FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Thursday, November 29, 2018

வேலையில்லாத மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

28.11.2018, ஊட்டி,
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பதிவுதாரர்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு கீழ் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600, பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750, பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ.1000 என உதவித்தொகையை பெறுவதற்கு வேலைவாய்ப்பகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். அவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு செய்திருக்க வேண்டும். வருமான உச்ச வரம்பு ஏதும் இல்லை. இந்த பயனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தொடர்ந்து உதவித்தொகை வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளி என்ற முன்னுரிமையினை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் முழுநேர மாணவராக இருக்கக்கூடாது. விண்ணப்பதாரர் அரசு அல்லது தனியார் துறையிலோ அல்லது சுய வேலைவாய்ப்பிலோ ஈடுபடுபவராக இருத்தல் கூடாது.

விண்ணப்பதாரர் பள்ளி அல்லது கல்லூரி கல்வியினை முழுவதுமாக தமிழகத்தில் முடித்திருக்க வேண்டும். இல்லையெனில் பெற்றோர் அல்லது கணவன் அல்லது மனைவி அல்லது பாதுகாவலர் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருத்தல் வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியின் கிளையில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும். எனவே தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளில் இதுவரை விண்ணப்பம் பெறாதவர்கள் உடனடியாக விண்ணப்பத்தை பெற்று முழு விவரங்களுடன் பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கொடுத்து, அரசு வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகையை பெற்று பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment