FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Sunday, November 11, 2018

`ஆசிய பசிபிக் பேட்மின்டன் போட்டியில் மூன்று பதக்கங்கள்!’ - மதுரை காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி மாணவி சாதனை

10.11.2018
ஆசிய பசிபிக் சர்வதேச பேட்மின்டன் போட்டியில் காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி மாணவி ஜெர்லின் அனிகா மூன்று பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளார் .

ஜெர்லின் அனிகா என்ற மாற்றுத்திறனாளி மாணவி காது கேளாமை மற்றும் வாய் பேச முடியாத குறைபாடு உடையவர் . இவர் பேட்மின்டன் போட்டிகளின் பொதுப்பிரிவில் பங்கேற்று பல பரிசுகளை வென்று மாற்றுத்திறனாளிகளுக்கு பெருமை தேடித்தந்துள்ளார். தொடர்ந்து பேட்மின்டன் போட்டியில் ஜொலித்த ஜெர்லின் அனிகா, தற்போது ஆசிய பசிபிக் இறகுப் பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றுள்ளார். காதுகேளாத மற்றும் வாய்பேச முடியாதவர்களுக்கான சர்வதேச அளவிலான போட்டி மலேசியாவில் கடந்த சமீபத்தில் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன. இந்திய அணி சார்பாக 12 வீரர், வீராங்களைகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து ஜெர்லின் அனிகா கலந்துகொண்டார். ஜூனியர் சிங்கிள்ஸ் மற்றும் டபுள்ஸ் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் , பெண்களுக்கான டபுள்ஸ் பிரிவில் வெண்கலப் பதக்கமும் என 3 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இதையடுத்து, மாணவி ஜெர்லின் அனிகாவை தமிழ்நாடு காதுகேளாத விளையாட்டு சங்க நிர்வாகிகள், பயிற்சியாளர் சரவணன், ரஞ்சித் பராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment