FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, November 9, 2018

மாற்றுத் திறனாளி இளையோருக்கான சர்வதேச தகவல் தொழில்நுட்ப சவால் – 2018 : இன்று தொடக்கம்!

09.11.2018
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்று திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை நவம்பர் 9 முதல் நவம்பர் 11 வரை 2018-ஆம் ஆண்டிற்கான, மாற்றுத் திறனாளி இளையோருக்கு சர்வதேச தகவல் தொழில்நுட்ப சவால் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆண்டு, இந்தப் போட்டியை, இந்தியா, கொரிய அரசு மற்றும் சர்வதேச மறுவாழ்வு அமைப்புடன் இணைந்து நடத்துகிறது.

இந்தப் போட்டி, மாற்றுத்திறனாளி இளைஞர்கள் தங்களின் சவால்களை தாண்டி, திறனை வளர்க்க உதவும் வகையில் அமையும். ஐக்கிய நாடுகளின் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமையை அமல்படுத்தும் சட்டத்தைப் பரப்பும் விதமாக இந்நிகழ்ச்சி உள்ளது.

இ-டூல், இ-லைப் மேப் சேலஞ்ச், இ-கிரியேடிவ், இ-கன்டன்ட் ஆகிய பிரிவுகளில் இந்த போட்டி நடத்தப்படும். இந்தப் போட்டியில் பார்வைத் திறன் குறைபாடு, செவித்திறன் குறைபாடு, கை, கால் இயக்கத்திறன் குறைபாடு, அறிவுத்திறன் குறைபாடு கொண்ட 13 வயது முதல் 21 வயது வரை உள்ள சுமார் 100 இளைஞர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். இந்தோனேஷியா, சீனா, வியட்நாம், மலேசியா, தாய்லாந்து, இலங்கை, வங்காளதேசம், நேபாளம், மங்கோலியா, கம்போடியா, லாவோஸ், பிலிப்பைன்ஸ், கொரியா, கஜகஸ்தான், கிரிகிஸ்தான், ஐக்கிய அரேபிய நாடுகள், இந்தியா, இங்கிலாந்து ஆகிய 18 நாடுகளிலிருந்து இளைஞர்கள் பங்கேற்கவுள்ளனர். கொரியாவின் சர்வதேச மறுவாழ்வு அமைப்பின் பிரதிநிதிகளும் மற்றும் முக்கிய பிரமுகர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.

இந்தப் போட்டியை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தவர்சந்த் கெலாட் இன்று (நவம்பர் 9, 2018 ) துவக்கி வைக்கவுள்ளார். வெற்றிப் பெறும் போட்டியாளர்களுக்கு நவம்பர் 11, 2018 அன்று அமைச்சர் விருதுகளை வழங்குவார்.

No comments:

Post a Comment