FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, November 30, 2018

குறும்படத்திற்கு சர்வதேச விருது

29.11.2018, சென்னை: தனியார் நிறுவனம் தயாரித்த குறும்படத்திற்கு, சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த, கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் என்ற தனியார் நிறுவனம், 'வித்தியாசமான மொழி' என்ற தலைப்பில், குறும்படம் ஒன்றை தயாரித்தது.இந்த படத்தின், கதை கருவை, பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான இயக்குனர், லதா கிருஷ்ணா, எழுதி இயக்கினார்.இப்படம், எம்.ஜி.ஆர்., இல்லம் மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர், தங்கள் வாழ்வில் முன்னேறுவதை பற்றி, விரிவாக எடுத்துரைக்கிறது.இது, 'கேன்ஸ் கார்ப்பரேட்' ஊடக விருதுகள் போட்டியில் இடம் பெற்றது. இதில், சர்வதேச அளவில், 2,000 குறும்படங்கள் இடம் பெற்றன.அதில், இரண்டாவது விருதான, 'சில்வர் டால்பின்' விருதை, இக்குறும்படம் தட்டிச் சென்றது. லண்டனைச் சேர்ந்த தாமஸ் பால் மார்ட்டின் என்பவர் இயக்கிய, 'எஸ்கேப் ரோபோ' எனும் திரைப்படத்திற்கு, 'கோல்டு டால்பின்' விருது வழங்கப்பட்டது.லதா கிருஷ்ணா, பிரபல தொலைக்காட்சி இயக்குனர் மட்டுமின்றி, பாரம்பரிய நாட்டியக் கலைஞரும் ஆவார். இவர் தான் இயக்கிய, 'இறைவன் ஆடும்போது' எனும், 'டிவி' தொடருக்கும், 'சாவித்திரி' எனும் குறும்படத்திற்கும், சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment