FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Sunday, November 11, 2018

`ஆசிய பசிபிக் பேட்மின்டன் போட்டியில் மூன்று பதக்கங்கள்!’ - மதுரை காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி மாணவி சாதனை

10.11.2018
ஆசிய பசிபிக் சர்வதேச பேட்மின்டன் போட்டியில் காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி மாணவி ஜெர்லின் அனிகா மூன்று பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளார் .

ஜெர்லின் அனிகா என்ற மாற்றுத்திறனாளி மாணவி காது கேளாமை மற்றும் வாய் பேச முடியாத குறைபாடு உடையவர் . இவர் பேட்மின்டன் போட்டிகளின் பொதுப்பிரிவில் பங்கேற்று பல பரிசுகளை வென்று மாற்றுத்திறனாளிகளுக்கு பெருமை தேடித்தந்துள்ளார். தொடர்ந்து பேட்மின்டன் போட்டியில் ஜொலித்த ஜெர்லின் அனிகா, தற்போது ஆசிய பசிபிக் இறகுப் பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றுள்ளார். காதுகேளாத மற்றும் வாய்பேச முடியாதவர்களுக்கான சர்வதேச அளவிலான போட்டி மலேசியாவில் கடந்த சமீபத்தில் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன. இந்திய அணி சார்பாக 12 வீரர், வீராங்களைகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து ஜெர்லின் அனிகா கலந்துகொண்டார். ஜூனியர் சிங்கிள்ஸ் மற்றும் டபுள்ஸ் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் , பெண்களுக்கான டபுள்ஸ் பிரிவில் வெண்கலப் பதக்கமும் என 3 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இதையடுத்து, மாணவி ஜெர்லின் அனிகாவை தமிழ்நாடு காதுகேளாத விளையாட்டு சங்க நிர்வாகிகள், பயிற்சியாளர் சரவணன், ரஞ்சித் பராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment