FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, November 11, 2018

`ஆசிய பசிபிக் பேட்மின்டன் போட்டியில் மூன்று பதக்கங்கள்!’ - மதுரை காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி மாணவி சாதனை

10.11.2018
ஆசிய பசிபிக் சர்வதேச பேட்மின்டன் போட்டியில் காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி மாணவி ஜெர்லின் அனிகா மூன்று பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளார் .

ஜெர்லின் அனிகா என்ற மாற்றுத்திறனாளி மாணவி காது கேளாமை மற்றும் வாய் பேச முடியாத குறைபாடு உடையவர் . இவர் பேட்மின்டன் போட்டிகளின் பொதுப்பிரிவில் பங்கேற்று பல பரிசுகளை வென்று மாற்றுத்திறனாளிகளுக்கு பெருமை தேடித்தந்துள்ளார். தொடர்ந்து பேட்மின்டன் போட்டியில் ஜொலித்த ஜெர்லின் அனிகா, தற்போது ஆசிய பசிபிக் இறகுப் பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றுள்ளார். காதுகேளாத மற்றும் வாய்பேச முடியாதவர்களுக்கான சர்வதேச அளவிலான போட்டி மலேசியாவில் கடந்த சமீபத்தில் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன. இந்திய அணி சார்பாக 12 வீரர், வீராங்களைகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து ஜெர்லின் அனிகா கலந்துகொண்டார். ஜூனியர் சிங்கிள்ஸ் மற்றும் டபுள்ஸ் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் , பெண்களுக்கான டபுள்ஸ் பிரிவில் வெண்கலப் பதக்கமும் என 3 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இதையடுத்து, மாணவி ஜெர்லின் அனிகாவை தமிழ்நாடு காதுகேளாத விளையாட்டு சங்க நிர்வாகிகள், பயிற்சியாளர் சரவணன், ரஞ்சித் பராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment