவட்டங்களை சோந்த காதுகேளாத பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர்.

போட்டியானது இரண்டு நாட்களாக சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து நடைபெற உள்ளன.

இறுதிப்போட்டியில் வெற்றி பெரும் மாணவ, மாணவியர்கள் தேசிய அளவில் நடைபெறும் காதுகேளாதோருக்கான சதுரங்க போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த சதுரங்க போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு காதுகேளாதோர் சதுரங்க விளையாட்டு கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட காதுகேளாதோர் சதுரங்க விளையாட்டு சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

No comments:

Post a Comment