FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, September 29, 2018

தூத்துக்குடியில் காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுடன் உரையாடுவது குறித்து சிறப்பு பயிற்சி

தூத்துக்குடி 2018 செப் 28 ;
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, நல்லாயன் செவித்திறன் குறையுடையோர் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் மூலம் தேர்தல் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுடன் உரையாடுவது குறித்து சிறப்பு பயிற்சி சார் ஆட்சியர் பிரசாந்த், தலைமையில் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, தேர்தல் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு சைகை மொழி மூலம் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், காது கேளாதோர்கள், கண் குறைபாடு உள்ளவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுடன் உரையாடுவது குறித்து சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் பயிற்சி இன்று (28.9.2018) சார் ஆட்சியர் பிரசாந்த்,தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சியில், நல்லாயன் செவித்திறன் குறையுடையோர் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் திலகவதி மற்றும் திருமதி.சுபா ஆகியோர்கள் மாற்றுத்திறனாளிகளுடன் எவ்வாறு உரையாடுவது என்பது குறித்து பயிற்சி அளித்தார்கள். குறிப்பாக, வாக்காளர் தொடர்பாக விவரங்கள் எவ்வாறு தெரிவிக்க வேண்டும் என்பதும், மாற்றுத்திறனாளிகளுக்கு சைகை மொழியில் தேர்தல் தொடர்பான விவரங்கள் தெரிவிப்பது தொடர்பாக எடுத்துக் கூறினார்கள். மேலும், ஆங்கில எழுத்துக்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படம் மாற்றம், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல் போன்ற விவரங்கள் குறித்து சைகை மொழியில் பயிற்சி அளித்தார்கள்.

இப்பயிற்சியில் சார் ஆட்சியர் பிரசாந்த், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், கோட்டாட்சியர்கள் விஜயா (கோவில்பட்டி), தில்லைபாண்டி (திருச்செந்தூர்), தேர்தல் வட்டாட்சியர் நாகராஜன், அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment