FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, June 3, 2013

தமிழக அரசின் புதிய சலுகைகள்


மாற்றுத் திறனாளிகளுக்கு தங்கும் வசதியுடன் கூடிய தொழிற்பயிற்சி நிலையங்கள், 20 மாவட்டங்களில் துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்புகள்:

* சமூக நலத் துறையின் சேவை இல்லங்கள் மற்றும் அரசு குழந்தைகள் காப்பகங்களில் தங்கி, 12ம் வகுப்பு படித்த, நூறு மாணவியருக்கு, உயர்கல்வி படிக்க நிதியுதவி வழங்கப்படும். இதன்படி, உணவு, சீருடை மற்றும் கல்விச் செலவுக்காக, பட்டப்படிப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு, ஒரு ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாயும், தொழில் படிப்பு படிக்க, ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும்.

* இதேபோல, அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பயிற்சி பெறும் நூறு மாணவியருக்கு, ஆண்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும்.

* அனைத்து சேவை இல்ல மாணவியரும் கல்விச் சுற்றுலா சென்று வர ஏற்பாடு செய்யப்படும்.

* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பார்வையற்ற மாணவ, மாணவியர், 560 பேருக்கு, அரசு வழங்கும் மடிக் கணினியுடன், பேசும் மென்பொருள் சேர்த்து வழங்கப்படும்.

* செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் 1,000 பேருக்கு, காதுக்கு பின்னால் அணியும் காதொலிக் கருவிகள் வழங்கப்படும்.

* பள்ளி இறுதித் தேர்வில் (10 மற்றும் 12ம் வகுப்பு) மாநில மற்றும் மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் காதுகேளாத மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசுத் தொகை வழங்கப்படும்.

* மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், தங்கும் வசதியுடன் கூடிய தொழில் பயிற்சி நிலையம், 20 மாவட்டங்களில் துவக்கப்படும்.

* மாற்றுத் திறனாளிகள் 400 பேருக்கு, பெட்ரோலில் இயங்கும் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.

* பார்வைத் திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்காக 20 மாவட்டங்களில் ஆரம்பநிலை பயிற்சி மையங்கள் துவக்கப்படும்.

* மனவளர்ச்சி குன்றிய 14 வயதுக்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு, 10 மாவட்டங்களில் தொழிற்பயிற்சியுடன் கூடிய பத்து இல்லங்களும், 14 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 10 மாவட்டங்களில் தொழிற்பயிற்சியுடன் கூடிய இல்லங்களும் துவக்கப்படும்.

No comments:

Post a Comment