FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, November 9, 2018

மோசடி விதிகளை எரிப்போம்: மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சங்கம் எச்சரிக்கை

09.11.2018
சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு எதிராக பிறப்பித்த மோசடி விதிகளை மாற்றி அமைக்காவிட்டால், டிசம்பர் 3 ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை துக்க நாளாக அனுசரித்து அந்த மோசடி விதிகளை எரிப்போம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பினர்,

"ஐ.நா. உரிமை உடன்படுக்கையை உண்மையாக்குவதற்கு, 2016 மாற்றுத்திறனாளிக்களுக்காக கொண்டுவரப்பட்ட சட்டத்தை உருவாக்குவதில் தமிழக அரசு பல திருத்தங்களை செய்துள்ளது.

அச்சட்டத்தை உண்மையாக்காத வண்ணம் அதில் பல விதிகளை மாற்றுத்திறனாளிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் இயற்றியுள்ளது. இது தமிழ்நாடு அரசின் மோசடியாக தான் மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பு சங்கம் கருதுகிறது.
இதனை உடனடியாக திருத்தம் செய்ய ஒரு குழு அமைக்க வேண்டும். அந்தக் குழுவில் மாற்றுத்திறனாளிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரக்கூடிய சங்கங்களின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறும் வண்ணமாக தமிழக அரசு செயல்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அரசாணை 151-ன் படி இரண்டு ஆண்டுகள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

மேலும் லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளனர். இதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுடைய ஆணையர் என்பவர் யார் கட்டுப்பாட்டின் கீழும் வராமல் ஒரு சுதந்திரம் பெற்ற அமைப்பாக, ஒரு நீதியரசருக்கு உடைய தன்மைகளோடு இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.

இதை மாற்றி இத்துறையின் தலைவரும், பிரச்னை குறித்து விசாரிக்கும் ஆணையரும் ஒருவரே என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
அப்படி நிறைவேற்றாவிட்டால் டிசம்பர் 3 ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பு சங்கம் குறைந்தபட்சம் பத்தாயிரம் மாற்றுத் திறனாளிகளை சென்னையில் ஒன்று சேர்த்து இந்த மோசடி விதிகளை எரிப்போம்" என்று எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment