FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Thursday, June 27, 2013

மாற்றுத்திறனாளிகளுக்கு இன்ஷூரன்ஸ்

 
உடற்குறைபாடு உள்ளவர்களை உலகம் ஒதுக்கித் தள்ளிய காலங்கள் மலையேறிக்கொண்டிருக்கின்றன. கல்வி, வேலை என பலவற்றிலும் அவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்துவருகிறது. அந்த வகையில் இப்போது மாற்றுத் திறனாளிகளுக்காகவும் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் வர ஆரம்பித்திருக்கிறது…

2001, மக்கள் தொகை கணக்கின்படி, இந்தியாவில் இரண்டு கோடி மாற்றுத் திறனாளிகள் இருக்கிறார்கள். இவர்களை உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், காதுகேளாதோர், மனநலம் குன்றியோர் என பல பிரிவுகளாகப் பிரித்து காப்பீடு வழங்குகிறது இன்ஷூரன்ஸ் துறை.

பிரீமியம் எவ்வளவு?

மாற்றுத் திறனாளிகளுக்கு இன்ஷூரன்ஸ் வழங்குவதில் அதிக ரிஸ்க் இருப்பதாக இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கருதுவதால் பிரீமியம் தொகை அதிகமாக இருக்கும். பொதுவாக, டிரெடிஷனல் பாலிசிகளில், உடல் பாதிப்பின் சதவிகிதத்தைப் பொறுத்து பிரீமியம் தொகை இருக்கும். மருத்துவர் பரிசோதனை செய்து எவ்வளவு சதவிகிதம் பாதிப்பு இருக்கிறது என்று சான்றிதழ் கொடுப்பார். அதைப் பொறுத்தே பிரீமியம் தொகை இருக்கும். 40-50% பாதிப்பு என மருத்துவர் சான்றிதழ் அளித்தால் சாதாரணமாக வசூலிக்கும் பிரீமியம் தொகையே வசூலிப்பார்கள். இதுவே, இரண்டு கண்களிலும் பார்வையில்லை என்றால் 100% மாற்றுத் திறனாளியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு பிரீமியம் சுமார் 20-30% வரை அதிகமாக இருக்கும். இது மாதிரியே மற்ற குறைபாடுகளுக்கும் பிரீமியம் தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது.

டிரெடிஷனல் பாலிசி!

40-50% மட்டுமே பாதிப்பு, போலியோ மாதிரியான நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் பணியில் இருக்கிறார் என்றால் அனைத்து பாலிசிகளுமே கிடைக்கும். எண்டோமென்ட், மணிபேக், டேர்ம் பாலிசி போன்றவை சாதாரண பிரீமியம் கட்டணத்திலேயே கிடைக்கும். இதுவே 100% பாதிப்பில் உள்ளவர்களுக்கு டேர்ம் பாலிசி கிடைக்காது. எண்டோமென்ட் பாலிசிகளே கிடைக்கும். அதுவும் குறைந்த காப்பீட்டுத் தொகையிலேயே கிடைக்கும். பிரீமியம் தொகையும் அதிகமாக இருக்கும்.



சிறப்பு பாலிசி!

மாற்றுத் திறனாளிகளுக்கென தனியாக சில இன்ஷூரன்ஸ் திட்டங்களை தருகின்றன எல்.ஐ.சி., பஜாஜ் அலையன்ஸ், மேக்ஸ் புபா, யு.டி.ஐ. உள்ளிட்ட சில நிறு வனங்கள். எல்.ஐ.சி. நிறுவனம் மாற்றுத் திறனாளிகளுக்கு என்று ‘ஜீவன் ஆதார்’ என்று தனியாக ஒரு பாலிசி வைத்துள்ளது. இது எண்டோமென்ட் பாலிசி. இதில் பிரீமியம் தொகை சராசரிக் கட்டணத்தைவிட 10% குறைவு. அதுபோக பிரீமியம் வெய்வர், டேர்ம் ரைடர், கிரிட்டிக்கல் இல்னஸ் உள்ளிட்ட ரைடர்களும் உள்ளன.

இந்த வகை இன்ஷூரன்ஸ் பற்றி வெல்த்டிரெயிட்ஸ் நிறுவனத்தின் நிதி ஆலோசகர் அபுபக்கருடன் பேசினோம்:

”யு.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் யு.டி.ஐ. யூலிப் திட்டம் ஒன்றை நடத்துகிறது. பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தத் திட்டத்தை வழங்குகிறது. லைஃப் கவர், எல்.ஐ.சி-யுடன் இணைந்து (குரூப் டேர்ம் இன்ஷூரன்ஸில்) 15 லட்சம் வரை தருகிறது. பர்சனல் ஆக்ஸிடன்ட் கவர், ஹாஸ்பிட்டல் கேஷ் பாலிசி, கிரிட்டிக்கல் இல்னஸ் கவர் உள்ளிட்டவற்றையும் வழங் குகிறது. 

எல்.ஐ.சி. நிறுவனம் எல்.ஐ.சி. ஜீவன் ஆதார், ஜீவன் விஸ்வாஸ் உள்ளிட்ட லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வழங்குகின்றன. இதில் முதலீடு செய்யும்போது மாற்றுத் திறனாளிகளுக்கு 80-யு பிரிவில் 50,000 ரூபாய் வரை வருமான வரிச் சலுகை கிடைக்கும்.. இதுவே 100% மாற்றுத் திறனாளியாக இருந்தால் ஒரு லட்சம் வரை இந்தப் பிரிவில் வருமான வரிச்சலுகை கிடைக்கும்.

பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் எபிலிட்டி இன்ஷூரன்ஸ் என்ற பெயரில் மாற்றுத் திறனாளிகளுக்கு என்று லைஃப் இன்ஷூரன்ஸ், மோட்டார் இன்ஷூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி களைத் தருகிறது.

சாதாரணமானவர்கள், அவர் களைச் சார்ந்து இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கலாம். அப்படி எடுக்கும்போது அவர் ஏற்கெனவே இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருந்தால், அதற்கு அவர் கட்டிவரும் பிரீமியம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் மாற்றுத் திறனாளிக்குரிய இன்ஷூரன்ஸுக்கான பிரீமியத் துக்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்படும்” என்றார்.

No comments:

Post a Comment