FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, November 9, 2018

மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி 13-ந் தேதி நடக்கிறது

09.11.2018
திருவண்ணாமலை,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவுரையின்படி மாற்றுத் திறனாளிகள், கண்பார்வையற்யோர், மனவளர்ச்சி குன்றியோர், காது கேளாதோர் உள்பட மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 2018-19-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் வருகிற 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக ஒருங்கிணைந்த வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்து வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்க உள்ளார்.

இதில் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீட்டர், 100 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், 100 மீட்டர் சக்கர நாற்காலி போன்ற போட்டிகளும், பார்வையற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற போட்டிகளும், மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல் போன்ற போட்டிகளும், காது கேளாதோருக்கு 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீட்டர் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

இது குறித்து மேலும் தகவல் அறிய திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஜெயக்குமாரி தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment