FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Thursday, September 27, 2018

பஸ்களில் சலுகை மறுக்கப்படுவதை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்: பல்லவன் இல்லத்தில் போலீஸ் குவிப்பு

26.09.2018
சென்னை: அரசு பஸ்களில் சலுகை மறுக்கப்படுவதை கண்டித்து பல்லவன் இல்லம் முன்பு நேற்று மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். தமிழக அரசு பஸ்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 75 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக தங்களுக்கு இந்த பஸ் கட்டண சலுகை மறுக்கப்பட்டு வருவதாக மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், டிக்கெட் கட்டண சலுகையை முறையாக வழங்கக் கோரி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சென்னை பல்லவன் இல்லம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

அவர்கள் அனைவரும் பல்லவன் சாலையில் மாநகர போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தின் நுழைவாயில் முன்புறம் தரையில் அமர்ந்திருந்தனர். இதற்கிடையில், போக்குவரத்து ஓய்வுபெற்ற தொழிலாளர்களும் நேற்று பல்லவன் இல்லம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்கள் தங்களுக்கு, கடந்த 2015 நவம்பர் முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும், மாதந்தோறும் முறையாக 1ம் தேதி பென்சன் வழங்க வேண்டும், நிலுவை தொகை ரூ.2,000 கோடியை உடனே அரசு விடுவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஒரே இடத்தில் அடுத்தடுத்து 2 அமைப்புகள் போராட்டம் நடத்தியதால் பல்லவன் இல்லம் முன்பு நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் நேற்று காலை முதல் பல்லவன் இல்லம் அமைந்துள்ள சாலையில் பரபரப்பு நிலவியது.

No comments:

Post a Comment