FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, September 29, 2018

தூத்துக்குடியில் காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுடன் உரையாடுவது குறித்து சிறப்பு பயிற்சி

தூத்துக்குடி 2018 செப் 28 ;
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, நல்லாயன் செவித்திறன் குறையுடையோர் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் மூலம் தேர்தல் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுடன் உரையாடுவது குறித்து சிறப்பு பயிற்சி சார் ஆட்சியர் பிரசாந்த், தலைமையில் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, தேர்தல் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு சைகை மொழி மூலம் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், காது கேளாதோர்கள், கண் குறைபாடு உள்ளவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுடன் உரையாடுவது குறித்து சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் பயிற்சி இன்று (28.9.2018) சார் ஆட்சியர் பிரசாந்த்,தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சியில், நல்லாயன் செவித்திறன் குறையுடையோர் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் திலகவதி மற்றும் திருமதி.சுபா ஆகியோர்கள் மாற்றுத்திறனாளிகளுடன் எவ்வாறு உரையாடுவது என்பது குறித்து பயிற்சி அளித்தார்கள். குறிப்பாக, வாக்காளர் தொடர்பாக விவரங்கள் எவ்வாறு தெரிவிக்க வேண்டும் என்பதும், மாற்றுத்திறனாளிகளுக்கு சைகை மொழியில் தேர்தல் தொடர்பான விவரங்கள் தெரிவிப்பது தொடர்பாக எடுத்துக் கூறினார்கள். மேலும், ஆங்கில எழுத்துக்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படம் மாற்றம், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல் போன்ற விவரங்கள் குறித்து சைகை மொழியில் பயிற்சி அளித்தார்கள்.

இப்பயிற்சியில் சார் ஆட்சியர் பிரசாந்த், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், கோட்டாட்சியர்கள் விஜயா (கோவில்பட்டி), தில்லைபாண்டி (திருச்செந்தூர்), தேர்தல் வட்டாட்சியர் நாகராஜன், அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment