FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, November 30, 2018

சைகையை மொழிபெயர்க்கும் நுண்ணறிவு கம்ப்யூட்டர் செயலி


சென்னை, நவ. 28–
சைகையை மொழி பெயர்க்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு கொண்ட ஸ்மார்ட்போன் செயலியை நெதர்லாந்தை சேர்ந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது.

செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் தாங்கள் கூற விரும்புவதை சைகை மூலம் தெரிவிப்பார்கள். ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த சார்லஸ் மைக்கெல் டி லேபி என்பவர் செவித் திறன் குறைபாடு உள்ளவர்கள் சைகையில் கூறும் விஷயத்தை புரிந்து கொள்ளும் வகையில் சைகை மொழியை உருவாக்கினார்.

இந்நிலையில் செவித்திறன் குறைபாடு, பேச்சு குறைபாடு உள்ளவர்களின் சைகையை மொழிபெயர்க்கும் வகையில் “கூகுள் ட்ரான்ஸ்லாட்டர் ஃபார் தி டெஃப் அண்ட் ம்யூட்” என்னும் செயற்கை நுண்ணறிவை நெதர்லாந்தை சேர்ந்த எவால்க் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

1.8 கோடி பேருக்கு செவித்திறன் குறைபாடு

இந்த செயலியை பயன்படுத்தி தங்களின் ஸ்மார்ட்போன் முன்பு சைகையில் பேசினால் அதை வாக்கியமாகவும், பேச்சாகவும் இந்த செயலி மாற்றிவிடும். இந்த செயலியை ஸ்மார்ட் போன், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களில் பயன்படுத்தலாம்.

தேசிய காது கேளாதோர் சங்கத்தின் தகவல் படி, இந்தியாவில் 1.8 கோடி பேருக்கு செவித்திறன் குறைபாடு உள்ளது. செவித் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது கடினமாகவே இருக்கிறது.

மொழிபெயர்ப்பாளர்களின் சேவை

இதுகுறித்து எவால்க் துணை நிறுவனரும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான கோன்ஸ்டாண்டின் பாண்டார் கூறியதாவது:–

செவித் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு மொழிபெயர்ப்பாளர்களின் சேவை பெரும் தேவையாக உள்ளது. ஆனால், பெரும்பாலான நேரங்களில் மொழிப்பெயர்ப்பாளர்கள் கிடைப்பதில்லை. மேலும் மொழிப்பெயர்ப்பாளர்களுக்கு ஒவ்வொரு முறையும் அதிகமான தொகை கொடுக்க வேண்டியுள்ளது. இதனால், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களிடம் உரையாடுவது என்பது சவாலான விஷயமாக உள்ளது. அவர்களிடம் பென் பேப்பர் மூலம் எழுத்து வடிவில் உரையாடுவது மோசமான யோசனை. இந்த செயல் அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். நேரம் வீணாகும்.

விலை குறைவு

அதேபோல் சந்தைகளில் கிடைக்கும் மொழிபெயர்ப்பு சாதனங்கள் விலை அதிகமாகவும் செயல் திறன் குறைவாகவும் உள்ளன. இல்லையென்றால், பழைய தொழில்நுட்பத்தை சார்ந்து உள்ளன.

அதை ஒப்பிடும்போது நாங்கள் வடிவமைத்துள்ள செயலி வேகமாகவும், எளிதாகவும், வசதியாகவும், பொருளாதார ரீதியாக விலை குறைவாகவும் இருக்கும். மிக வேகமாக சைகையை மொழி பெயர்க்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த செயலி இந்தியாவில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என்று எவால்க் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரோமன் வைஹோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment