FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, November 29, 2018

திருமண உதவி: மாற்றுத்திறனாளிகள் துறை அழைப்பு

28.11.2018, ஈரோடு: மாற்றுத்திறனாளிகளை, திருமணம் செய்து கொள்வோருக்கு, திருமண நிதியுதவி வழங்கப்படுகிறது.
முற்றிலும் பார்வையற்றோரை, திருமணம் செய்யும் நல்ல நிலையில் உள்ளோர், கை, கால் பாதித்த மாற்றுத்திறனாளியை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ளோர், காது கேளாத, வாய் பேசாத நபரை திருமணம் செய்து கொள்ளும், நல்ல நிலையில் உள்ளவர் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய், எட்டு கிராம் தங்கம் வழங்கப்படும். தம்பதிகளில் ஒருவர், பட்டம் அல்லது பட்டயம் பெற்றிருந்தால், 50 ஆயிரம் ரூபாய், எட்டு கிராம் தங்கம் கிடைக்கும். வருமான வரம்பில்லை. மணப்பெண், 18 வயதுக்கு மேலிருக்க வேண்டும். மேலும் விபரமறிய, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம். www.scd.tn.gov.in இணைய தள முகவரியிலும் பார்க்கலாம். இத்தகவலை ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment