FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, September 27, 2018

பஸ்களில் சலுகை மறுக்கப்படுவதை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்: பல்லவன் இல்லத்தில் போலீஸ் குவிப்பு

26.09.2018
சென்னை: அரசு பஸ்களில் சலுகை மறுக்கப்படுவதை கண்டித்து பல்லவன் இல்லம் முன்பு நேற்று மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். தமிழக அரசு பஸ்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 75 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக தங்களுக்கு இந்த பஸ் கட்டண சலுகை மறுக்கப்பட்டு வருவதாக மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், டிக்கெட் கட்டண சலுகையை முறையாக வழங்கக் கோரி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சென்னை பல்லவன் இல்லம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

அவர்கள் அனைவரும் பல்லவன் சாலையில் மாநகர போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தின் நுழைவாயில் முன்புறம் தரையில் அமர்ந்திருந்தனர். இதற்கிடையில், போக்குவரத்து ஓய்வுபெற்ற தொழிலாளர்களும் நேற்று பல்லவன் இல்லம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்கள் தங்களுக்கு, கடந்த 2015 நவம்பர் முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும், மாதந்தோறும் முறையாக 1ம் தேதி பென்சன் வழங்க வேண்டும், நிலுவை தொகை ரூ.2,000 கோடியை உடனே அரசு விடுவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஒரே இடத்தில் அடுத்தடுத்து 2 அமைப்புகள் போராட்டம் நடத்தியதால் பல்லவன் இல்லம் முன்பு நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் நேற்று காலை முதல் பல்லவன் இல்லம் அமைந்துள்ள சாலையில் பரபரப்பு நிலவியது.

No comments:

Post a Comment