FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, November 9, 2018

மோசடி விதிகளை எரிப்போம்: மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சங்கம் எச்சரிக்கை

09.11.2018
சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு எதிராக பிறப்பித்த மோசடி விதிகளை மாற்றி அமைக்காவிட்டால், டிசம்பர் 3 ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை துக்க நாளாக அனுசரித்து அந்த மோசடி விதிகளை எரிப்போம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பினர்,

"ஐ.நா. உரிமை உடன்படுக்கையை உண்மையாக்குவதற்கு, 2016 மாற்றுத்திறனாளிக்களுக்காக கொண்டுவரப்பட்ட சட்டத்தை உருவாக்குவதில் தமிழக அரசு பல திருத்தங்களை செய்துள்ளது.

அச்சட்டத்தை உண்மையாக்காத வண்ணம் அதில் பல விதிகளை மாற்றுத்திறனாளிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் இயற்றியுள்ளது. இது தமிழ்நாடு அரசின் மோசடியாக தான் மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பு சங்கம் கருதுகிறது.
இதனை உடனடியாக திருத்தம் செய்ய ஒரு குழு அமைக்க வேண்டும். அந்தக் குழுவில் மாற்றுத்திறனாளிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரக்கூடிய சங்கங்களின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறும் வண்ணமாக தமிழக அரசு செயல்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அரசாணை 151-ன் படி இரண்டு ஆண்டுகள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

மேலும் லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளனர். இதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுடைய ஆணையர் என்பவர் யார் கட்டுப்பாட்டின் கீழும் வராமல் ஒரு சுதந்திரம் பெற்ற அமைப்பாக, ஒரு நீதியரசருக்கு உடைய தன்மைகளோடு இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.

இதை மாற்றி இத்துறையின் தலைவரும், பிரச்னை குறித்து விசாரிக்கும் ஆணையரும் ஒருவரே என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
அப்படி நிறைவேற்றாவிட்டால் டிசம்பர் 3 ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பு சங்கம் குறைந்தபட்சம் பத்தாயிரம் மாற்றுத் திறனாளிகளை சென்னையில் ஒன்று சேர்த்து இந்த மோசடி விதிகளை எரிப்போம்" என்று எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment