FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, September 7, 2018

காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்காக உதயமாகிறது 'வானவில்'

02.09.2018 கோவை:ஆர்.எஸ்.புரம், காதுகேளாதோர் பள்ளி வளாகத்தில், பத்து லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட, மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி மையம், வானவில் என்ற பெயரில், இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், கடந்தாண்டு மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு, ஆரம்பகட்ட பயிற்சி மையம், அனைத்து வட்டாரங்களிலும் துவங்கப்பட்டது. ஆர்.எஸ்.புரம், காதுகேளாதோர் பள்ளி வளாகத்தில் செயல்படும் மையத்தில், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின், குறைபாடுகள் கண்டறியப்பட்டு, துவக்க நிலையில் கிசிச்சை அளிக்கப்படுகிறது.கோயமுத்துார் சாய் சிட்டி ரோட்டரி கிளப், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், இம்மையத்தை அதிநவீன வசதிகள் அடங்கிய மையமாக மாற்றியுள்ளது. தேவையான பயிற்சி உபகரணங்களுடன், சுவர்பூச்சு, வண்ண ஓவியங்கள், கழிவறைகள், காத்திருப்பு அறை, படிப்பகம் என பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட இம்மையத்தின் திறப்பு விழா, இன்று காலை நடக்கிறது. இம்மையத்தில், 15 குழந்தைகள் அடிப்படை பயிற்சி பெறுவதாக, பிசியோதெரபிஸ்ட் மதனகோபால் தெரிவித்தார்.

No comments:

Post a Comment