FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, November 29, 2018

புயலால் பாதித்த மாவட்டங்களில்  மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? அறிக்கை தர ஆணையரகம் உத்தரவு

28.11.2018, சென்னை
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாற்றுத்திற னாளிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்கள் ‘கஜா’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயலால் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இப்பகுதிகளில் லட்சக்கணக்கான மரங்கள் சரிந்துள்ளன. மக்கள் வசித்து வந்த குடியிருப்புகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன. இப்பகுதிகளில் புயலால் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்பட்ட சேதங்களை கண்டறிய மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், நடவடிக்கைகளை எடுக்க மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “புயலால் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம். சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கான தேவை ஏற்பட்டால் உடனடியாக நடத்தப்படும்” என்றார்.

No comments:

Post a Comment