FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, September 28, 2018

அயனாவரம் சிறுமி வன்புணர்வு வழக்கு: 6 பேர் மீதான குண்டாஸ் குறித்து கேள்வி!

27.09.2018
சென்னை அயனாவரத்தில் 11 வயது காது கேளாத சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 17 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 17 பேரில், 6 பேர் மீது குண்டாஸ் வழக்கு போடப்பட்டுள்ளது. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.

சென்னை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் பாலியல் கொடுமையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்ட (போக்சோ) பிரிவுகளில் சிறப்பு அரசு வழக்கறிஞர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார். மேலும், 6 பேர் மீது குண்டாஸ் வழக்கும் போடப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து 6 பேரின் குடும்பங்களும், நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. இது குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ‘குண்டாஸ் சட்டம் குறித்து முறையான விதிகள் பின்பற்றப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நீதிமன்றம், அரசு தரப்பிடம் குற்றச்சாட்டுக்கான பதில் மனுவை, 3 வாரத்தில் தாக்கல் செய்யச் சொல்லி உத்தரவிட்டுள்ளது.

அயனாவரத்தில் சிறுமி வசித்து வந்த அபார்ட்மென்டின் லிஃப்ட்மேன், பாதுகாவலர்கள், ப்ளம்பர்கள், எலக்ட்ரீஷியன் மற்றும் பராமரிப்பு பணியாளர்களால் 7 மாத காலம் சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

தனக்கு நேர்ந்த கொடுமைகளை சிறுமி தனது சகோதரியிடம் சொன்ன பின்னர், பெற்றோர் அளித்த புகாரின்படி போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். போலீஸாரின் தகவலின்படி மயக்க ஊசி, மயக்க மருந்து கலக்கப்பட்ட பானங்கள் உள்ளிட்டவற்றை அளித்து சிறுமியை 17 பேர் கொண்ட கும்பல் வன்புணர்வு செய்து வந்துள்ளது தெரிந்தது.

No comments:

Post a Comment