FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, September 7, 2018

காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்காக உதயமாகிறது 'வானவில்'

02.09.2018 கோவை:ஆர்.எஸ்.புரம், காதுகேளாதோர் பள்ளி வளாகத்தில், பத்து லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட, மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி மையம், வானவில் என்ற பெயரில், இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், கடந்தாண்டு மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு, ஆரம்பகட்ட பயிற்சி மையம், அனைத்து வட்டாரங்களிலும் துவங்கப்பட்டது. ஆர்.எஸ்.புரம், காதுகேளாதோர் பள்ளி வளாகத்தில் செயல்படும் மையத்தில், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின், குறைபாடுகள் கண்டறியப்பட்டு, துவக்க நிலையில் கிசிச்சை அளிக்கப்படுகிறது.கோயமுத்துார் சாய் சிட்டி ரோட்டரி கிளப், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், இம்மையத்தை அதிநவீன வசதிகள் அடங்கிய மையமாக மாற்றியுள்ளது. தேவையான பயிற்சி உபகரணங்களுடன், சுவர்பூச்சு, வண்ண ஓவியங்கள், கழிவறைகள், காத்திருப்பு அறை, படிப்பகம் என பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட இம்மையத்தின் திறப்பு விழா, இன்று காலை நடக்கிறது. இம்மையத்தில், 15 குழந்தைகள் அடிப்படை பயிற்சி பெறுவதாக, பிசியோதெரபிஸ்ட் மதனகோபால் தெரிவித்தார்.

No comments:

Post a Comment