FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, June 26, 2013

விஸ்வரூப விஷ்ணுராம்


சிறிய கஷ்டம் வந்தால்கூட நம்மில் பல பேர் சோர்ந்து துவண்டு விடுவோம். ஆதரவாக சாய்ந்துகொள்ள ஒரு தோள் கிடைக்காதா என்று ஏங்குவோம். ஆனால், காது கேட்காத, வாய் பேச முடியாத மாணவர் ஒருவன் இந்தக் குறைகளைச் சொல்லி அழுது கொண்டிருக்காமல், தேசிய அளவில் சாதனை புரிந்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறான்.திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் விஷ்ணுராம் தான் அந்த சாதனை மாணவன்.அம்மா வாய் பேச முடியாதவர். மூளை நோயால் பாதிக்கப்பட்டவர். அப்பா கூலித் தொழிலாளி. சாதிப்பதற்கான முகாந்திரமே இல்லாமல் முடங்கிக் கிடந்த விஷ்ணுராம், அப்பாவின் தீவிர பயிற்சியினாலும் இடைவிடாத ஊக்கத்தினாலும் கூடைப்பந்து வீரராக உருவெடுத்திருக்கிறார். சமீபத்தில் சட்டிஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற 14 வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி சார்பில் கலந்துகொண்ட விஷ்ணுராம், இந்த விளையாட்டுத் துறையின் சிறந்த ஆட்டக்காரருக்கான (மேன் ஆப் தி சீரீஸ்) விருது பெற்று, தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.தமது சாதனை குறித்து விஷ்ணுராம் சைகையிலேயே நம்மிடம் பேசினார்.அம்மா அப்பாவின் ஊக்கம் தான் என்னுடைய இந்த சாதனைக்குக் காரணம். நான் ஒருபோதும் மாற்றுத் திறனாளி மாணவன் என்று சிந்தித்தது இல்லை. இது என்னுடைய சாதனையின் தொடக்கம்தான். எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகள் செய்து, என் பெற்றோரின் கண்ணீரைத் துடைப்பேன்," பெற்றோரைக் கட்டிக் கொள்கிறார் விஷ்ணு ராம்.விஷ்ணுராமிடமிருந்து நாம் இன்னும் நிறைய விளங்கிக் கொள்ள வேண்டும்.

- ஆதலையூர் சூரியகுமார்

No comments:

Post a Comment