FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, November 29, 2018

புயலால் பாதித்த மாவட்டங்களில்  மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? அறிக்கை தர ஆணையரகம் உத்தரவு

28.11.2018, சென்னை
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாற்றுத்திற னாளிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்கள் ‘கஜா’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயலால் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இப்பகுதிகளில் லட்சக்கணக்கான மரங்கள் சரிந்துள்ளன. மக்கள் வசித்து வந்த குடியிருப்புகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன. இப்பகுதிகளில் புயலால் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்பட்ட சேதங்களை கண்டறிய மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், நடவடிக்கைகளை எடுக்க மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “புயலால் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம். சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கான தேவை ஏற்பட்டால் உடனடியாக நடத்தப்படும்” என்றார்.

No comments:

Post a Comment