FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Saturday, November 24, 2018

இன்றை கூகுள் டூடுலில் இருப்பவர் யார் தெரியுமா..?

24.11.2018
காது கேளாதோருக்கான சைகை மொழியை உருவாக்கிய சார்லஸ் மைக்கல் திலேப்பே-வின் 306 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று கூகுள் நிறுவனம் அவருக்கு டூடுள் வெளியிட்டுள்ளது.

காது கேளாதோர் மற்றவர்களின் உதடு அசைவை வைத்து தான் அவர்கள் என்ன கூறுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு வருகிறார்கள். ஆனால், பிறமொழியில் பேசும் போது தாய்மொழிக்காரர்களுக்கு அதனை புரிந்து கொள்வது என்பது மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியது. இந்த பிரச்னையை போக்கவே காது கேளாதோருக்காக பிரத்யேக சைகை மொழி உருவாக்கப்பட்டது.

சார்லஸ் மைக்கல் திலேப்பே என்பவர் தான் முதன்முதலில் காதுகேளாதோருக்காக சைகை மொழியை உருவாக்க முயன்றார். பின்னாளில் அவரே சைகை மொழியின் தந்தை என்றும் அழைக்கப்பட்டார். இவர் 1712ம் ஆண்டு வெர்சைல்ஸில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு கட்டிடக்கலைஞர் ஆவார். இந்த சந்தர்ப்பத்தில் ஒரு முறை குடிசைப்பகுதிக்கு சார்லஸ் சென்றார். அப்போது காது கேட்கும் திறன் இல்லாத இரண்டு சகோதரிகள், ஒருவருக்கொருவர் சைகை மொழியில் பேசிக்கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த சார்லஸ்க்கு ஒரு யோசனை தோன்றியது. இந்த சைகை மொழியையே நாம் ஏன் காது கேளாத மற்றவருக்கும் கொண்டு செல்லக்கூடாது என்று நினைத்தார். பின்னாளில், இதுபோன்ற சைகை மொழிக்காகவே தனியாக பள்ளி ஒன்றையும் தொடங்கினார். காது கேளாதோர் அங்கு பயில பல சலுகைகளையும் வழங்கினார்.

இதனையடுத்து 1789ம் ஆண்டு சார்லஸ் தனது 77ம் வயதில் காலமானார். இன்று மைக்கல் சார்லஸ்க்கு 306 வது பிறந்தநாள். இவரை கெளரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் இவருக்கென பிரத்யேகமாக கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது



No comments:

Post a Comment