FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, September 28, 2025

Sign language expert to help cops probe rape of mute, hearing-impaired girl



28.09.2025
Jaipur: The city police have enlisted a sign language expert to assist in the investigation after a 20-year-old hearing-impaired and mute girl was allegedly raped.

The incident came to light when her family filed a First Information Report (FIR) at the Jamdoli police station Thursday.

According to the FIR, the family reported that an unknown man raped their daughter, who is visually impaired in addition to being hearing-impaired and mute. The complaint states that approximately two weeks ago, the accused initiated contact through a wrong-number video call and communicated with the girl using sign language.

Police officials said the suspect subsequently had several more video calls with her. On Sept 20, he allegedly lured her to a market under the false pretence of a meeting. Later, he used another video call to trick her into meeting him again. This time, he took her on his bike to a hotel.

The FIR alleges that once they were alone in the hotel, the accused forcibly raped the girl and threatened to kill her if she resisted. He also warned her not to disclose the incident to anyone.

Terrified by the threats, the survivor remained silent for several days before finally confiding in her family.

Upon learning of the ordeal, the family immediately approached the police and filed a case against the unidentified suspect.

"The police have registered a case and initiated an investigation based on the mobile number used by the accused," said an official. "We are taking the help of a sign language expert to properly communicate with the survivor and record her detailed statement."




‘I am deaf and mute’: Differently-abled Zomato delivery partner inspires internet with his dedication


28.09.2025
Stuti, the customer, posted a screenshot on X showing a message she received before her order arrived.


A heartwarming Zomato delivery story is winning hearts online after a customer shared her experience with a differently-abled partner. Stuti, the customer, posted a screenshot on X showing a message she received before her order arrived.

The system notification had informed her that the delivery partner was both speech- and hearing-impaired, suggesting she use the chat option instead of calling. Soon after, the partner himself wrote: “Hello. I am deaf. I can’t listen and mute. I will message you, see please.”

Stuti captioned the post, “Things men do for their family!” and social media users quickly flooded it with praise, applauding not just the delivery partner’s dedication but also Zomato’s inclusive approach to its workforce.

In the comments, a user wrote, “the best part is he is putting effort rather than making excuses to make his life better even after such challenges.”

Another user shared, “Last week, a delivery guy approached my door. He had a leg amputated and was on crutches. I told him he should’ve called me at the gate so I could have come do

wn to pick up the order, since our housing society is large, it’s a long walk from the gate to the door, and security doesn’t allow vehicles inside. @zomato should consider mentioning delivery partners’ physical conditions in the app, so that customers can be supportive if they wish.”

A third person shared, “This is why I always tip well. Never know what someone is going through to bring you that food.” A fourth individual suggested, “There should be a feature in the app for specially-abled persons. I’m guessing that every time they pick up an order, they face the hassle of messaging the customer. This should be automated by default.”


Sign language training for bus drivers, conductors to support deaf and mute passengers

28.09.2025
Prayagraj: For the welfare of persons with disabilities the state authorities are set to hold Indian sign language classes for roadways bus drivers and conductors. This initiative aims to facilitate communication for deaf and mute passengers traveling on roadways buses.

With International Sign Language Week being observed across the state from Sept 22 to Sept 28, the Uttar Pradesh State Road Transport Corporation is organising special programmes at various depots and training institutes.

Ravindra Kumar, Regional Manager of the Prayagraj Roadways Region, said, "On the directives of the state govt, the region's bus drivers and conductors will be trained in basic sign language for the deaf and dumb."

He added that this training will be provided to conductors and drivers of the Uttar Pradesh Transport Corporation at Prayagraj, Leader Road, Civil Lines, Mirzapur, Badshahpur, Pratapgarh, Manjhanpur, and Lalganj depots in the Prayagraj region.

Experts nominated by the All Uttar Pradesh Association for the Deaf, Lucknow (AUPAD), will provide training in basic sign language. Aman Saxena, General Secretary of the All Uttar Pradesh Association for the Deaf, said that three-hour training session will be held at the Rajapur Roadways Workshop in Prayagraj on Sept 28, International Deaf Day. Drivers and conductors will be trained on the sign language they should use to communicate with disabled people (deaf and mute) when boarding buses. They will also share basic information about various aspects of sensitivity towards disabled people.



கரூர் துயரம்.. வாய்விட்டு சொல்லி அழ கூட முடியல.! "பச்சிளம் குழந்தையை இழந்து பரிதவித்து நிற்கும் வாய் பேச முடியாத தாய்". நெஞ்சை உலுக்கும் வீடியோ.!!




28.09.2025
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் பரப்புரை மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 9 குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர்.

இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். இறந்தவர்களின் உடல்கள் அனைத்தும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு பெண்ணின் உடல் மட்டும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கரூரில் 1 3/4 வயது குழந்தையான துருவ் விஷ்ணுவை அவரது பாட்டின் கரூரில் விஜய்

அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் தாய்க்கு காதும் கேட்காது வாய் பேசவும் முடியாது மாற்றுத்திறனாளி. தன் குழந்தையை பறிகொடுத்த வேதனையில் அந்த தாய் கதறி அழ கூட முடியாமல் உறைந்து போய் நிற்கும் காட்சிகள் பார்ப்போரின் நெஞ்சை உருக்குலைய வைத்துள்ளது. மேலும் அழக்கூட முடியாமல் அந்த தாய் வேதனையில் தவிக்கும் காட்சி அனைவரது நெஞ்சையும் உலுக்கியுள்ளது.



"காது கேட்காத அம்மாவுக்கு மிஷின் வாங்கி கொடுத்தேன்" - புதுமைப் பெண் திட்டம் பற்றி மாணவி நெகிழ்ச்சி!



25.09.2025 
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' - கல்வி எழுச்சியின் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக அரசின் திட்டங்கள் விளக்கப்பட்டதுடன், பயன்பெற்ற மாணவர்கள் நேரடியாக தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தனர்.

அந்தவகையில் புதுமைப் பெண் திட்டத்திநால் பலனடந்தது பற்றி பேசிய ரம்யா என்ற மாணவி அரங்கில் அனைவரையும் நெகிழவைத்தார். "நான் நினைக்கிற எல்லாமே என் வாழ்க்கையில நடந்துட்டு இருக்கு. நான் தஞ்சாவூர் மாவட்டம் கோவிலடி என்ற கிராமத்தில் இருந்து வரேன். நான் திருச்சி மாவட்டத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கிறேன் என்னுடைய அப்பா ஒரு கூலி விவசாயி. அவங்களால என்ன உயர்கல்வி படிக்க வைக்க முடியல. அதனால 'வேணாமா படிக்காத' அப்படின்னு சொல்லி விட்டுட்டாங்க.

அந்த கேப்ல நான் கொஞ்சம் வேலை பார்த்துட்டு இருந்தேன். கொஞ்ச சேவிங்ஸ் பண்ணி வச்சிருந்தேன். எதுக்காவது யூஸ் ஆகும்னு. எங்க மேம் ஒரு நாள் போன் அடிச்சு, 'ஃபீஸ் தானே கட்டிக்கலாம். வந்து காலேஜ் ஜாயின் பண்ணி விடுங்க' அப்படின்னு சொல்லி என்னை படிக்க வைக்க சொன்னாங்க.

என்ன காலேஜ்ல சேர்த்து விட்டு எனக்கு பீஸ் கட்டினாங்க. மத்தபடி என்னோட எல்லா எஜூகேஷன் செலவும் இந்த திட்டம் மூலமாக தான் செய்றேன். எனக்கு என்ன தேவையோ அது எல்லாத்தையும் வாங்கிக்கிறேன். இதுக்கு ரொம்ப நன்றி.

இந்த திட்டம் எனக்கு இன்னொரு ஹெல்ப் பண்ணியிருக்கு. லைஃப்ல எல்லாரும் சொல்லுவாங்க அப்பா அம்மாவை எந்த இடத்திலும் விடக்கூடாதுன்னு, நான் நிறைய இடத்துல என் அப்பா அம்மா கஷ்டப்படுவதை கண்ணில் பார்த்துட்டேன்.

எங்க அம்மாவுக்கு காது கேட்காது. அதனால எல்லாரும் இந்த நிலைமையில என்ன படிக்க வைக்கணுமான்னு பேசினாங்க. என் அம்மாவுக்கு நான் போன மாசம் ஒரு காது கேட்கிற மிஷின் வாங்கி கொடுத்தேன். அந்த மிஷின்னால இப்ப எங்க அம்மா கேட்டுட்டு இருக்காங்க. அது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றார்.

மாணவி சொல்ல சொல்ல தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு மொழிபெயர்த்து அவரை நெகிழவைத்தார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.

மேலும் பேசிய மாணவி, "இந்த ஒரு திட்டத்தினால, எனக்கு எங்க அம்மாவுக்கு மிஷின் வாங்கி கொடுக்க முடிஞ்சதை நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு. எல்லோரும் படி படின்னு சொல்றீங்க, கண்டிப்பா படிக்கிறேன். நான் படித்து இதே மாதிரி அம்மாவுக்கு கண்டிப்பா காது ஆபரேஷன் பண்ணுவேன். எங்க அப்பாவுக்கும் நிறைய உடல்நிலை பிரச்னைகள் இருக்கு. அதுக்கு நிறைய கடன் வாங்கி இருக்காங்க. நான் படிச்சு கண்டிப்பா எங்க அப்பா கடன் எல்லாத்தையும் அடைப்பேன்." என்றா

மேலும் தன் பெற்றோரை நோக்கி, "நான் உங்களை எப்போதும் விட்டிட மாட்டேன். நிறையபேர் என் அம்மாவை ஹர்ட் பண்ணினாங்க. அதனாலதான் அவங்களுக்கு மிஷின் வாங்கிக்கொடுக்கத் தோனினது. நான் படிச்சு அவங்களுக்கு ஆப்பரேஷன் செய்வேன். அப்பா வாங்கின கடனை அடைப்பேன்" என்றார்.



இன்று சைகை மொழி தினம்: குரலற்றவர்களின் மொழியாக மாறி தன்னையே அர்ப்பணித்த மாமனிதர்!



செப்டம்பர் 23 சர்வதேச சைகை மொழி தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நூபுர் பரத்வாஜின் அர்ப்பணிப்பு, காது கேளாத, வாய் பேச முடியாதவர்களின் வாழ்க்கையில் ஒளி விளக்காக இருந்து வருகிறது.

ஜெய்பூர்: வாய் பேச முடியாத, காது கேளாத மனிதர்களின் சிரமங்கள் சொல்லிமாளாது, தினசரி அவர்களின் வாழ்க்கையே போராட்டம் நிறைந்த ஒன்றாக இருக்கும். ஆனால், அவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் தீக்குச்சியாக இருக்கிறார் நூபுர் பரத்வாஜ். யார் இவர்? இவருக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு? அவர்கள் வாழ்க்கையில் நூபுர் பரத்வாஜ் ஏற்படுத்திய மாற்றம் என்ன என்பதை அறிய ஒரு தசாப்தம் பின்னோக்கி செல்ல வேண்டும்.

சட்டக்கல்லூரி மாணவியான நூபுர் பரத்வாஜ், தனது பள்ளி காலத்திலேயே காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தைகளின் கஷ்டத்தை நேரில் பார்த்து அறிந்தவர். தனது 10வது வயதில் 5ஆம் வகுப்பு மாணவியாக பள்ளியில் படித்துக்கொண்டிருந்த அவர், இத்தகைய குறைபாடுடன் இருந்த சக மாணவியுடன் நட்பில் இணைந்தார். நூபுர் பரத்வாஜ் சிறுவயதில் இருந்தே, அவருடைய அப்பா சைகை மொழியில் இத்தகைய குறைபாடு உள்ளவர்களோடு பேசியதை கவனித்ததாலோ என்னவோ, அவருக்கு தனது தோழி என்ன பேசுகிறாள் என்பதை ஓரளவு ஊகிக்க முடிந்தது.

பள்ளி பருவத்தில் சக தோழியுடன் பேசிய போது, அவர்களின் கஷ்டத்தை ஓரளவு புரிந்துகொண்ட அவர், கடந்த 8 ஆண்டுகளாக அவர்களுக்கு எந்த வகையிலாவது உதவ வேண்டும் என்ற எண்ணத்தை தனது மனதில் ஏற்றிக்கொண்டார். அதற்காக, அவர்கள் பேசுவதை மொழிபெயர்க்க ஆரம்பித்த அவர், நாளடைவில் அவர்களின் சைகை மொழியை புரிந்துகொள்ளும் அளவுக்கு தேர்ச்சி பெற்றார்.

இதுதொடர்பாக பேசும் நூபுர் பரத்வாஜ், "காது கேளாத, வாய் பேச முடியாத முடியாக மக்களுக்காக இயங்க வேண்டும் என்ற எண்ணம், சிறு வயதில் இருந்தே என் மனதில் இருந்து வந்தது. அதற்கான வாய்ப்பும் உருவான நிலையில், அவர்களின் சைகை மொழியினை திறம்பட கற்றுக்கொண்டேன். எங்கே இத்தகைய குறைபாடு உடையவர்கள் இருந்தாலும், அவர்களுக்கு என்னாலான உதவிகளை செய்ய வேண்டும் என்று மனதில் முடிவெடுத்துக்கொண்டேன். அவர்களுக்காக தொடர்ந்து இயங்க தொடங்கினேன். அதுதான் என் வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட திருப்புமுனையாக அமைந்தது" என்றார்.


நூபுரின் தந்தை மனோஜ் பரத்வாஜும் காது கேளாத வாய் பேச முடியாதவர்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இதன் ஒருபகுதியாக தனது மகள் நூபுர் பரத்வாஜ் பெயரிலேயே அறக்கட்டளையை நிறுவியுள்ளார்.

அப்பாவின் இந்த உணர்வு அர்ப்பணிப்பு குறித்து பேசிய நூபுர் பரத்வாஜ், "அப்பா எனக்கு காது கேளாத குழந்தைகளின் போராட்டங்கள், அவர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பாகுபாடு, சமூகம் அவர்களை புறக்கணிக்கும் விதம் குறித்து சிறுவயது முதலே எனக்கு எடுத்துக்கூறியுள்ளார். சிறுவயதில் இருந்தே அப்பாவின் மூலம் இந்த கஷ்டத்தை கேட்டதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படியேனும் உதவி செய்ய வேண்டும் எண்ணம் எனக்குள் தோன்றியது. அதை தற்போது என்னுடைய படிப்பு மூலம், அவர்களின் மொழியினை புரிந்தவள் என்ற அடிப்படையிலும் செய்து வருகிறேன்" என்றார்.

சட்ட படிப்பு மூலம் காது கேளாத, வாய் பேச முடியாதவர்களுக்கு எப்படியான உதவியை செய்து வருகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "ஒரு சிறுமி ஒருவருக்கு உறவினர் ஒருவரால் உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார். அந்த பெண்ணுக்கு என்ன நடந்தது என்பதை கூட சொல்லத் தெரியவில்லை. இதனால் இந்த குற்றம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை கூட போலீசாரால் பதிவு செய்ய முடியவில்லை. சம்பவம் தொடர்பாக நான் தலையிட்டதால், அந்த சிறுமி தனக்கு நேர்ந்ததை என்னிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் அந்த சிறுமிக்கு சட்ட உதவிகள் கிடைத்து" என்றார்.

செப்டம்பர் 23 சர்வதேச சைகை மொழி தினமாக கொண்டாடப்பட்டு வரும் இந்த வேளையில், நூபுர் பரத்வாஜ் போன்றோரின் அர்ப்பணிப்பு காது கேளாத, வாய் பேச முடியாதவர்களின் வாழ்க்கையில் ஒளி விளக்காக இருந்து வருகிறது என்றால் அது மிகையல்ல.


சைகை மொழியின் முக்கியத்துவம் மற்றும் வரலாறு: நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை!



மனிதன், தனது தேவைகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த பயன்படுத்திய முதல் மொழி, சைகைதான். சைகை மொழி என்பது பலவித கை வடிவங்கள், கை அசைவுகள் மற்றும் முக பாவனைகளுடன் பேசப்படுவது. உலகில் பல்வேறு மொழிகள் உள்ளன. இதைப்போன்றே, சைகை மொழிகளிலும் இந்திய சைகை மொழி, அமெரிக்க சைகை மொழி, பிரிட்டிஷ் சைகை மொழி என பல வகைகள் உள்ளன.

அமெரிக்க சைகை மொழியில் ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களையும் ஒரே கையால் சைகை செய்கின்றனர். மேலும், 8,000க்கும் மேற்பட்ட பல கை சைகைகளையும் பயன்படுத்துகின்றனர். பிரிட்டிஷ் மற்றும் இந்திய சைகை மொழியைப் பயன்படுத்தும் மக்கள், இரு கைகளையும் பயன்படுத்துகின்றனர். எனவே, சைகை மொழிகளுக்கும் பல இலக்கணங்கள் உண்டு. இந்திய சைகை மொழியைக் கொண்டு, இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள காது கேளாத மற்றும் பேசும் திறனற்ற மக்களும் எளிமையாக தங்களது தேவைகளை வெளிப்படுத்த முடிவதாக ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

உலகில் பல சைகை மொழிகளை பலர் அறிமுகப்படுத்தி உள்ளனர். எனினும், சைகை மொழியின் தந்தை என்று அழைக்கப்படுபவர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த காது கேளாதோரின் தந்தை என்றழைக்கப்படும் சார்லஸ் மைக்கேல் திலேப்பின். காது கேளாதோர் மற்றும் பேசும் திறனற்றோர் பிறரின் உதடு அசைவுகளைக் கொண்டு, அவர்கள் பேசுவதை கணித்தனர். ஆனால், அவர்களின் உணர்வுகளை பிறர் புரிந்து கொள்வதற்கென ஒரு மொழியை முதன் முதலில் உருவாக்கியவர் சார்லஸ் மைக்கேல் திலேப்பின். அதுவே, சைகை மொழி எனப்பட்டது.

மூளை நரம்பியல் கோளாறுகளால் ஏற்படும், 'குளோபல் அபேசியா' போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் சைகை மொழி பயன்படுகிறது. 1951 செப்டம்பர் 23ல் உலக காது கேளாதோர் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நாளை அங்கீகரிக்கும் விதமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை செப்டம்பர் 23ம் தேதியை சர்வதேச சைகை மொழிகள் தினமாக அறிவித்தது. உலகம் முழுவதும் சைகை மொழியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது முதன் முதலில் 2018ல் கொண்டாடப்பட்டது. சர்வதேச சைகை மொழிகளின் தினமானது, உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 23 அன்று, சர்வதேச காது கேளாதோர் வாரத்துடன் இணைந்து கொண்டாடப்படுகிறது.

தற்போது, சைகை மொழிக்கான பல புதிய வடிவங்களும், செயலிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் பல, 'டிவி'யில், காது கேளாதோருக்கென வாசிக்கப்படும் செய்திகளில் பயன்படுத்தப்படுகின்றன. சைகை மொழிகளின் அவசியத்தை உணர்ந்து மத்திய அரசு 2005ம் ஆண்டு சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தை ஏற்படுத்தியது. அதன் மூலம் தற்போது 10,000 சைகை மொழி வார்த்தைகள் வழக்கில் உள்ளன.

2022ம் ஆண்டின் சைகை மொழி தினத்தன்று சைகை மொழி இந்திய பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டது. சைகை மொழியை இந்திய அரசியல் அமைப்பின் அதிகாரபூர்வ 23ம் மொழியாக சேர்க்க நடிகர் ரன் வீர் சிங் வலியுறுத்தி வருகிறார். இந்திய நீதிமன்றங்களில் இதுவரை சைகை மொழியில் யாரும் வாதாடியதில்லை. இதற்கு நீதிமன்ற வரலாற்றில் முதன்முதலாக 2023 செப்டம்பர் 22ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அனுமதி அளித்தார் உச்ச நீதிமன்ற, தலைமை நீதிபதி சந்திரசூட். நீதிமன்றங்களில் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக சைகை மொழி, மொழி பெயர்ப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில், மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் சாரா சன்னியை சைகை மொழி, மொழிபெயர்ப்பாளராக நியமித்து வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டது.

சைகை மொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால், காது கேளாதோர் மற்றும் பேசும் திறனற்றோரின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு துணை புரியும். எனவே, சர்வதேச சைகை மொழிகள் தினத்தை விழிப்புணர்வுடன் கொண்டாடுவோம்.






காணொளி: டெஃப் புக்வேவ் - 'இங்கு காது கேளாதோர் தயக்கமின்றி பேசலாம்'





23 செப்டெம்பர் 2025

காது கேளாதோரை ஒருங்கிணைக்கும் சங்கத்தின் செயல்பாடுகள், அனைவரையும் ஈர்த்துள்ளன. பெங்களூருவில்தான் 'டெஃப் புக்வேவ்' முதல் அமர்வை நடத்தியது.

2025 மார்ச் மாதத்தில் தொடங்கிய இந்தக் குழு, சமூக வலைத்தளங்களில் விரைவில் பிரபலமடைந்தது.

அவர்களின் அமர்வுகள் சைகை மொழியில் நடக்கின்றன, ஆனால் கேட்கும் திறன் உள்ளவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் மொழிபெயர்ப்பாளர்கள் கூட இருப்பார்கள்.

நாட்டின் கலாசார, வரலாற்று மற்றும் புவியியல் பன்முகத்தன்மை காரணமாக இந்திய சைகை மொழி மற்ற சைகை மொழிகளிலிருந்து வேறுபடுகிறது.

இது இந்தியாவில் காது கேளாதோர் கலாசாரத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்.

'டெஃப் புக்வேவ்' எப்படி செயல்படுகிறது?

- காது கேளாதோர் சமூகத்தின் உதவியுடன், பர்மீத்தின் குழுவினர் தேதியையும் இடத்தையும் தேர்வு செய்கிறார்கள்.

காது கேளாதவர்களுக்கும், கேட்கும் திறன் உள்ளவர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களை ஏற்பாடு செய்கிறார்கள்.

பர்மீத் ஆங்கிலக் கதைகள் அல்லது கவிதைகளைக் கொண்ட புத்தகங்களைத் தேர்வு செய்கிறார்.

- இறுதியாக, அவர் பங்கேற்பாளர்களுடன் உரையாடல் மற்றும் விவாதங்களில் ஈடுபடுகிறார்.

சமீபத்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட காது கேளாத மற்றும் கேட்கும் குறைபாடுடையவர்கள் உள்ளனர்.

நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டாலும் சைகை மொழி பற்றிய பரந்த அளவிலான அறிவு பற்றாக்குறை உள்ளது.

கேட்கும் திறன் உள்ளவர்களுடன் தொடர்புகொள்ளவும் உரையாடவும் மிகக் குறைவான தளங்களே உள்ளதாக காது கேளாதோர் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு


TN Rights திட்டத்தில் 1,096 காலிப்பணியிடங்கள்; 10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை - தேர்வு, விண்ணப்பக் கட்டணம் கிடையாது



தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் "TN Rights" திட்டத்தில் பணியாற்ற தேவையான ஆட்களை தேர்வு செய்ய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 9 பதவிகளுக்கு 1,096 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
தேர்வில்லாமல் தமிழ்நாடு அரசின் வேலை வேண்டுமா? TN Rights திட்டத்தில் 1,096 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நல்ல சம்பளத்தில் ஏராளமான காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல், உளவியல், ஆக்குபேஷனல் தெரபிஸ்ட், சிறப்பு கல்வியாளர், பிசியோதெரபிஸ்ட், சமூகப் பணி, பொது நிர்வாகம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

TN Rights திட்ட வேலைவாய்ப்பு 2025
தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகத்தின் மூலம் உலக வங்கியின் நிதி உதவியுடன் TN Rights திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் மாவட்ட திட்ட செயல்பாட்டு அலகு (DPIU) மற்றும் துணை பிரிவு மையம் (SDC) ஆகிய பிரிவுகளில் ஒப்பந்த அடிப்படையில் 9 பதவிகளில் மொத்தம் 1,096 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

பதவியின் பெயர்                                                 காலிப்பணியிடங்கள்
பிளாக் ஒருங்கிணைப்பாளர்                                                 250
மறுவாழ்வு மற்றும் வழக்கு மேலாளர்                                 94
உளவியலாளர் / ஆலோசகர்                                                     94
சிறப்புக் கல்வியாளர்                                                                 94
ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்                                                       94
கண் மருத்துவர்/ Mobility பயிற்றுவிப்பாளர்                        94
ஜூனியர் நிர்வாக ஆதரவாளர்                                                94
பல்நோக்கு பணியாளர் (தூய்மை மற்றும் பாதுகாப்பு) 188
அலுவலக உதவியாளர் (SDC)                                                     94
மொத்தம்                                                                                         1096

தகுதிகள்
பிளாக் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மறுவாழ்வு அறிவியல், பிசியோதெரபிஸ்ட், ஆக்குபேஷனல் தெரபி, பேச்சு தெரபி, சிறப்பு கல்வி, உளவியல், சமூகப் பணி மற்றும் பொது நிர்வாகம் ஆகியவற்றில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்புடன் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மறுவாழ்வு மற்றும் வழக்கு மேலாளர் பதவிக்கு மறுவாழ்வு சாரந்த படிப்பு, பிசியோதெரபிஸ்ட், ஆக்குபேஷனல் தெரபி, பேச்சு தெரபி, சிறப்பு கல்வி, உளவியல் ஆகியவற்றில் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் 3 ஆண்டு அனுபவம் தேவை.

உளவியலாளர் / ஆலோசகர் பதவிக்கு உளவியலில் முதுகலை பட்டப்படிப்புடன் 3 ஆண்டு அனுபவம் தேவை.

சிறப்புக் கல்வியாளர் பதவிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கல்வியியலில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்புடன் 3-5 ஆண்டு அனுபவம் தேவை. மறுவாழ்வு கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் பதவிக்கு அதற்கான இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு மற்றும் 3-5 ஆண்டு அனுபவம் தேவை.
கண் மருத்துவர்/ Mobility பயிற்றுவிப்பாளர் பதவிக்கு ஆப்டோமெட்ரி-யில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு மற்றும் 3-5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.

ஜூனியர் நிர்வாக ஆதரவாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்புடன் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் அனுபவம் தேவை.

பல்நோக்கு பணியாளர் பதவிக்கு 10 அல்லது 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1-2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் பதவிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்
பிளாக் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மாதம் ரூ.30,000
மறுவாழ்வு மற்றும் வழக்கு மேலாளர் பதவிக்கு மாதம் ரூ.35,000
உளவியலாளர் / ஆலோசகர் பதவிக்கு மாதம் ரூ.35,000
சிறப்புக் கல்வியாளர் பதவிக்கு மாதம் ரூ.35,000
ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் பதவிக்கு மாதம் ரூ. 35,000
கண் மருத்துவர்/ Mobility பயிற்றுவிப்பாளர் பதவிக்கு மாதம் ரூ.35,000
ஜூனியர் நிர்வாக ஆதரவாளர் பதவிக்கு மாதம் ரூ15,000
பல்நோக்கு பணியாளர் பதவிக்கு மாதம் ரூ.12,000
அலுவலக உதவியாளர் பதவிக்கு மாதம் ரூ.12,000

நேர்காணல் மூலம் தேர்வு
தமிழ்நாடு அரசின் இத்திட்டத்தில் பணியாற்ற விரும்புகிறவர்கள் எழுத்துத் தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை. தகுதியானவர்கள் கல்வித்தகுதி, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுச் செய்யப்பட்டவர்கள் முதலில் 11 மாதங்கள் பணியமர்த்தப்படுவார்கள். தேவை மற்றும் திறன் அடிப்படையில் பணிக்காலம் நீட்டிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை
1000 அதிகமான உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://tnrightsjobs.tnmhr.com/ என்ற இணையதளத்தில் நேரடியாக ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதற்கான இணைப்பை https://www.scd.tn.gov.in/ என்ற மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணையதளம் வழியாகவும் பெறலாம். விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. இதற்கான அறிவிப்பு செப்டம்பர் 24-ம் தேதி வெளியான நிலையில், அக்டோபர் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

படி 1 : மேல் குறிப்பிட்டுள்ள இணையதளத்திற்கு செல்லவும்.
படி 2 : Continue என்பதை கிளிக் செய்யவும். "Proceed to Online Application" என்பதை கிளிக் செய்யவும்.
படி 3 : மொபைல் எண் மற்றும் இமெயில் ஐடி கொண்டு பதிவு செய்யவும்.
படி 4 : ஆன்லைன் இணையதளத்தை நிரப்பி தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
படி 5 : விண்ணப்பத்தை சரிபார்த்து Submit கொடுக்கவும்.

முக்கிய நாட்கள்

விவரம்                                                         தேதிகள்
விண்ணப்பிக்க கடைசி நாள்             14.10.2025
நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும்
தமிழ்நாடு அரசு துறையில் பணி செய்ய விரும்புகிறவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாகும். டிஎன் ரைட்ஸ் திட்டத்தில் உள்ள பணி வாய்ப்பிற்கு மாநில அளவில் இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.


Tuesday, September 23, 2025

KFC India Launches English Comprehension Program for Speech and Hearing-Impaired Team Members



New Delhi, September 23, 2025: On the International Day of Sign Languages, KFC India announced the launch of a written English comprehension program for its speech and hearing-impaired (SHI) team members. The initiative, developed in partnership with Atypical Advantage, aims to train 100% of KFC India’s SHI workforce in essential written communication skills by 2026.

The program is designed as a 50-hour virtual training module covering grammar, email writing, and reading comprehension. It addresses challenges faced by SHI employees who primarily use Indian Sign Language (ISL) but require English for workplace communication.

Speaking about the initiative, Aman Lal, Chief People Officer, KFC India, said, “KFC Kshamata reiterates our commitment towards feeding people’s potential and building a more inclusive world. Communication is key to bridging the ability gap & while we continue to focus on raising awareness for Indian Sign Language, this year, we’re also looking at it from the lens of written communication. The written English comprehension program will lower barriers to communication & equip our SHI teams with tools to navigate workplace communication independently. Atypical Advantage are front-runners in creating pathways for persons with disabilities, and have been instrumental in shaping this program. With an aim to train 100% SHI team members by 2026, it’s a powerful step towards fostering inclusion at scale.”

Vineet Saraiwala, Founder & CEO, Atypical Advantage, added, “At Atypical Advantage, we’ve always believed that true inclusion begins when persons with disabilities are equipped with the tools to thrive independently. This partnership with KFC India is a landmark step towards unlocking the potential of speech and hearing-impaired talent by building their confidence in written English — a critical workplace skill. It is incredible to witness KFC’s inclusion initiatives, where on one hand they are expanding the reach of Indian Sign Language, and on the other, strengthening English skills among speech and hearing-impaired team members. This dual approach is a powerful example of how inclusion can bridge the communication divide.”

The initiative builds on KFC India’s Kshamata program, under which the company has doubled the number of SHI team members and Special KFC outlets in the past five years. The brand also introduced mandatory sign language training for all employees in 2024, with over 18,000 staff trained in ISL to date.



Sign Language Day 2025: Government launches training, e-content to support deaf students



22.09.2025
New Delhi: The Indian Sign Language Research and Training Centre (ISLRTC) is set to celebrate Sign Language Day 2025 on Tuesday with a host of initiatives aimed at advancing accessibility and inclusion for the deaf community.

A central event, themed “No human rights without sign language rights”, will mark the occasion. Union Social Justice Minister Virendra Kumar will attend as chief guest, while Minister of State B. L. Verma will be the guest of honour, according to an official statement.

A key highlight of the celebration will be the launch of a post-graduate diploma in Indian Sign Language (ISL) interpretation and teaching, alongside a six-month online ISL training programme. The ISLRTC will also roll out 3,189 ISL e-content videos—the largest repository of its kind to date—to enhance digital learning and support deaf education.

Another major development is the integration of ISL into the Project Inclusion App, aimed at aiding mainstream classroom learning environments and making them more inclusive.

Furthering its commitment to educational access, ISLRTC will introduce 100 new STEM terms in ISL, an English teaching programme in collaboration with TEACH, and ISL versions of 18 National Book Trust titles to broaden the availability of literature in sign language.

The event will also feature the release of ISLRTC’s bi-annual newsletter and new teaching-learning materials for both interpreter and teacher training programmes.

Additionally, the winners of the 8th National Indian Sign Language Competition, held across 13 categories, will be felicitated during the celebration, the statement added.

மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு



21.09.2025
ஊட்டி; ஊட்டி காது கேளாதோர் மற்றும் வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கான, அரசு உயர்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் சார்பில், 'நம்பிக்கையூட்டும் கணிதம் மற்றும் நவீன அறிவியல் ' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டியன் பியூலா தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:

இயற்கை எல்லோரையும் வஞ்சிப்பது இல்லை. ஏதேனும் ஒன்றில் குறை இருந்தால், மற்றொன்றில் நிறை இருக்கும். மாற்றுத்திறனாளிகளுக்கு இயற்கை, கூர்மையான ஒரு சிறப்பு கொடையை வழங்கியுள்ளது. இந்த அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள ஒரு சிறப்பான கருவி தான் கணிதம். மாற்றுத்திறனாளி மாணவர்கள், இயற்கை வழங்கியள்ள கொடை எது என்பதை புரிந்து, வாழ்க்கையை மேற்படுத்திக் கொள்ளலாம்.

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், அவருடைய கழுத்துக்கு கீழ் முழுமையாக செயலற்றிருந்த நிலையிலும், உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியாக திகழ்ந்தார். அவரை போல, பல மாற்றுத்திறனாளிகள் மிகப்பெரும் சாதனைகளை நிகழ்த்தி வருவதை காண முடிகிறது. பார்வையை முற்றிலும் இழந்த ஒருவர், அரசு பள்ளி தலைமை ஆசிரியராக சிறப்பாக பணிபுரிந்து வருகிறார். மற்றொரு மாணவர், இரண்டு முதுகலை பட்டங்களை பெற்று, வேலை வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இதனால், மாற்றுத்திறனாளிகள் தங்கள் குறைபாடுகளை நினைத்து சோர்வடைய தேவையில்லை.

நவீன அறிவியல் பல வகைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு துணையாக நிற்கிறது. ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட, ஒரு ஹெல்மெட் கண் பார்வையற்றவர்களுக்கு எங்கு வேண்டுமானாலும் எளிதாக நடமாட துணை புரிகிறது.

ஒரு சிறிய சிலிக்கான் சிப்ஸ், கை கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால்கள் பொருத்தப்பட்டு அவற்றை இயற்கையாக பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எந்த வேலையை செய்வதற்கும் மனதால் நினைத்தாலும், செயற்கை அங்கங்கள் வேலை செய்யும்.

எனவே, மாற்றுத்திறனாளிகள் தங்கள் குறைகளை வரமாக நினைத்து செயல்பட்டால், வாழ்க்கையில் சாதிக்கலாம். இவ்வாறு, அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், கணிதத்தில் சிறப்பான திறமை பெற்ற மாணவர் பிரேம்குமாருக்கு, ரொக்க பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் பாலகிருஷ்ணன் மாணவர்களுக்கு செய்கை மொழியில் விளக்கினார். ஆசிரியர் ராம்குமார் வரவேற்றார். ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.


Sunday, September 21, 2025

ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !



17.09.2025
அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் அதற்கு உடல் குறை தடை இருக்கக்கூடாது என முத்தமிழறிஞர் கலைஞர் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களும் சலுகைகளும் செய்துள்ளார் அதன் ஒரு பகுதியாக கடந்த 2007ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருத்த போது செவிதிறன் குறைபாடு உள்ளவர்களுக்கு ஆசியவிலேயே முதன்முறையாக சென்னை மாநில கல்லூரியில் பி. காம் மற்றும் பி. சி. ஏ பாடப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

தற்போது 300க்கு மேற்பட்ட மாற்றுதிறனாளி மாணவர்கள் இப்பாடப்பிரிவை எடுத்து படித்து வருகின்றனர். கடந்த 18 வருடங்களாக இந்த இரண்டு பாடபிரிவிலும் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று ஏராளமானோர் அரசு பணிகளில் பணியாற்றி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கென்றே இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை மாநில கல்லூரியில் 21 கோடி ரூபாய் செலவில் பிரத்யேக விடுதியை கடந்த ஆண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இப்படி தொடர்ச்சியாக அரசு கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்காக குறிப்பாக செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு பாடப்பிரிவு மற்றும் தனி விடுதி என திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ச்சியாக திட்டங்கள் வகுத்து வரும் நிலையில் புதிய வரலாற்று சாதனையாக செயற்கை நுண்ணறிவு சர்வதேச பாட பிரிவும் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆசியாவிலேயே முதன் முறையாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சென்னை மாநில கல்லூரியில் சர்வதேச செயற்கை நுண்ணறிவு கூட்டமைப்பு இணைந்து லிப் ரீடிங் மற்றும் சைன் லாங்குவேஜ் மூலம் ஏ.ஐ டூல்ஸ் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

-கலைஞர் செய்தி 

மாற்றுத் திறனாளிகளுக்கு யோகாசன பயிற்சி


20.09.25
சிவகாசி பிரம்மகுமாரிகள் அமைப்பு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு சனிக்கிழமை யோகாசனப் பயிற்சி அளிக்கப்பட்டது.

சிவகாசி பிரம்மகுமாரிகள் அமைப்பு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு சனிக்கிழமை யோகாசனப் பயிற்சி அளிக்கப்பட்டது.

சிவகாசியில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் மாற்றுத் திறனாளிகள் குழுவினர், சிவகாசி -வெம்பக்கோட்டைசாலையில் உள்ள பிரம்மகுமாரிகள் அமைப்பின் தியான மண்டபத்தில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அவர்களுக்கு பொறுப்பாளர்கள் சுதா, சுகன்யா ஆகியோர் யோகாசனம், பிராணாயாமம், தியானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினர். பின்னர், மாற்றுத் திறனாளிகளுக்கென பிரத்யேகமாக உள்ள யோகாசனப் பயிற்சிகள் குறித்து செயல்முறைப் பயிற்சி அளித்து, அவற்றை நாள்தோறும் பின்பற்ற வலியுறுத்தினர்.

Saturday, September 13, 2025

கோயம்பேட்டில் திருடப்பட்ட அரசுப் பேருந்து நெல்லூரில் பிடிபட்டது! ஒடிஸா வாய்பேச முடியாத இளைஞர் கைது!




12.09.2025
கோயம்பேடு பேருந்து பணிமனையிலிருந்து திருடுபோன அரசுப் பேருந்து, ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே மீட்கப்பட்டது. அந்த பேருந்தை ஓட்டிச் சென்ற ஒடிஸா மாநில இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான சென்னை-திருப்பதி செல்லும் பேருந்து கோயம்பேடு பேருந்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த பேருந்தை எடுப்பதற்காக ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வியாழக்கிழமை காலை அங்கு சென்றபோது, நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் பேருந்தை காணவில்லை.

இதுகுறித்து கோயம்பேடு பேருந்து பணிமனை கிளையின் மேலாளர் ராம்சிங் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் இதுகுறித்து விசாரணையைத் தொடங்கினர்.

அப்போது, பேருந்தின் ஜிபிஎஸ் கருவி மூலம் பேருந்து இருக்கும் இடத்தை ஆய்வுசெய்தபோது, ஆந்திர மாநிலம், நெல்லூர் பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு சென்ற கோயம்பேடு போலீஸார், நெல்லூர் காவல்துறை உதவியுடன் வெள்ளிக்கிழமை அதிகாலையில் நெல்லூர் அத்மகூர் என்ற இடத்திலிருந்து பேருந்தை மீட்டனர். மேலும், பேருந்தை திருடிச் சென்ற ஒடிஸா மாநிலத்தை சேர்ந்த வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான ஞானசஞ்சன் சாஹூ (24) என்பவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இனி வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம்; மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக செயலி



09.09.2025
சென்னை; உபகரணங்கள் பெற, மாற்றுத்திறனாளிகள், இனி வீட்டிலிருந்தபடியே விண்ணப்பிக்கும் வகையில், 'திறன்' இணையதளம் மற்றும் மொபைல் போன் செயலியை வடிவமைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர், காதொலி கருவிகள் உட்பட, 27 வகை உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

இவற்றை பெற விரும்புவோர், உரிய மருத்துவ ஆவணங்களுடன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

இம்முறையில் விண்ணப்பிக்க மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுவதால், அரசு தரப்பில், தற்போது மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இனி வீட்டிலிருந்தபடியே, உதவி உபகரணம் பெற விண்ணப்பிக்கும் வகையில், 'திறன்' இணையதளம் மற்றும் மொபைல் போன் செயலி வடிவமைக்கப்பட உள்ளது. அரசு தரப்பில் வழங்கப்படும் உதவி உபகரணம் குறித்த, அனைத்து தகவல்களும், 'திறன்' இணையதளம் மற்றும் செயலியில் இடம்பெறும்.

இதற்கிடையில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நடத்திய, 470 முகாம்கள் வழியாக அடையாள அட்டை, உதவி உபகரணம் உட்பட, 10க்கும் மேற்பட்ட சேவைகளை பெற, 16,452 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்துள்ளனர்.


மாற்றுத்திறனாளி மீது திமுக பிரமுகர்கள் சரமாரி தாக்குதல்; சேலம் போலீசார் அலட்சியம்!



09.09.2025

சேலம் அருகே, காது கேட்க இயலாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி கூலித்தொழிலாளியை, திமுக பிரமுகர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள குருக்குப்பட்டியைச் சேர்ந்தவர் எல்லப்பன் (50). கட்டடத் தொழிலாளியான இவர், வாய் பேச இயலாத மற்றும் கேது கேட்காத மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 4ம் தேதி காலை 9 மணியளவில் அவர் தீவட்டிப்பட்டியில் நடக்கும் உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றார். வீடு அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் அடித்தார். அப்போது அவருக்குப் பின்னால், 'டிஎன்30 ஏஒய் 5' என்ற பதிவெண் கொண்ட, திமுக கொடி கட்டிய, ஒரு கருப்பு நிற ஸ்கார்ப்பியோ கார் டீசல் போட வந்து நின்றது.
 
எல்லப்பன் பெட்ரோல் போட்டுவிட்டு, பம்ப் மேனிடம் சில்லரை பெற்றுக்கொண்டு கிளம்புவதற்குள் பின்னால் காரில் வந்த 5 பேர் கும்பல் அவரை விரைவாக வண்டியை நகர்த்துமாறு சத்தம் போட்டனர். செவித்திறன் இல்லாத மாற்றுத்திறனாளி என்பதால் அதை அவர் கவனிக்கவில்லை. இதையடுத்து எல்லப்பன் அங்கிருந்து தனது வண்டியை சிறிது முன்பக்கம் நகர்த்திச்சென்று நிறுத்தினார். அப்போது காரில் வந்த கும்பல், அவருடைய வண்டி மீது மோதுவது போல் சீறிப்பாய்ந்து வந்து நிறுத்தினர்.
 
இதில் அவர் சைகையால் ஏதோ சொல்லப்போக ஆத்திரம் அடைந்த காரில் வந்த கும்பல் அவரை சரமாரியாக கைகளால் தாக்கினர். பெட்ரோல் பங்க் ஊழியரோ, 'பாவம்ணா... அவரை விடுங்கண்ணா...' என்று சமாதானம் செய்தார். பின்னர் அந்த கும்பல் டீசல் போட்டுக்கொண்டு அங்கிருந்து 'விருட்'டென்று கிளம்பிச் சென்று விட்டது. இந்த தாக்குதலில் எல்லப்பனுக்கு கழுத்து, தலை, முகத்தில் பலத்த உள் காயம் ஏற்பட்டது. இதையடுத்து வீட்டுக்குத் திரும்பிச் சென்ற அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். பதற்றம் அடைந்த மனைவியும், அக்கம்பக்கத்தினரும் அவரை மீட்டு, ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவப் பரிசோதனையில், நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மேல் சிகிச்சைக்காக அவரை சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படியும் கூறியுள்ளனர். இதற்கிடையே லாரி ஓட்டுநராக உள்ள எல்லப்பனின் தம்பி அபிமன்னன் சரக்கு லாரியுடன் வட மாநிலங்களுக்குச் சென்றிருந்த நிலையில், செப்டம்பர் 8ம் தேதி வீடு திரும்பினார்.
 
தனது அண்ணன் மீது நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து கேட்டறிந்த அபிமன்னன், சம்பவம் நடந்த பெட்ரோல் பங்க்கில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுக் காட்சிகளை ஆய்வு செய்தார். இதில், தாரமங்கலம் பெரியாம்பட்டியைச் சேர்ந்த கண்ணன், செந்தில், பழனிசாமி, அம்மாசி, கணேசன் ஆகிய ஐந்து பேர் சேர்ந்து தனது அண்ணனை தாக்கி இருப்பது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து எல்லப்பனின் தாயார் பூஞ்சோலை அளித்த புகாரின்பேரில் தாரமங்கலம் காவல்நிலையத்தினர், செப்டம்பர் 5ம் தேதி எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். அதில், ஐந்து பேர் எல்லப்பனை தாக்கியதாக குறிப்பிட்டுள்ளனரே தவிர, யார் யார் தாக்கினர் என்று பெயர்களைக் குறிப்பிடவில்லை. தாக்கிய நபர்கள் மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவு 189 (2) (5 மற்றும் 5க்கும் மேற்பட்டோர் சட்ட விரோதமாக கூடுதல்) மற்றும் 115 (2) (காயத்தை ஏற்படுத்துதல்) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
இந்நிலையில், எப்ஐஆர் பதிவு செய்து நான்கு நாள்கள் ஆகியும் குற்றவாளிகளைக் கைது செய்யாமல் காவல்துறையினர் அலட்சியமாக இருப்பதைக் கண்டித்து செப்டம்பர் 8ம் தேதி, எல்லப்பனின் தம்பி அபிமன்னன் குடும்பத்தினருடன் கையில் தேசியக்கொடிகளை ஏந்தியபடி வந்து தாரமங்கலம் காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தார். குழந்தைகளுடன் தேசியக்கொடிகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் தாரமங்கலம் காவல்நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அபிமன்னன் இதுகுறித்து சேலம் மாவட்ட எஸ்.பி., கவுதம் கோயலிடம் நேரில் புகார் அளித்தார். அவரோ, 'சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,' என பட்டும்படாமலும் பேசி அவரை அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து லாரி ஓட்டுநர் அபிமன்னன் கூறுகையில், ''என் அண்ணன் வாய் பேச முடியாத, காது கேட்க இயலாத ஒரு மாற்றுத்திறனாளி.அவரை திமுக பிரமுகர்களான கண்ணன், செந்தில், பழனிசாமி, அம்மாசி, கணேசன் ஆகிய ஐந்து பேரும் பெட்ரோல் பங்க்கில் வைத்து தாக்கி உள்ளனர். அவர்கள் உள்ளூரில் கந்து வட்டித் தொழிலும் செய்து வருகின்றனர்.
 
சம்பவத்தன்று திமுக கொடி கட்டிய காரில் டீசல் போட பெட்ரோல் பங்க்கிற்கு வந்த அவர்கள், முன்னால் நிறுத்தி இருந்த என்னுடைய அண்ணனின் வண்டியை நகர்த்தச் சொன்னார்கள். அதற்கு சற்று கால தாமதம் ஆனதால் ஆத்திரத்தில் அவர்கள், மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் அண்ணனை சரமாரியாக தாக்கியுள்ளனர். தாக்கிய நபர்கள் யார் என அடையாளம் தெரிந்த பின்னரும் காவல்துறையினர் கைது செய்யாமல் அலட்சியமாகவும், ஆளுங்கட்சியினருக்கு சாதகமாகவும் செயல்படுகின்றனர்,'' என்றார்.

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016, பிரிவு 92, 'மாற்றுத்திறனாளிகள் மீது தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது 6 மாதம் மாதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும்அபராதம் விதிக்கப்படும்,' என்று வரையறுக்கிறது. ஆனால் காவல்துறையினர் எல்லப்பனை தாக்கியவர்கள் மீது பிணையில் விடக்கூடிய சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம், தாரமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு, காவல்துறையினரின் நடவடிக்கைகள் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.



மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு



13.09.2025 
பொதுப்பிரிவைவிட அதிக கட்ஆஃப் மதிப்பெண்கள் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், மாநில அரசுகளால் நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான நல்வாழ்வு மையங்களை 'திறனை மேம்படுத்தும் திட்டம்' என்ற பெயரில் 8 தேசிய சட்ட பல்கலைக்கழகங்கள் கண்காணிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016-ஐ முறையாக அமல்படுத்தக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையின்போது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, வழக்கமாக ஒரு பணியிடத்துக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் கட்ஆஃப் மதிப்பெண்களைவிட அதிகமான மதிப்பெண்களைப் பெறும் தேர்வர்களுக்கு பொதுப்பிரிவின்கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. அப்போது சம்பந்தப்பட்ட பிரிவில் ஓரிடம் காலியிடமாக கருதப்பட்டு அதற்கு இடஒதுக்கீட்டின்படி உரிய கட்ஆஃப் மதிப்பெண் பெற்ற நபருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

ஆனால் மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்த ஒருவர் அதிகமான கட்ஆஃப் மதிப்பெண்களை பெற்றால் அவருக்கு பொதுப்பிரிவில் வேலைவாய்ப்பு வழங்க மறுப்பதுடன் மற்றொரு மாற்றுத்திறனாளிக்கு இடஒதுக்கீட்டின்கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதில்லை என தெரியவந்துள்ளது. இது மிகவும் கண்டனத்துக்குரியது.

இந்த அணுகுமுறை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்-2016, பிரிவு 34-இன்கீழ் அவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை முற்றிலுமாக பாதிக்கிறது. இதன்மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டப்படுவது உறுதியாகியுள்ளது.

இந்த விவகாரத்துக்கு உடனடியாக தீர்வுகாண்பது அவசியம்.

வறுமை போன்ற சமூக காரணிகளால் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு பாதிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

எனவே, மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான இடஒதுக்கீட்டின்படி நிர்ணயிக்கப்பட்ட கட்ஆஃப் மதிப்பெண்களைவிட அதிகமான மதிப்பெண்கள் பெறும்பட்சத்தில் அவர்களுக்கு பொதுப்பிரிவில் வேலைவாய்ப்பை வழங்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு அக்டோபர் 14-ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும்.

இதே நடைமுறை பதவிஉயர்விலும் பின்பற்றப்பட வேண்டும்.

நல்வாழ்வு மையம் கண்காணிப்பு: மாநில அரசுகளால் நடத்தப்படும் அனைத்து மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு மையங்களையும் பெங்களூரு, தில்லி சட்டப் பல்கலைக்கழகங்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள 8 தேசி சட்டப் பல்கலைக்கழகங்களும் 'திறனை மேம்படுத்தும் திட்டம்' என்ற தலைப்பின்கீழ் கண்காணிக்க வேண்டும். அப்போது மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்,2016 முறையாக அமல்படுத்தப்படுகிா? என்பதை பல்கலைக்கழகங்கள்ஆய்வுசெய்ய வேண்டும்.

குறிப்பாக அந்த மையங்களில் மறுவாழ்வு, அணுகல், உள்கட்டமைப்பு, கல்வி, பாதுகாப்பு, பணியாளர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மீது தனிகவனம் செலுத்த வேண்டும்.

இந்தப் பணியை மேற்கொள்ளும் 8 பல்கலைக்கழகங்களுக்கு இடைக்கால நிதியாக ரூ.25 லட்சத்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

பல்கலைக்கழகங்களின் கண்காணிப்புக் குழுக்களுக்களான செலவுகளை மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சமூக நீதி துறைகள் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அதேபோல் கண்காணிப்புக் குழுக்கள் தாங்கள் மேற்கொண்ட பணிகள் குறித்து 6 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை 2026, மார்ச் 13-ஆம் தேதிக்கு நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்தது.




A Chennai-Based Company Designs a Tactile System for the Hearing Impaired to Understand Speech


12.09.2025
Sharon Systems, Chennai, has developed a tactile system to enable people with auditory impairment to be able to identify and understand the speech around them with the use of phonetics.

Though our time and world have made quite a few changes to make the society more inclusive for people with impairments, there are still many changes waiting to happen.

Taking a step in the direction of one such change, a Chennai-based firm Sharon Systems has developed a system called 'Rhema -Speak to Hear Tactile Device'.

Designed specifically for people with auditory impairments, the device will allow them to follow conversations and also help out people with speech disabilities. Rhema means the spoken word in Greek and hence the name of the device.

It uses concepts from the Hebrew logic and Pittman’s shorthand to convert phonetics into a series of dots on the system, which makes the switches to flip on the tactile (working on a sense of touch) board.

So if a person wishes to use it, she would place her hand on the tactile board. The board is small, about the size of a regular palm, with switches on it. When a word is spoken into the microphone, the levers in the board either spring up or remain as they were before.

There are 27 basic characters, which will take around a week to master. Once the user learns to recognize the characters, she can use the levers to identify the word and understand and 'hear' what is being spoken.

Samuel Martyn, executive consultant of the company, told The Hindu that the idea stemmed from his frequent interactions with people from varied impairments and once he started working with computers, he thought of the system as a logical solution to the issue.

As per the current plans, the system will be an open source for more people to benefit. There is a desktop version and there is a 'mobile' version which will be worn around the waist and will have a microphone that will convert the spoken bit into phonetics.

The system, launched on June 12, is already being used by the students at the CSI School for the Deaf for attending lectures.


UP: Pregnant deaf-mute woman dies days after gang rape; accused gave her pills, raped her earlier too

11.09.2025
KANPUR: A 26-year-old pregnant rape survivor, who was speech and hearing impaired, died during treatment at Lala Lajpat Rai (LLR) Hospital in Kanpur on Wednesday morning. The woman was gang-raped by two villagers on Sunday evening in Hamirpur district after being administered contraceptive pills. The accused had raped her earlier also resulting in her pregnancy.

The police, on the basis of a complaint, had registered a case of gang rape. On Wednesday, after the woman's death, both the suspects were taken into custody. The woman was staying at her parents' home after a disagreement with her in-laws when she came became acquainted with the suspects of the same village. The accused raped her, which resulted in her pregnancy. The family claimed that they had warned both men several times and advised them to stay away from the woman.

According to the woman's family, on Sunday, while she was alone at home, the two accused lured her to nearby fields and gave her contraceptive pills. They then took turns raping her. When the family found out, they confronted one of the accused, who responded with abuse and threats. As the woman's condition worsened, she was taken to the hospital on Monday from where she was referred to LLR hospital in Kanpur.

Circle Officer Sadar Rajesh Kamal stated that based on the victim's father's complaint, an FIR was registered, and both the accused were detained. Their interrogation is underway. "The body has been sent for postmortem and investigations are on," he added.



Thursday, September 11, 2025

மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை பெறுபவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும்!



08.09.2025 
திருப்பத்தூர் காது கேளாதோர் நலச் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம்!!

திருப்பத்தூர் செப் 09. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் காது கேளா தோர் நலச் சங்கம் 20 வது ஆண்டு விழா மற்றும் தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு 10வது மாநில மாநாடு தனியார் மஹாலில் நடைபெற்றது. காது கேளாதோர் நல சங்க தலைவர் தீபக் சிவகங்கை மாவட்ட செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கௌரவ தலைவரும், ராணி வேலு நாச்சியார் அறக்கட்டளை தலைவருமான கோபால்ராஜன் வரவேற்றார்.

விழாவில் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசினார். விழாவில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, சிவகங்கை மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நல அலு வலர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பு தலைவர் பழனிச்சாமி, பொதுச் செயலாளர் ஜெய்சங்கர், சட்ட ஆலோசகர் துரைபாண்டியன், முன்னாள் தலைவர் பழனியப்பன், சேர்மன் சதாசிவம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் ஆதித்யா சேதுபதி, சிவகங்கை சமஸ்தானம் மாவட்ட காதுகேளாதோர் நல சங்கம் துணைத்தலைவர் அமானுல்லா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டார்.
 
மாதாந்திர உதவித் தொகை 6000ஆக உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை பெறுபவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை பாகுபாடு இன்றி வழங்க வேண்டும். அரசு வேலை வாய்ப்பில் ஒரு சதவீதம் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

உள்ளிட்ட 24 கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிவகங்கை மாவட்ட காதுகேளாதோர் நலச்சங்கம் பொதுச் செயலாளர் காதர் சுல்தான் நன்றியுரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகங்கை மாவட்ட கேளாதோர் நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


காது கேளாதோர் உதவி தொகை ரூ.6000 ஆக்க வேண்டும் மாநாட்டில் தீர்மானம்



07.09.2025
திருப்புத்தூர் : காதுகேளாதோர் உதவி தொகையை ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என திருப்புத்துாரில் நடந்த காதுகேளாதோர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினர்.

மாநாட்டிற்கு மாவட்டதலைவர் தீபக் செல்வக்குமார் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் கோபால்ராஜன் வரவேற்றார். அமைச்சர் பெரியகருப்பன் பேசினார். காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலகிருஷ்ணன், மாநில தலைவர் பழனிச்சாமி, பொது செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தீர்மானம்: காதுகோளாதோருக்கான மாத உதவி தொகையை ரூ.6 ஆயிரமாக உயர்த்த வேண்டும். மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும். அரசு வேலையில் 1 சதவீதம் இட ஒதுக்கீடு உட்பட 24 தீர்மானங்கள் நிறைவேற்றினர். பொது செயலாளர் காதர் சுல்தான் நன்றி கூறினார்.


Sunday, September 7, 2025

செப். 9, 16, 23-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை



06.08.2025
தஞ்சாவூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் செப்டம்பா் 9, 16, 23 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தது:

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவா்களுக்காக தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டையில் கோட்ட அளவில் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் செப்டம்பா் 9 ஆம் தேதியும், கும்பகோணம் பேருந்து நிலையம் அருகேயுள்ள கே.எம்.எஸ்.எஸ். வளாகத்தில் 16 ஆம் தேதியும், பட்டுக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம் எதிரேயுள்ள கிராம சேவை கட்டடத்தில் 23 ஆம் தேதியும் இம்முகாம் நடைபெறவுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படங்கள், இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் இம்முகாமில் ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.


Saturday, September 6, 2025

Centre explores collaboration between AIISH and AIIMS for speech and hearing disorders


03.09.2025
Mysuru: The Union minister of state for health and family welfare, Anupriya Patel, on Monday announced that the Union govt is exploring collaboration between the AIISH and AIIMS for speech and hearing disorders. She also announced plans to set up additional AIISH-like institutes in the country.

Speaking at the diamond jubilee celebrations of AIISH, she stated that AIISH is the global centre for compassionate care. She assured continued support from the Union govt.

Chief minister Siddaramaiah stated that detecting speech and hearing problems in children even while they are in the womb is indeed a remarkable achievement. He added that it is only through such premier institutions that technologies to identify communication disorders during the foetal stage have become possible. To further expand the institute's clinical and rehabilitation work, the govt has granted 10 acres of land free of cost at Varuna on the outskirts of the city.

Governor Thawar Chand Gehlot said that sign language is an effective medium of communication for people with speech and hearing impairments. He stressed the need for its development at the national and international levels.

"In this era of technological progress, we are faced with new challenges and opportunities. There are new possibilities in fields like artificial intelligence, digital therapy, and tele-audiology. More efforts are required in this direction," the Governor said.


Friday, September 5, 2025

Assam’s Rupa Nirola wins Miss Deaf India 2025 title


Guwahati: Rupa Nirola, a young talent from Suklai in Udalguri district, brought pride to Assam by clinching the Miss Deaf India 2025 crown at the 12th Miss and Mr Deaf India contest held in Punjab from August 30 to September 1.

Daughter of Dharma Nirola and Lata Nirola, Rupa is currently studying at the North East Degree College for the Hearing Impaired at Birubari in Assam’s Guwahati.

The institution operates under the Assam Association of the Deaf, which provides inclusive education and encourages differently-abled students to engage in both cultural and skill-based activities at national and international platforms.

Celebrating her win, the Assam Association of the Deaf expressed pride in Rupa’s accomplishment and reiterated its commitment to creating opportunities that empower differently-abled students to showcase their talents across various domains.

Rupa’s victory stands as a shining example of resilience and determination, inspiring many others to break barriers and follow their dreams.