FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, November 5, 2018

சென்னையில் 51 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த கவர்னர்

05, 2018 04:00 AM
சென்னை கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் 51 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு நேற்று இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த திருமண விழாவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தினார். 51 திருமண ஜோடிகளையும் தனித்தனியாக அட்சதை தூவி வாழ்த்தினார்.
சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாநில ஆணையர் ப.மகேஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். விழாவில், ஸ்ரீ கீதாபவன் நிர்வாக அறங்காவலர் அசோக்குமார் கோயல், அறங்காவலர் சிவக்குமார் கோயங்கா, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் தலைவர் பா.சிம்மச்சந்திரன், செயலாளர் த.பொன்னுசாமி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தமிழகம் முழுவதும் இருந்து 111 மாற்றுத்திறனாளி ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு, மருத்துவ சோதனை மற்றும் பல்வேறு கட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டு அதில் 53 திருமண ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 2 ஜோடிகள் நேற்றைய திருமண விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை.

திருமண ஜோடிகளுக்கு கீதாபவன் அறக்கட்டளை மற்றும் மாற்றுத்திறனாளி கூட்டமைப்பு சார்பில் 2 கிராம் தங்கத் தாலி, வெள்ளி மெட்டி, முகூர்த்த பட்டு வேட்டி, சேலை, பூஜை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பாய், தலையணை, போர்வை உள்பட 51 வகை பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன.

விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:- உலக அளவில் 100 கோடிக்கு அதிகமானோர் ஏதோ ஒரு வகையில் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். அதாவது 6 பேரில் ஒருவர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 11 லட்சத்து 79 ஆயிரம் பேர் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். மாநில அளவில் இது 1.63 சதவீதமும், தேசிய அளவில் 4.4 சதவீதமும் ஆகும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. மாற்றுத்திறனாளிகளின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக தமிழக அரசு 1993-ல் தனி இயக்குனரகத்தை தொடங்கியதுடன், அவர்களுக்கு என தனி கொள்கை திட்டத்தை 1994-ல் அறிவித்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் சிறந்த மாநிலமாக கடந்த 2013-14-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது வழங்கப்பட்டது.

பிறரின் நலனை கருத்தில் கொண்டு வாழ்வதே மனித தன்மையாகும். சுயநலத்தோடு வாழ்பவர்களால் அவர்களுக்கு மட்டுமே மகிழ்ச்சியும், சந்தோஷமும் கிடைக்கும். ஆனால், சமூகத்தில் உள்ள பெரும்பாலானோர் பிறருக்கு உதவி செய்ய முன் வந்தால் உலகமே சொர்க்கமாக மாறும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment