FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Monday, November 5, 2018

சென்னையில் 51 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த கவர்னர்

05, 2018 04:00 AM
சென்னை கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் 51 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு நேற்று இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த திருமண விழாவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தினார். 51 திருமண ஜோடிகளையும் தனித்தனியாக அட்சதை தூவி வாழ்த்தினார்.
சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாநில ஆணையர் ப.மகேஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். விழாவில், ஸ்ரீ கீதாபவன் நிர்வாக அறங்காவலர் அசோக்குமார் கோயல், அறங்காவலர் சிவக்குமார் கோயங்கா, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் தலைவர் பா.சிம்மச்சந்திரன், செயலாளர் த.பொன்னுசாமி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தமிழகம் முழுவதும் இருந்து 111 மாற்றுத்திறனாளி ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு, மருத்துவ சோதனை மற்றும் பல்வேறு கட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டு அதில் 53 திருமண ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 2 ஜோடிகள் நேற்றைய திருமண விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை.

திருமண ஜோடிகளுக்கு கீதாபவன் அறக்கட்டளை மற்றும் மாற்றுத்திறனாளி கூட்டமைப்பு சார்பில் 2 கிராம் தங்கத் தாலி, வெள்ளி மெட்டி, முகூர்த்த பட்டு வேட்டி, சேலை, பூஜை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பாய், தலையணை, போர்வை உள்பட 51 வகை பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன.

விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:- உலக அளவில் 100 கோடிக்கு அதிகமானோர் ஏதோ ஒரு வகையில் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். அதாவது 6 பேரில் ஒருவர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 11 லட்சத்து 79 ஆயிரம் பேர் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். மாநில அளவில் இது 1.63 சதவீதமும், தேசிய அளவில் 4.4 சதவீதமும் ஆகும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. மாற்றுத்திறனாளிகளின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக தமிழக அரசு 1993-ல் தனி இயக்குனரகத்தை தொடங்கியதுடன், அவர்களுக்கு என தனி கொள்கை திட்டத்தை 1994-ல் அறிவித்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் சிறந்த மாநிலமாக கடந்த 2013-14-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது வழங்கப்பட்டது.

பிறரின் நலனை கருத்தில் கொண்டு வாழ்வதே மனித தன்மையாகும். சுயநலத்தோடு வாழ்பவர்களால் அவர்களுக்கு மட்டுமே மகிழ்ச்சியும், சந்தோஷமும் கிடைக்கும். ஆனால், சமூகத்தில் உள்ள பெரும்பாலானோர் பிறருக்கு உதவி செய்ய முன் வந்தால் உலகமே சொர்க்கமாக மாறும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment