FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, November 30, 2018

சைகையை மொழிபெயர்க்கும் நுண்ணறிவு கம்ப்யூட்டர் செயலி


சென்னை, நவ. 28–
சைகையை மொழி பெயர்க்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு கொண்ட ஸ்மார்ட்போன் செயலியை நெதர்லாந்தை சேர்ந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது.

செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் தாங்கள் கூற விரும்புவதை சைகை மூலம் தெரிவிப்பார்கள். ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த சார்லஸ் மைக்கெல் டி லேபி என்பவர் செவித் திறன் குறைபாடு உள்ளவர்கள் சைகையில் கூறும் விஷயத்தை புரிந்து கொள்ளும் வகையில் சைகை மொழியை உருவாக்கினார்.

இந்நிலையில் செவித்திறன் குறைபாடு, பேச்சு குறைபாடு உள்ளவர்களின் சைகையை மொழிபெயர்க்கும் வகையில் “கூகுள் ட்ரான்ஸ்லாட்டர் ஃபார் தி டெஃப் அண்ட் ம்யூட்” என்னும் செயற்கை நுண்ணறிவை நெதர்லாந்தை சேர்ந்த எவால்க் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

1.8 கோடி பேருக்கு செவித்திறன் குறைபாடு

இந்த செயலியை பயன்படுத்தி தங்களின் ஸ்மார்ட்போன் முன்பு சைகையில் பேசினால் அதை வாக்கியமாகவும், பேச்சாகவும் இந்த செயலி மாற்றிவிடும். இந்த செயலியை ஸ்மார்ட் போன், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களில் பயன்படுத்தலாம்.

தேசிய காது கேளாதோர் சங்கத்தின் தகவல் படி, இந்தியாவில் 1.8 கோடி பேருக்கு செவித்திறன் குறைபாடு உள்ளது. செவித் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது கடினமாகவே இருக்கிறது.

மொழிபெயர்ப்பாளர்களின் சேவை

இதுகுறித்து எவால்க் துணை நிறுவனரும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான கோன்ஸ்டாண்டின் பாண்டார் கூறியதாவது:–

செவித் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு மொழிபெயர்ப்பாளர்களின் சேவை பெரும் தேவையாக உள்ளது. ஆனால், பெரும்பாலான நேரங்களில் மொழிப்பெயர்ப்பாளர்கள் கிடைப்பதில்லை. மேலும் மொழிப்பெயர்ப்பாளர்களுக்கு ஒவ்வொரு முறையும் அதிகமான தொகை கொடுக்க வேண்டியுள்ளது. இதனால், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களிடம் உரையாடுவது என்பது சவாலான விஷயமாக உள்ளது. அவர்களிடம் பென் பேப்பர் மூலம் எழுத்து வடிவில் உரையாடுவது மோசமான யோசனை. இந்த செயல் அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். நேரம் வீணாகும்.

விலை குறைவு

அதேபோல் சந்தைகளில் கிடைக்கும் மொழிபெயர்ப்பு சாதனங்கள் விலை அதிகமாகவும் செயல் திறன் குறைவாகவும் உள்ளன. இல்லையென்றால், பழைய தொழில்நுட்பத்தை சார்ந்து உள்ளன.

அதை ஒப்பிடும்போது நாங்கள் வடிவமைத்துள்ள செயலி வேகமாகவும், எளிதாகவும், வசதியாகவும், பொருளாதார ரீதியாக விலை குறைவாகவும் இருக்கும். மிக வேகமாக சைகையை மொழி பெயர்க்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த செயலி இந்தியாவில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என்று எவால்க் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரோமன் வைஹோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment