FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, June 19, 2013

இலவச காப்பீட்டுத் திட்டத்தில் மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு வருமான உச்சவரம்பு நீக்கம்

சென்னை: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயன் பெற மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பை நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த திமுக ஆட்சி காலத்தில் நடைமுறையில் இருந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லாமல் பயன்பெற சலுகை அளிக்கப்பட்டது. முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டம் என மாற்றியமைத்து கூடுதலாக பல சலுகைகளை இந்த அரசு வழங்கி வருகிறது. திட்டத்தை மாற்றி அமைக்கும் போது மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இதனை மாற்றி மாற்றுத் திறனாளிகளுக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும். வருமான உச்சவரம்பை நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை வைத்தது. அதனை ஏற்று தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. குடும்பத்தில் மாற்றுத் திறனாளியாக ஒருவர் இருந்தாலும் அக்குடும்பம் வருமான வரம்பு ஏதுமின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயனாளியாக சேர்க்க அரசு ஆணையிட்டுள்ளது.

No comments:

Post a Comment