FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Thursday, September 27, 2018

பஸ்களில் சலுகை மறுக்கப்படுவதை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்: பல்லவன் இல்லத்தில் போலீஸ் குவிப்பு

26.09.2018
சென்னை: அரசு பஸ்களில் சலுகை மறுக்கப்படுவதை கண்டித்து பல்லவன் இல்லம் முன்பு நேற்று மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். தமிழக அரசு பஸ்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 75 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக தங்களுக்கு இந்த பஸ் கட்டண சலுகை மறுக்கப்பட்டு வருவதாக மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், டிக்கெட் கட்டண சலுகையை முறையாக வழங்கக் கோரி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சென்னை பல்லவன் இல்லம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

அவர்கள் அனைவரும் பல்லவன் சாலையில் மாநகர போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தின் நுழைவாயில் முன்புறம் தரையில் அமர்ந்திருந்தனர். இதற்கிடையில், போக்குவரத்து ஓய்வுபெற்ற தொழிலாளர்களும் நேற்று பல்லவன் இல்லம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்கள் தங்களுக்கு, கடந்த 2015 நவம்பர் முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும், மாதந்தோறும் முறையாக 1ம் தேதி பென்சன் வழங்க வேண்டும், நிலுவை தொகை ரூ.2,000 கோடியை உடனே அரசு விடுவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஒரே இடத்தில் அடுத்தடுத்து 2 அமைப்புகள் போராட்டம் நடத்தியதால் பல்லவன் இல்லம் முன்பு நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் நேற்று காலை முதல் பல்லவன் இல்லம் அமைந்துள்ள சாலையில் பரபரப்பு நிலவியது.

No comments:

Post a Comment