FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, September 13, 2018

சென்னை சிறுமி வன்புணர்வு வழக்கில் 17 பேருக்கும் மரண தண்டனை?

13.09.2018 CHENNAI:
சென்னை அயனாவரத்தில் 11 வயது காது கேளாத சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 17 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 17 பேருக்கும் மரண தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் பாலியல் கொடுமையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்ட (போக்சோ) பிரிவுகளில் சிறப்பு அரசு வழக்கறிஞர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்.

போக்சோ சட்டப்பிரிவை தவிர்த்து, இந்திய தண்டனை சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட 376 ஏபி, மற்றும் 376 டிபி ஆகியற்றின் கீழும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டப் பிரிவுகள் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை வன்புணர்வு செய்யும் குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் அதிகபட்சம் மரண தண்டனை வழங்க வகை செய்கிறது.

கத்துவா சிறுமி வன்புணர்வு சம்பவத்தை தொடர்ந்து இந்த புதிய சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. நெஞ்சைப் பதறவைக்கும் சென்னை சிறுமி வன்புணர்வு சம்பத்தில் 17 பேரும் கடந்த ஜூலை 15-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

அயனாவரத்தில் சிறுமி வசித்த உள்ள அபார்ட்மென்டின் லிஃப்ட்மேன், பாதுகாவலர்கள், ப்ளம்பர்கள், எலக்ட்ரீஷியன் மற்றும் பராமரிப்பு பணியாளர்களால் 7 மாத காலமாக சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

தனக்கு நேர்ந்த கொடுமைகளை சிறுமி தனது சகோதரியிடம் சொன்ன பின்னர், பெற்றோர் அளித்த புகாரின்படி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். போலீசாரின் தகவலின்படி மயக்க ஊசி, மயக்க மருந்து கலக்கப்பட்ட பானங்கள் உள்ளிட்டவற்றை அளித்து சிறுமியை 17 பேர் கொண்ட கும்பல் வன்புணர்வு செய்து வந்துள்ளது.

தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் 17 பேருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment