FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, June 27, 2013

மாற்றுத்திறனாளிகளுக்கு இன்ஷூரன்ஸ்

 
உடற்குறைபாடு உள்ளவர்களை உலகம் ஒதுக்கித் தள்ளிய காலங்கள் மலையேறிக்கொண்டிருக்கின்றன. கல்வி, வேலை என பலவற்றிலும் அவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்துவருகிறது. அந்த வகையில் இப்போது மாற்றுத் திறனாளிகளுக்காகவும் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் வர ஆரம்பித்திருக்கிறது…

2001, மக்கள் தொகை கணக்கின்படி, இந்தியாவில் இரண்டு கோடி மாற்றுத் திறனாளிகள் இருக்கிறார்கள். இவர்களை உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், காதுகேளாதோர், மனநலம் குன்றியோர் என பல பிரிவுகளாகப் பிரித்து காப்பீடு வழங்குகிறது இன்ஷூரன்ஸ் துறை.

பிரீமியம் எவ்வளவு?

மாற்றுத் திறனாளிகளுக்கு இன்ஷூரன்ஸ் வழங்குவதில் அதிக ரிஸ்க் இருப்பதாக இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கருதுவதால் பிரீமியம் தொகை அதிகமாக இருக்கும். பொதுவாக, டிரெடிஷனல் பாலிசிகளில், உடல் பாதிப்பின் சதவிகிதத்தைப் பொறுத்து பிரீமியம் தொகை இருக்கும். மருத்துவர் பரிசோதனை செய்து எவ்வளவு சதவிகிதம் பாதிப்பு இருக்கிறது என்று சான்றிதழ் கொடுப்பார். அதைப் பொறுத்தே பிரீமியம் தொகை இருக்கும். 40-50% பாதிப்பு என மருத்துவர் சான்றிதழ் அளித்தால் சாதாரணமாக வசூலிக்கும் பிரீமியம் தொகையே வசூலிப்பார்கள். இதுவே, இரண்டு கண்களிலும் பார்வையில்லை என்றால் 100% மாற்றுத் திறனாளியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு பிரீமியம் சுமார் 20-30% வரை அதிகமாக இருக்கும். இது மாதிரியே மற்ற குறைபாடுகளுக்கும் பிரீமியம் தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது.

டிரெடிஷனல் பாலிசி!

40-50% மட்டுமே பாதிப்பு, போலியோ மாதிரியான நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் பணியில் இருக்கிறார் என்றால் அனைத்து பாலிசிகளுமே கிடைக்கும். எண்டோமென்ட், மணிபேக், டேர்ம் பாலிசி போன்றவை சாதாரண பிரீமியம் கட்டணத்திலேயே கிடைக்கும். இதுவே 100% பாதிப்பில் உள்ளவர்களுக்கு டேர்ம் பாலிசி கிடைக்காது. எண்டோமென்ட் பாலிசிகளே கிடைக்கும். அதுவும் குறைந்த காப்பீட்டுத் தொகையிலேயே கிடைக்கும். பிரீமியம் தொகையும் அதிகமாக இருக்கும்.



சிறப்பு பாலிசி!

மாற்றுத் திறனாளிகளுக்கென தனியாக சில இன்ஷூரன்ஸ் திட்டங்களை தருகின்றன எல்.ஐ.சி., பஜாஜ் அலையன்ஸ், மேக்ஸ் புபா, யு.டி.ஐ. உள்ளிட்ட சில நிறு வனங்கள். எல்.ஐ.சி. நிறுவனம் மாற்றுத் திறனாளிகளுக்கு என்று ‘ஜீவன் ஆதார்’ என்று தனியாக ஒரு பாலிசி வைத்துள்ளது. இது எண்டோமென்ட் பாலிசி. இதில் பிரீமியம் தொகை சராசரிக் கட்டணத்தைவிட 10% குறைவு. அதுபோக பிரீமியம் வெய்வர், டேர்ம் ரைடர், கிரிட்டிக்கல் இல்னஸ் உள்ளிட்ட ரைடர்களும் உள்ளன.

இந்த வகை இன்ஷூரன்ஸ் பற்றி வெல்த்டிரெயிட்ஸ் நிறுவனத்தின் நிதி ஆலோசகர் அபுபக்கருடன் பேசினோம்:

”யு.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் யு.டி.ஐ. யூலிப் திட்டம் ஒன்றை நடத்துகிறது. பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தத் திட்டத்தை வழங்குகிறது. லைஃப் கவர், எல்.ஐ.சி-யுடன் இணைந்து (குரூப் டேர்ம் இன்ஷூரன்ஸில்) 15 லட்சம் வரை தருகிறது. பர்சனல் ஆக்ஸிடன்ட் கவர், ஹாஸ்பிட்டல் கேஷ் பாலிசி, கிரிட்டிக்கல் இல்னஸ் கவர் உள்ளிட்டவற்றையும் வழங் குகிறது. 

எல்.ஐ.சி. நிறுவனம் எல்.ஐ.சி. ஜீவன் ஆதார், ஜீவன் விஸ்வாஸ் உள்ளிட்ட லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வழங்குகின்றன. இதில் முதலீடு செய்யும்போது மாற்றுத் திறனாளிகளுக்கு 80-யு பிரிவில் 50,000 ரூபாய் வரை வருமான வரிச் சலுகை கிடைக்கும்.. இதுவே 100% மாற்றுத் திறனாளியாக இருந்தால் ஒரு லட்சம் வரை இந்தப் பிரிவில் வருமான வரிச்சலுகை கிடைக்கும்.

பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் எபிலிட்டி இன்ஷூரன்ஸ் என்ற பெயரில் மாற்றுத் திறனாளிகளுக்கு என்று லைஃப் இன்ஷூரன்ஸ், மோட்டார் இன்ஷூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி களைத் தருகிறது.

சாதாரணமானவர்கள், அவர் களைச் சார்ந்து இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கலாம். அப்படி எடுக்கும்போது அவர் ஏற்கெனவே இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருந்தால், அதற்கு அவர் கட்டிவரும் பிரீமியம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் மாற்றுத் திறனாளிக்குரிய இன்ஷூரன்ஸுக்கான பிரீமியத் துக்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்படும்” என்றார்.

No comments:

Post a Comment