FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, November 16, 2018

சென்னை தேனாம்பேட்டை சிறுமலர் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழாவை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கொண்டாடினார்






தமிழகத்துக்கு புகழ் சேர்க்கும் வேலையை நாம் செய்ய வேண்டும் என்று சிறுமலர் பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவுரை கூறினார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சிறுமலர் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கமல்ஹாசன் பேசியதாவது:

உங்களுக்கு நம்பிக்கையூட்டிய பாடலான நான் சினிமாவில் பாடிய ‘உன்னால் முடியும் தம்பி’ பாடலை இங்கு நடந்த நிகழ்ச்சியில் குழந்தை கள் பாடியதை கேட்கும்போது இன்று எனக்கே நம்பிக்கை வரு கிறது. இந்த குழந்தைகளின் தன்னம் பிக்கை, விடாமுயற்சி ஒருவகை யில் எனக்கு பாடமாக இருந்தது.

பள்ளியின் மாணவன்

நானும் ஒருவகையில் இந்த பள்ளியின் மாணவன் என்பதை சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். இந்த குழந்தை களுக்கு இருக்கும் தன்னம்பிக்கை சாதாரண மனிதர்களுக்கு இருந் தால் இந்தியாவே பல மடங்கு முன்னேறி விடும்.

37 ஆண்டுகளுக்கு முன்பு

இதே பள்ளியில் 37 ஆண்டு களுக்கு முன்பு ‘ராஜபார்வை’ படத்தின் சில காட்சிகள் எடுக்கப் பட்டன. கடந்த 60 ஆண்டுகளாக புகழை எனக்கு போதுமான அளவு கொடுத்து இருக்கிறீர்கள். இனிமேல் தமிழகத்துக்கு புகழ் சேர்க்கும் வேலையை நாம் செய்ய வேண்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசி னார்.

No comments:

Post a Comment