FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, November 30, 2018

சைகையை மொழிபெயர்க்கும் நுண்ணறிவு கம்ப்யூட்டர் செயலி


சென்னை, நவ. 28–
சைகையை மொழி பெயர்க்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு கொண்ட ஸ்மார்ட்போன் செயலியை நெதர்லாந்தை சேர்ந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது.

செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் தாங்கள் கூற விரும்புவதை சைகை மூலம் தெரிவிப்பார்கள். ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த சார்லஸ் மைக்கெல் டி லேபி என்பவர் செவித் திறன் குறைபாடு உள்ளவர்கள் சைகையில் கூறும் விஷயத்தை புரிந்து கொள்ளும் வகையில் சைகை மொழியை உருவாக்கினார்.

இந்நிலையில் செவித்திறன் குறைபாடு, பேச்சு குறைபாடு உள்ளவர்களின் சைகையை மொழிபெயர்க்கும் வகையில் “கூகுள் ட்ரான்ஸ்லாட்டர் ஃபார் தி டெஃப் அண்ட் ம்யூட்” என்னும் செயற்கை நுண்ணறிவை நெதர்லாந்தை சேர்ந்த எவால்க் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

1.8 கோடி பேருக்கு செவித்திறன் குறைபாடு

இந்த செயலியை பயன்படுத்தி தங்களின் ஸ்மார்ட்போன் முன்பு சைகையில் பேசினால் அதை வாக்கியமாகவும், பேச்சாகவும் இந்த செயலி மாற்றிவிடும். இந்த செயலியை ஸ்மார்ட் போன், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களில் பயன்படுத்தலாம்.

தேசிய காது கேளாதோர் சங்கத்தின் தகவல் படி, இந்தியாவில் 1.8 கோடி பேருக்கு செவித்திறன் குறைபாடு உள்ளது. செவித் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது கடினமாகவே இருக்கிறது.

மொழிபெயர்ப்பாளர்களின் சேவை

இதுகுறித்து எவால்க் துணை நிறுவனரும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான கோன்ஸ்டாண்டின் பாண்டார் கூறியதாவது:–

செவித் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு மொழிபெயர்ப்பாளர்களின் சேவை பெரும் தேவையாக உள்ளது. ஆனால், பெரும்பாலான நேரங்களில் மொழிப்பெயர்ப்பாளர்கள் கிடைப்பதில்லை. மேலும் மொழிப்பெயர்ப்பாளர்களுக்கு ஒவ்வொரு முறையும் அதிகமான தொகை கொடுக்க வேண்டியுள்ளது. இதனால், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களிடம் உரையாடுவது என்பது சவாலான விஷயமாக உள்ளது. அவர்களிடம் பென் பேப்பர் மூலம் எழுத்து வடிவில் உரையாடுவது மோசமான யோசனை. இந்த செயல் அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். நேரம் வீணாகும்.

விலை குறைவு

அதேபோல் சந்தைகளில் கிடைக்கும் மொழிபெயர்ப்பு சாதனங்கள் விலை அதிகமாகவும் செயல் திறன் குறைவாகவும் உள்ளன. இல்லையென்றால், பழைய தொழில்நுட்பத்தை சார்ந்து உள்ளன.

அதை ஒப்பிடும்போது நாங்கள் வடிவமைத்துள்ள செயலி வேகமாகவும், எளிதாகவும், வசதியாகவும், பொருளாதார ரீதியாக விலை குறைவாகவும் இருக்கும். மிக வேகமாக சைகையை மொழி பெயர்க்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த செயலி இந்தியாவில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என்று எவால்க் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரோமன் வைஹோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment