FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, November 30, 2018

குறும்படத்திற்கு சர்வதேச விருது

29.11.2018, சென்னை: தனியார் நிறுவனம் தயாரித்த குறும்படத்திற்கு, சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த, கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் என்ற தனியார் நிறுவனம், 'வித்தியாசமான மொழி' என்ற தலைப்பில், குறும்படம் ஒன்றை தயாரித்தது.இந்த படத்தின், கதை கருவை, பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான இயக்குனர், லதா கிருஷ்ணா, எழுதி இயக்கினார்.இப்படம், எம்.ஜி.ஆர்., இல்லம் மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர், தங்கள் வாழ்வில் முன்னேறுவதை பற்றி, விரிவாக எடுத்துரைக்கிறது.இது, 'கேன்ஸ் கார்ப்பரேட்' ஊடக விருதுகள் போட்டியில் இடம் பெற்றது. இதில், சர்வதேச அளவில், 2,000 குறும்படங்கள் இடம் பெற்றன.அதில், இரண்டாவது விருதான, 'சில்வர் டால்பின்' விருதை, இக்குறும்படம் தட்டிச் சென்றது. லண்டனைச் சேர்ந்த தாமஸ் பால் மார்ட்டின் என்பவர் இயக்கிய, 'எஸ்கேப் ரோபோ' எனும் திரைப்படத்திற்கு, 'கோல்டு டால்பின்' விருது வழங்கப்பட்டது.லதா கிருஷ்ணா, பிரபல தொலைக்காட்சி இயக்குனர் மட்டுமின்றி, பாரம்பரிய நாட்டியக் கலைஞரும் ஆவார். இவர் தான் இயக்கிய, 'இறைவன் ஆடும்போது' எனும், 'டிவி' தொடருக்கும், 'சாவித்திரி' எனும் குறும்படத்திற்கும், சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment