FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Thursday, November 29, 2018

வேலையில்லாத மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

28.11.2018, ஊட்டி,
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பதிவுதாரர்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு கீழ் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600, பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750, பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ.1000 என உதவித்தொகையை பெறுவதற்கு வேலைவாய்ப்பகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். அவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு செய்திருக்க வேண்டும். வருமான உச்ச வரம்பு ஏதும் இல்லை. இந்த பயனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தொடர்ந்து உதவித்தொகை வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளி என்ற முன்னுரிமையினை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் முழுநேர மாணவராக இருக்கக்கூடாது. விண்ணப்பதாரர் அரசு அல்லது தனியார் துறையிலோ அல்லது சுய வேலைவாய்ப்பிலோ ஈடுபடுபவராக இருத்தல் கூடாது.

விண்ணப்பதாரர் பள்ளி அல்லது கல்லூரி கல்வியினை முழுவதுமாக தமிழகத்தில் முடித்திருக்க வேண்டும். இல்லையெனில் பெற்றோர் அல்லது கணவன் அல்லது மனைவி அல்லது பாதுகாவலர் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருத்தல் வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியின் கிளையில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும். எனவே தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளில் இதுவரை விண்ணப்பம் பெறாதவர்கள் உடனடியாக விண்ணப்பத்தை பெற்று முழு விவரங்களுடன் பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கொடுத்து, அரசு வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகையை பெற்று பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment