FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, September 13, 2018

காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கான பரதநாட்டிய கலை சிறப்பு பயிற்சி முகாம்

13.09.2018
திருப்பூர்:திருப்பூரில் இயங்கி வரும், சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூடம் சார்பில், சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. இதில், டாக்டர். விஜய் மாதவன், மாணவியருக்கு பயிற்சி அளித்தார். அவர் பேசியதாவது: பரதநாட்டியம் என்பது காலங்காலமாக வாய்மொழியாக கற்றுக் கொடுக்கப்பட்ட கலை. இதனை ஏட்டில் எழுதி, ஒரு பாட புத்தகம் போல் வடிவமைக்கும் முயற்சியே 'நாட்டியோ கிராஃபி'. பரதநாட்டிய அசைவுகளை எல்லாம் எழுத்து மூலமாக சுருக்கமாக கற்றுக்கொள்ள உதவும் ஒரு நுட்பம். மாணவியர் பாடங்களை நினைவு கூற உறுதுணையாக இருக்கும். இதைக்கற்று கொள்ள, வயது வரம்பு தேவையில்லை. மாணவர்கள் அடவுகள் ஏற்கனவே கற்றவராக இருத்தல் அவசியம். காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளும் கற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு, அவர் பேசினார். சாய் கிருஷ்ணா நுண் கலைக்கூட இயக்குனர் சந்தியா சங்கர் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment