FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, November 5, 2018

சென்னையில் 51 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த கவர்னர்

05, 2018 04:00 AM
சென்னை கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் 51 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு நேற்று இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த திருமண விழாவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தினார். 51 திருமண ஜோடிகளையும் தனித்தனியாக அட்சதை தூவி வாழ்த்தினார்.
சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாநில ஆணையர் ப.மகேஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். விழாவில், ஸ்ரீ கீதாபவன் நிர்வாக அறங்காவலர் அசோக்குமார் கோயல், அறங்காவலர் சிவக்குமார் கோயங்கா, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் தலைவர் பா.சிம்மச்சந்திரன், செயலாளர் த.பொன்னுசாமி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தமிழகம் முழுவதும் இருந்து 111 மாற்றுத்திறனாளி ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு, மருத்துவ சோதனை மற்றும் பல்வேறு கட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டு அதில் 53 திருமண ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 2 ஜோடிகள் நேற்றைய திருமண விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை.

திருமண ஜோடிகளுக்கு கீதாபவன் அறக்கட்டளை மற்றும் மாற்றுத்திறனாளி கூட்டமைப்பு சார்பில் 2 கிராம் தங்கத் தாலி, வெள்ளி மெட்டி, முகூர்த்த பட்டு வேட்டி, சேலை, பூஜை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பாய், தலையணை, போர்வை உள்பட 51 வகை பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன.

விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:- உலக அளவில் 100 கோடிக்கு அதிகமானோர் ஏதோ ஒரு வகையில் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். அதாவது 6 பேரில் ஒருவர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 11 லட்சத்து 79 ஆயிரம் பேர் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். மாநில அளவில் இது 1.63 சதவீதமும், தேசிய அளவில் 4.4 சதவீதமும் ஆகும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. மாற்றுத்திறனாளிகளின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக தமிழக அரசு 1993-ல் தனி இயக்குனரகத்தை தொடங்கியதுடன், அவர்களுக்கு என தனி கொள்கை திட்டத்தை 1994-ல் அறிவித்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் சிறந்த மாநிலமாக கடந்த 2013-14-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது வழங்கப்பட்டது.

பிறரின் நலனை கருத்தில் கொண்டு வாழ்வதே மனித தன்மையாகும். சுயநலத்தோடு வாழ்பவர்களால் அவர்களுக்கு மட்டுமே மகிழ்ச்சியும், சந்தோஷமும் கிடைக்கும். ஆனால், சமூகத்தில் உள்ள பெரும்பாலானோர் பிறருக்கு உதவி செய்ய முன் வந்தால் உலகமே சொர்க்கமாக மாறும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment