FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, September 12, 2018

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனம் கலெக்டர் தகவல்

செப்டம்பர் 12, 2018 
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரவள மையங்களிலும் பிரத்யேக முறையில் சிகிச்சை மேற்கொள்ளும் பணி நடைபெறுகிறது. இதில் மனவளர்ச்சி குறைவுடைய, தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட , செவித்திறன் குறைவுடைய, பார்வை குறைவுடைய, மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள், குழந்தை பிறந்தது முதல் 6 வயது வரையிலான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நடமாடும் சிகிச்சை வாகனம் மூலம் உபகரண கருவிகள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் நுண்ணறிவை அதிகரிக்கும் வகையிலான பொருட்கள், காது கேளாத மற்றும் வாய்பேசாத குழந்தைகளுக்கு விளக்க படங்கள் மற்றும் பொருட்கள் மூலம் பேச்சு பயிற்சி அளிக்கும் சாதனங்கள், மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான முடநீக்கு சாதனங்கள், மதிப்பீடு செய்யும் வகையில் நடமாடும் சிகிச்சை வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயிற்சிகள் வழங்கப்படும்

ஆரம்ப கால பயிற்சி மையங்களுக்கு வர இயலாத மாற்றுத்திறனாளி குழந்தைகளின் இடங்களுக்கு சென்று அவர்களை மதிப்பீடு செய்வதற்கும், பயிற்சிகள் வழங்கிடவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) எல்லாபுரம், பெரியபாளையத்திலும், 20-ந்தேதி (வியாழக்கிழமை) கடம்பத்தூரிலும், 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பூந்தமல்லியிலும், 26-ந்தேதி (புதன்கிழமை) பொன்னேரியிலும், 27-ந்தேதி வியாழக்கிழமை திருவாலங்காட்டிலும் அனைவருக்கும் கல்வி இயக்கம், வட்டார வள மையங்களில் நடமாடும் வாகனம் மூலமாக சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

அதே போன்று 3-10-2018 அன்று திருத்தணியிலும், 4-10-2018 அன்று வில்லிவாக்கத்திலும், 9-10-2018 அன்று ஆர்.கே.பேட்டையிலும், 16-10-2018 அன்று பூண்டியிலும், 18-10-2018 அன்று திருவாலங்காட்டிலும், 23-10-2018 அன்று புழல் பகுதியிலும், 24-10-2018 பொன்னேரியிலும், 25-10-2018 மற்றும் 30-10-2018 சோழவரத்திலும் நடமாடும் வாகனம் மூலமாக சிகிச்சை மேற்கொள்ளப்படும். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment