FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, June 3, 2013

தமிழக அரசின் புதிய சலுகைகள்


மாற்றுத் திறனாளிகளுக்கு தங்கும் வசதியுடன் கூடிய தொழிற்பயிற்சி நிலையங்கள், 20 மாவட்டங்களில் துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்புகள்:

* சமூக நலத் துறையின் சேவை இல்லங்கள் மற்றும் அரசு குழந்தைகள் காப்பகங்களில் தங்கி, 12ம் வகுப்பு படித்த, நூறு மாணவியருக்கு, உயர்கல்வி படிக்க நிதியுதவி வழங்கப்படும். இதன்படி, உணவு, சீருடை மற்றும் கல்விச் செலவுக்காக, பட்டப்படிப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு, ஒரு ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாயும், தொழில் படிப்பு படிக்க, ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும்.

* இதேபோல, அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பயிற்சி பெறும் நூறு மாணவியருக்கு, ஆண்டுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும்.

* அனைத்து சேவை இல்ல மாணவியரும் கல்விச் சுற்றுலா சென்று வர ஏற்பாடு செய்யப்படும்.

* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பார்வையற்ற மாணவ, மாணவியர், 560 பேருக்கு, அரசு வழங்கும் மடிக் கணினியுடன், பேசும் மென்பொருள் சேர்த்து வழங்கப்படும்.

* செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் 1,000 பேருக்கு, காதுக்கு பின்னால் அணியும் காதொலிக் கருவிகள் வழங்கப்படும்.

* பள்ளி இறுதித் தேர்வில் (10 மற்றும் 12ம் வகுப்பு) மாநில மற்றும் மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் காதுகேளாத மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசுத் தொகை வழங்கப்படும்.

* மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், தங்கும் வசதியுடன் கூடிய தொழில் பயிற்சி நிலையம், 20 மாவட்டங்களில் துவக்கப்படும்.

* மாற்றுத் திறனாளிகள் 400 பேருக்கு, பெட்ரோலில் இயங்கும் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.

* பார்வைத் திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்காக 20 மாவட்டங்களில் ஆரம்பநிலை பயிற்சி மையங்கள் துவக்கப்படும்.

* மனவளர்ச்சி குன்றிய 14 வயதுக்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு, 10 மாவட்டங்களில் தொழிற்பயிற்சியுடன் கூடிய பத்து இல்லங்களும், 14 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 10 மாவட்டங்களில் தொழிற்பயிற்சியுடன் கூடிய இல்லங்களும் துவக்கப்படும்.

No comments:

Post a Comment