FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, June 19, 2013

இலவச காப்பீட்டுத் திட்டத்தில் மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு வருமான உச்சவரம்பு நீக்கம்

சென்னை: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயன் பெற மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பை நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த திமுக ஆட்சி காலத்தில் நடைமுறையில் இருந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லாமல் பயன்பெற சலுகை அளிக்கப்பட்டது. முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டம் என மாற்றியமைத்து கூடுதலாக பல சலுகைகளை இந்த அரசு வழங்கி வருகிறது. திட்டத்தை மாற்றி அமைக்கும் போது மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இதனை மாற்றி மாற்றுத் திறனாளிகளுக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும். வருமான உச்சவரம்பை நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை வைத்தது. அதனை ஏற்று தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. குடும்பத்தில் மாற்றுத் திறனாளியாக ஒருவர் இருந்தாலும் அக்குடும்பம் வருமான வரம்பு ஏதுமின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயனாளியாக சேர்க்க அரசு ஆணையிட்டுள்ளது.

No comments:

Post a Comment