FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, September 12, 2018

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனம் கலெக்டர் தகவல்

செப்டம்பர் 12, 2018 
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரவள மையங்களிலும் பிரத்யேக முறையில் சிகிச்சை மேற்கொள்ளும் பணி நடைபெறுகிறது. இதில் மனவளர்ச்சி குறைவுடைய, தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட , செவித்திறன் குறைவுடைய, பார்வை குறைவுடைய, மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள், குழந்தை பிறந்தது முதல் 6 வயது வரையிலான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நடமாடும் சிகிச்சை வாகனம் மூலம் உபகரண கருவிகள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் நுண்ணறிவை அதிகரிக்கும் வகையிலான பொருட்கள், காது கேளாத மற்றும் வாய்பேசாத குழந்தைகளுக்கு விளக்க படங்கள் மற்றும் பொருட்கள் மூலம் பேச்சு பயிற்சி அளிக்கும் சாதனங்கள், மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான முடநீக்கு சாதனங்கள், மதிப்பீடு செய்யும் வகையில் நடமாடும் சிகிச்சை வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயிற்சிகள் வழங்கப்படும்

ஆரம்ப கால பயிற்சி மையங்களுக்கு வர இயலாத மாற்றுத்திறனாளி குழந்தைகளின் இடங்களுக்கு சென்று அவர்களை மதிப்பீடு செய்வதற்கும், பயிற்சிகள் வழங்கிடவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) எல்லாபுரம், பெரியபாளையத்திலும், 20-ந்தேதி (வியாழக்கிழமை) கடம்பத்தூரிலும், 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பூந்தமல்லியிலும், 26-ந்தேதி (புதன்கிழமை) பொன்னேரியிலும், 27-ந்தேதி வியாழக்கிழமை திருவாலங்காட்டிலும் அனைவருக்கும் கல்வி இயக்கம், வட்டார வள மையங்களில் நடமாடும் வாகனம் மூலமாக சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

அதே போன்று 3-10-2018 அன்று திருத்தணியிலும், 4-10-2018 அன்று வில்லிவாக்கத்திலும், 9-10-2018 அன்று ஆர்.கே.பேட்டையிலும், 16-10-2018 அன்று பூண்டியிலும், 18-10-2018 அன்று திருவாலங்காட்டிலும், 23-10-2018 அன்று புழல் பகுதியிலும், 24-10-2018 பொன்னேரியிலும், 25-10-2018 மற்றும் 30-10-2018 சோழவரத்திலும் நடமாடும் வாகனம் மூலமாக சிகிச்சை மேற்கொள்ளப்படும். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment