FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, November 30, 2018

சைகையை மொழிபெயர்க்கும் நுண்ணறிவு கம்ப்யூட்டர் செயலி


சென்னை, நவ. 28–
சைகையை மொழி பெயர்க்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு கொண்ட ஸ்மார்ட்போன் செயலியை நெதர்லாந்தை சேர்ந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது.

செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் தாங்கள் கூற விரும்புவதை சைகை மூலம் தெரிவிப்பார்கள். ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த சார்லஸ் மைக்கெல் டி லேபி என்பவர் செவித் திறன் குறைபாடு உள்ளவர்கள் சைகையில் கூறும் விஷயத்தை புரிந்து கொள்ளும் வகையில் சைகை மொழியை உருவாக்கினார்.

இந்நிலையில் செவித்திறன் குறைபாடு, பேச்சு குறைபாடு உள்ளவர்களின் சைகையை மொழிபெயர்க்கும் வகையில் “கூகுள் ட்ரான்ஸ்லாட்டர் ஃபார் தி டெஃப் அண்ட் ம்யூட்” என்னும் செயற்கை நுண்ணறிவை நெதர்லாந்தை சேர்ந்த எவால்க் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

1.8 கோடி பேருக்கு செவித்திறன் குறைபாடு

இந்த செயலியை பயன்படுத்தி தங்களின் ஸ்மார்ட்போன் முன்பு சைகையில் பேசினால் அதை வாக்கியமாகவும், பேச்சாகவும் இந்த செயலி மாற்றிவிடும். இந்த செயலியை ஸ்மார்ட் போன், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களில் பயன்படுத்தலாம்.

தேசிய காது கேளாதோர் சங்கத்தின் தகவல் படி, இந்தியாவில் 1.8 கோடி பேருக்கு செவித்திறன் குறைபாடு உள்ளது. செவித் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது கடினமாகவே இருக்கிறது.

மொழிபெயர்ப்பாளர்களின் சேவை

இதுகுறித்து எவால்க் துணை நிறுவனரும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான கோன்ஸ்டாண்டின் பாண்டார் கூறியதாவது:–

செவித் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு மொழிபெயர்ப்பாளர்களின் சேவை பெரும் தேவையாக உள்ளது. ஆனால், பெரும்பாலான நேரங்களில் மொழிப்பெயர்ப்பாளர்கள் கிடைப்பதில்லை. மேலும் மொழிப்பெயர்ப்பாளர்களுக்கு ஒவ்வொரு முறையும் அதிகமான தொகை கொடுக்க வேண்டியுள்ளது. இதனால், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களிடம் உரையாடுவது என்பது சவாலான விஷயமாக உள்ளது. அவர்களிடம் பென் பேப்பர் மூலம் எழுத்து வடிவில் உரையாடுவது மோசமான யோசனை. இந்த செயல் அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். நேரம் வீணாகும்.

விலை குறைவு

அதேபோல் சந்தைகளில் கிடைக்கும் மொழிபெயர்ப்பு சாதனங்கள் விலை அதிகமாகவும் செயல் திறன் குறைவாகவும் உள்ளன. இல்லையென்றால், பழைய தொழில்நுட்பத்தை சார்ந்து உள்ளன.

அதை ஒப்பிடும்போது நாங்கள் வடிவமைத்துள்ள செயலி வேகமாகவும், எளிதாகவும், வசதியாகவும், பொருளாதார ரீதியாக விலை குறைவாகவும் இருக்கும். மிக வேகமாக சைகையை மொழி பெயர்க்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த செயலி இந்தியாவில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என்று எவால்க் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரோமன் வைஹோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment