FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, November 9, 2018

செவித்திறன் பாதித்த குழந்தைகளின் அறுவைச் சிகிச்சைக்கு சன் பவுண்டேஷன் ரூ.30.75 லட்சம் நிதி உதவி

09.11.2018
பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாத ஏழைக் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சன் பவுண்டேஷன் ரூ.30.75 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. நலிவடைந்த மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் நோக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாகத் தொடங்கப்பட்ட சன் பவுண்டேஷன் மூலம் ஏழை எளியோருக்கு கல்வி, தரமான இலவச சிகிச்சை, மகளிர் மற்றும் இளைஞர் நலன், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக பல்வேறு அமைப்புகளுக்கு தொடர்ந்து நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாத ஏழைக் குழந்தைகளுக்கு காக்ளியர் இம்பிளான்ட் சிகிச்சை அளிக்க, மெட்ராஸ் இ.என்.டி. ஆராய்ச்சி மையத்திற்கு சன் பவுண்டேஷன் ரூ.30.75 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. இதற்கான காசோலையை, ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குநர் மோகன் காமேஸ்வரன், செயல் இயக்குநர் இந்திரா காமேஸ்வரன் ஆகியோரிடம் சன் பவுண்டேஷன் சார்பில் மல்லிகா மாறன், காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் நேற்று வழங்கினர். சமூக நலத்திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் இதுவரை சுமார் ரூ.54 கோடி நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment