FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Saturday, September 29, 2018

தூத்துக்குடியில் காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுடன் உரையாடுவது குறித்து சிறப்பு பயிற்சி

தூத்துக்குடி 2018 செப் 28 ;
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, நல்லாயன் செவித்திறன் குறையுடையோர் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் மூலம் தேர்தல் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுடன் உரையாடுவது குறித்து சிறப்பு பயிற்சி சார் ஆட்சியர் பிரசாந்த், தலைமையில் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, தேர்தல் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு சைகை மொழி மூலம் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், காது கேளாதோர்கள், கண் குறைபாடு உள்ளவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுடன் உரையாடுவது குறித்து சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் பயிற்சி இன்று (28.9.2018) சார் ஆட்சியர் பிரசாந்த்,தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சியில், நல்லாயன் செவித்திறன் குறையுடையோர் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் திலகவதி மற்றும் திருமதி.சுபா ஆகியோர்கள் மாற்றுத்திறனாளிகளுடன் எவ்வாறு உரையாடுவது என்பது குறித்து பயிற்சி அளித்தார்கள். குறிப்பாக, வாக்காளர் தொடர்பாக விவரங்கள் எவ்வாறு தெரிவிக்க வேண்டும் என்பதும், மாற்றுத்திறனாளிகளுக்கு சைகை மொழியில் தேர்தல் தொடர்பான விவரங்கள் தெரிவிப்பது தொடர்பாக எடுத்துக் கூறினார்கள். மேலும், ஆங்கில எழுத்துக்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படம் மாற்றம், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல் போன்ற விவரங்கள் குறித்து சைகை மொழியில் பயிற்சி அளித்தார்கள்.

இப்பயிற்சியில் சார் ஆட்சியர் பிரசாந்த், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், கோட்டாட்சியர்கள் விஜயா (கோவில்பட்டி), தில்லைபாண்டி (திருச்செந்தூர்), தேர்தல் வட்டாட்சியர் நாகராஜன், அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment