FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, September 7, 2018

காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்காக உதயமாகிறது 'வானவில்'

02.09.2018 கோவை:ஆர்.எஸ்.புரம், காதுகேளாதோர் பள்ளி வளாகத்தில், பத்து லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட, மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி மையம், வானவில் என்ற பெயரில், இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், கடந்தாண்டு மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு, ஆரம்பகட்ட பயிற்சி மையம், அனைத்து வட்டாரங்களிலும் துவங்கப்பட்டது. ஆர்.எஸ்.புரம், காதுகேளாதோர் பள்ளி வளாகத்தில் செயல்படும் மையத்தில், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின், குறைபாடுகள் கண்டறியப்பட்டு, துவக்க நிலையில் கிசிச்சை அளிக்கப்படுகிறது.கோயமுத்துார் சாய் சிட்டி ரோட்டரி கிளப், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், இம்மையத்தை அதிநவீன வசதிகள் அடங்கிய மையமாக மாற்றியுள்ளது. தேவையான பயிற்சி உபகரணங்களுடன், சுவர்பூச்சு, வண்ண ஓவியங்கள், கழிவறைகள், காத்திருப்பு அறை, படிப்பகம் என பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட இம்மையத்தின் திறப்பு விழா, இன்று காலை நடக்கிறது. இம்மையத்தில், 15 குழந்தைகள் அடிப்படை பயிற்சி பெறுவதாக, பிசியோதெரபிஸ்ட் மதனகோபால் தெரிவித்தார்.

No comments:

Post a Comment