FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, November 24, 2018

இன்றை கூகுள் டூடுலில் இருப்பவர் யார் தெரியுமா..?

24.11.2018
காது கேளாதோருக்கான சைகை மொழியை உருவாக்கிய சார்லஸ் மைக்கல் திலேப்பே-வின் 306 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று கூகுள் நிறுவனம் அவருக்கு டூடுள் வெளியிட்டுள்ளது.

காது கேளாதோர் மற்றவர்களின் உதடு அசைவை வைத்து தான் அவர்கள் என்ன கூறுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு வருகிறார்கள். ஆனால், பிறமொழியில் பேசும் போது தாய்மொழிக்காரர்களுக்கு அதனை புரிந்து கொள்வது என்பது மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியது. இந்த பிரச்னையை போக்கவே காது கேளாதோருக்காக பிரத்யேக சைகை மொழி உருவாக்கப்பட்டது.

சார்லஸ் மைக்கல் திலேப்பே என்பவர் தான் முதன்முதலில் காதுகேளாதோருக்காக சைகை மொழியை உருவாக்க முயன்றார். பின்னாளில் அவரே சைகை மொழியின் தந்தை என்றும் அழைக்கப்பட்டார். இவர் 1712ம் ஆண்டு வெர்சைல்ஸில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு கட்டிடக்கலைஞர் ஆவார். இந்த சந்தர்ப்பத்தில் ஒரு முறை குடிசைப்பகுதிக்கு சார்லஸ் சென்றார். அப்போது காது கேட்கும் திறன் இல்லாத இரண்டு சகோதரிகள், ஒருவருக்கொருவர் சைகை மொழியில் பேசிக்கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த சார்லஸ்க்கு ஒரு யோசனை தோன்றியது. இந்த சைகை மொழியையே நாம் ஏன் காது கேளாத மற்றவருக்கும் கொண்டு செல்லக்கூடாது என்று நினைத்தார். பின்னாளில், இதுபோன்ற சைகை மொழிக்காகவே தனியாக பள்ளி ஒன்றையும் தொடங்கினார். காது கேளாதோர் அங்கு பயில பல சலுகைகளையும் வழங்கினார்.

இதனையடுத்து 1789ம் ஆண்டு சார்லஸ் தனது 77ம் வயதில் காலமானார். இன்று மைக்கல் சார்லஸ்க்கு 306 வது பிறந்தநாள். இவரை கெளரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் இவருக்கென பிரத்யேகமாக கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது



No comments:

Post a Comment