FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, November 9, 2018

செவித்திறன் பாதித்த குழந்தைகளின் அறுவைச் சிகிச்சைக்கு சன் பவுண்டேஷன் ரூ.30.75 லட்சம் நிதி உதவி

09.11.2018
பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாத ஏழைக் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சன் பவுண்டேஷன் ரூ.30.75 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. நலிவடைந்த மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் நோக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாகத் தொடங்கப்பட்ட சன் பவுண்டேஷன் மூலம் ஏழை எளியோருக்கு கல்வி, தரமான இலவச சிகிச்சை, மகளிர் மற்றும் இளைஞர் நலன், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக பல்வேறு அமைப்புகளுக்கு தொடர்ந்து நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாத ஏழைக் குழந்தைகளுக்கு காக்ளியர் இம்பிளான்ட் சிகிச்சை அளிக்க, மெட்ராஸ் இ.என்.டி. ஆராய்ச்சி மையத்திற்கு சன் பவுண்டேஷன் ரூ.30.75 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. இதற்கான காசோலையை, ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குநர் மோகன் காமேஸ்வரன், செயல் இயக்குநர் இந்திரா காமேஸ்வரன் ஆகியோரிடம் சன் பவுண்டேஷன் சார்பில் மல்லிகா மாறன், காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் நேற்று வழங்கினர். சமூக நலத்திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் இதுவரை சுமார் ரூ.54 கோடி நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment