FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, November 9, 2018

மோசடி விதிகளை எரிப்போம்: மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சங்கம் எச்சரிக்கை

09.11.2018
சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு எதிராக பிறப்பித்த மோசடி விதிகளை மாற்றி அமைக்காவிட்டால், டிசம்பர் 3 ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை துக்க நாளாக அனுசரித்து அந்த மோசடி விதிகளை எரிப்போம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பினர்,

"ஐ.நா. உரிமை உடன்படுக்கையை உண்மையாக்குவதற்கு, 2016 மாற்றுத்திறனாளிக்களுக்காக கொண்டுவரப்பட்ட சட்டத்தை உருவாக்குவதில் தமிழக அரசு பல திருத்தங்களை செய்துள்ளது.

அச்சட்டத்தை உண்மையாக்காத வண்ணம் அதில் பல விதிகளை மாற்றுத்திறனாளிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் இயற்றியுள்ளது. இது தமிழ்நாடு அரசின் மோசடியாக தான் மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பு சங்கம் கருதுகிறது.
இதனை உடனடியாக திருத்தம் செய்ய ஒரு குழு அமைக்க வேண்டும். அந்தக் குழுவில் மாற்றுத்திறனாளிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரக்கூடிய சங்கங்களின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறும் வண்ணமாக தமிழக அரசு செயல்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அரசாணை 151-ன் படி இரண்டு ஆண்டுகள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

மேலும் லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளனர். இதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுடைய ஆணையர் என்பவர் யார் கட்டுப்பாட்டின் கீழும் வராமல் ஒரு சுதந்திரம் பெற்ற அமைப்பாக, ஒரு நீதியரசருக்கு உடைய தன்மைகளோடு இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.

இதை மாற்றி இத்துறையின் தலைவரும், பிரச்னை குறித்து விசாரிக்கும் ஆணையரும் ஒருவரே என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
அப்படி நிறைவேற்றாவிட்டால் டிசம்பர் 3 ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பு சங்கம் குறைந்தபட்சம் பத்தாயிரம் மாற்றுத் திறனாளிகளை சென்னையில் ஒன்று சேர்த்து இந்த மோசடி விதிகளை எரிப்போம்" என்று எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment