FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, September 14, 2018

உளுந்தூர் பேட்டை அருகே வாய் பேச முடியாத 9 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் வீடு புகுந்து கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பு


08.09.2018, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த வாய் பேச முடியாத 9 வயதுசிறுமி, அதேபகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்துள்ளார்.

சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பாத நிலையில், அவர் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த கருவேப்பிலைபாளையம் கிராமத்தை சேர்ந்த சீதாராமன்என்பவரது மகன் கார்த்தி மாணவியின் வீட்டுக்குள் நுழைந்து சிறுமியை கொடூரமாக கற்பழித்துள்ளார்.

அந்த சிறுமியிடம் நடந்ததை வெளியில் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளார். பின்னர் கார்த்தி மீண்டும் சிறுமியை கற்பழிக்க முயன்றபோது சிறுமியின் பெற்றோர்கள் விட்டுக்கு வந்துவிட்டனர். உடனடியாக கார்த்தி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அப்போது அந்த வாய்பேச முடியாத அந்த சிறுமி, தனக்கு நேர்ந்ததை சைகை மூலம் பெற்றோரிடம் சொன்னார். இதில் அதிர்ந்து போன சிறுமியின் பெற்றோர் கார்த்திக்வீட்டுக்கு சென்று, ஏன் எனது மகளிடம் தவறாக நடந்தாய்? என தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்ட 4 பேர்,மாணவியின் தாயை ஆபாசமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து மாணவியின் தாய் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து கார்த்தி உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார்வழக்குப்பதிவு செய்து, கார்த்தியை கைது செய்து கவனித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment