FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, November 9, 2018

மாற்றுத் திறனாளி இளையோருக்கான சர்வதேச தகவல் தொழில்நுட்ப சவால் – 2018 : இன்று தொடக்கம்!

09.11.2018
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்று திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை நவம்பர் 9 முதல் நவம்பர் 11 வரை 2018-ஆம் ஆண்டிற்கான, மாற்றுத் திறனாளி இளையோருக்கு சர்வதேச தகவல் தொழில்நுட்ப சவால் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆண்டு, இந்தப் போட்டியை, இந்தியா, கொரிய அரசு மற்றும் சர்வதேச மறுவாழ்வு அமைப்புடன் இணைந்து நடத்துகிறது.

இந்தப் போட்டி, மாற்றுத்திறனாளி இளைஞர்கள் தங்களின் சவால்களை தாண்டி, திறனை வளர்க்க உதவும் வகையில் அமையும். ஐக்கிய நாடுகளின் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமையை அமல்படுத்தும் சட்டத்தைப் பரப்பும் விதமாக இந்நிகழ்ச்சி உள்ளது.

இ-டூல், இ-லைப் மேப் சேலஞ்ச், இ-கிரியேடிவ், இ-கன்டன்ட் ஆகிய பிரிவுகளில் இந்த போட்டி நடத்தப்படும். இந்தப் போட்டியில் பார்வைத் திறன் குறைபாடு, செவித்திறன் குறைபாடு, கை, கால் இயக்கத்திறன் குறைபாடு, அறிவுத்திறன் குறைபாடு கொண்ட 13 வயது முதல் 21 வயது வரை உள்ள சுமார் 100 இளைஞர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். இந்தோனேஷியா, சீனா, வியட்நாம், மலேசியா, தாய்லாந்து, இலங்கை, வங்காளதேசம், நேபாளம், மங்கோலியா, கம்போடியா, லாவோஸ், பிலிப்பைன்ஸ், கொரியா, கஜகஸ்தான், கிரிகிஸ்தான், ஐக்கிய அரேபிய நாடுகள், இந்தியா, இங்கிலாந்து ஆகிய 18 நாடுகளிலிருந்து இளைஞர்கள் பங்கேற்கவுள்ளனர். கொரியாவின் சர்வதேச மறுவாழ்வு அமைப்பின் பிரதிநிதிகளும் மற்றும் முக்கிய பிரமுகர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.

இந்தப் போட்டியை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தவர்சந்த் கெலாட் இன்று (நவம்பர் 9, 2018 ) துவக்கி வைக்கவுள்ளார். வெற்றிப் பெறும் போட்டியாளர்களுக்கு நவம்பர் 11, 2018 அன்று அமைச்சர் விருதுகளை வழங்குவார்.

No comments:

Post a Comment