FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, June 19, 2013

இலவச காப்பீட்டுத் திட்டத்தில் மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு வருமான உச்சவரம்பு நீக்கம்

சென்னை: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயன் பெற மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பை நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த திமுக ஆட்சி காலத்தில் நடைமுறையில் இருந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லாமல் பயன்பெற சலுகை அளிக்கப்பட்டது. முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டம் என மாற்றியமைத்து கூடுதலாக பல சலுகைகளை இந்த அரசு வழங்கி வருகிறது. திட்டத்தை மாற்றி அமைக்கும் போது மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இதனை மாற்றி மாற்றுத் திறனாளிகளுக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும். வருமான உச்சவரம்பை நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை வைத்தது. அதனை ஏற்று தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. குடும்பத்தில் மாற்றுத் திறனாளியாக ஒருவர் இருந்தாலும் அக்குடும்பம் வருமான வரம்பு ஏதுமின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயனாளியாக சேர்க்க அரசு ஆணையிட்டுள்ளது.

No comments:

Post a Comment