FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, September 14, 2018

உளுந்தூர் பேட்டை அருகே வாய் பேச முடியாத 9 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் வீடு புகுந்து கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பு


08.09.2018, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த வாய் பேச முடியாத 9 வயதுசிறுமி, அதேபகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்துள்ளார்.

சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பாத நிலையில், அவர் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த கருவேப்பிலைபாளையம் கிராமத்தை சேர்ந்த சீதாராமன்என்பவரது மகன் கார்த்தி மாணவியின் வீட்டுக்குள் நுழைந்து சிறுமியை கொடூரமாக கற்பழித்துள்ளார்.

அந்த சிறுமியிடம் நடந்ததை வெளியில் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளார். பின்னர் கார்த்தி மீண்டும் சிறுமியை கற்பழிக்க முயன்றபோது சிறுமியின் பெற்றோர்கள் விட்டுக்கு வந்துவிட்டனர். உடனடியாக கார்த்தி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அப்போது அந்த வாய்பேச முடியாத அந்த சிறுமி, தனக்கு நேர்ந்ததை சைகை மூலம் பெற்றோரிடம் சொன்னார். இதில் அதிர்ந்து போன சிறுமியின் பெற்றோர் கார்த்திக்வீட்டுக்கு சென்று, ஏன் எனது மகளிடம் தவறாக நடந்தாய்? என தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்ட 4 பேர்,மாணவியின் தாயை ஆபாசமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து மாணவியின் தாய் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து கார்த்தி உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார்வழக்குப்பதிவு செய்து, கார்த்தியை கைது செய்து கவனித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment