FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, November 24, 2018

இன்றை கூகுள் டூடுலில் இருப்பவர் யார் தெரியுமா..?

24.11.2018
காது கேளாதோருக்கான சைகை மொழியை உருவாக்கிய சார்லஸ் மைக்கல் திலேப்பே-வின் 306 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று கூகுள் நிறுவனம் அவருக்கு டூடுள் வெளியிட்டுள்ளது.

காது கேளாதோர் மற்றவர்களின் உதடு அசைவை வைத்து தான் அவர்கள் என்ன கூறுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு வருகிறார்கள். ஆனால், பிறமொழியில் பேசும் போது தாய்மொழிக்காரர்களுக்கு அதனை புரிந்து கொள்வது என்பது மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியது. இந்த பிரச்னையை போக்கவே காது கேளாதோருக்காக பிரத்யேக சைகை மொழி உருவாக்கப்பட்டது.

சார்லஸ் மைக்கல் திலேப்பே என்பவர் தான் முதன்முதலில் காதுகேளாதோருக்காக சைகை மொழியை உருவாக்க முயன்றார். பின்னாளில் அவரே சைகை மொழியின் தந்தை என்றும் அழைக்கப்பட்டார். இவர் 1712ம் ஆண்டு வெர்சைல்ஸில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு கட்டிடக்கலைஞர் ஆவார். இந்த சந்தர்ப்பத்தில் ஒரு முறை குடிசைப்பகுதிக்கு சார்லஸ் சென்றார். அப்போது காது கேட்கும் திறன் இல்லாத இரண்டு சகோதரிகள், ஒருவருக்கொருவர் சைகை மொழியில் பேசிக்கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த சார்லஸ்க்கு ஒரு யோசனை தோன்றியது. இந்த சைகை மொழியையே நாம் ஏன் காது கேளாத மற்றவருக்கும் கொண்டு செல்லக்கூடாது என்று நினைத்தார். பின்னாளில், இதுபோன்ற சைகை மொழிக்காகவே தனியாக பள்ளி ஒன்றையும் தொடங்கினார். காது கேளாதோர் அங்கு பயில பல சலுகைகளையும் வழங்கினார்.

இதனையடுத்து 1789ம் ஆண்டு சார்லஸ் தனது 77ம் வயதில் காலமானார். இன்று மைக்கல் சார்லஸ்க்கு 306 வது பிறந்தநாள். இவரை கெளரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் இவருக்கென பிரத்யேகமாக கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது



No comments:

Post a Comment