FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, November 9, 2018

மோசடி விதிகளை எரிப்போம்: மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சங்கம் எச்சரிக்கை

09.11.2018
சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு எதிராக பிறப்பித்த மோசடி விதிகளை மாற்றி அமைக்காவிட்டால், டிசம்பர் 3 ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை துக்க நாளாக அனுசரித்து அந்த மோசடி விதிகளை எரிப்போம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பினர்,

"ஐ.நா. உரிமை உடன்படுக்கையை உண்மையாக்குவதற்கு, 2016 மாற்றுத்திறனாளிக்களுக்காக கொண்டுவரப்பட்ட சட்டத்தை உருவாக்குவதில் தமிழக அரசு பல திருத்தங்களை செய்துள்ளது.

அச்சட்டத்தை உண்மையாக்காத வண்ணம் அதில் பல விதிகளை மாற்றுத்திறனாளிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் இயற்றியுள்ளது. இது தமிழ்நாடு அரசின் மோசடியாக தான் மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பு சங்கம் கருதுகிறது.
இதனை உடனடியாக திருத்தம் செய்ய ஒரு குழு அமைக்க வேண்டும். அந்தக் குழுவில் மாற்றுத்திறனாளிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரக்கூடிய சங்கங்களின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறும் வண்ணமாக தமிழக அரசு செயல்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அரசாணை 151-ன் படி இரண்டு ஆண்டுகள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

மேலும் லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளனர். இதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுடைய ஆணையர் என்பவர் யார் கட்டுப்பாட்டின் கீழும் வராமல் ஒரு சுதந்திரம் பெற்ற அமைப்பாக, ஒரு நீதியரசருக்கு உடைய தன்மைகளோடு இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.

இதை மாற்றி இத்துறையின் தலைவரும், பிரச்னை குறித்து விசாரிக்கும் ஆணையரும் ஒருவரே என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
அப்படி நிறைவேற்றாவிட்டால் டிசம்பர் 3 ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பு சங்கம் குறைந்தபட்சம் பத்தாயிரம் மாற்றுத் திறனாளிகளை சென்னையில் ஒன்று சேர்த்து இந்த மோசடி விதிகளை எரிப்போம்" என்று எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment