FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, September 13, 2018

காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கான பரதநாட்டிய கலை சிறப்பு பயிற்சி முகாம்

13.09.2018
திருப்பூர்:திருப்பூரில் இயங்கி வரும், சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூடம் சார்பில், சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. இதில், டாக்டர். விஜய் மாதவன், மாணவியருக்கு பயிற்சி அளித்தார். அவர் பேசியதாவது: பரதநாட்டியம் என்பது காலங்காலமாக வாய்மொழியாக கற்றுக் கொடுக்கப்பட்ட கலை. இதனை ஏட்டில் எழுதி, ஒரு பாட புத்தகம் போல் வடிவமைக்கும் முயற்சியே 'நாட்டியோ கிராஃபி'. பரதநாட்டிய அசைவுகளை எல்லாம் எழுத்து மூலமாக சுருக்கமாக கற்றுக்கொள்ள உதவும் ஒரு நுட்பம். மாணவியர் பாடங்களை நினைவு கூற உறுதுணையாக இருக்கும். இதைக்கற்று கொள்ள, வயது வரம்பு தேவையில்லை. மாணவர்கள் அடவுகள் ஏற்கனவே கற்றவராக இருத்தல் அவசியம். காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளும் கற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு, அவர் பேசினார். சாய் கிருஷ்ணா நுண் கலைக்கூட இயக்குனர் சந்தியா சங்கர் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment