FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, June 26, 2013

விஸ்வரூப விஷ்ணுராம்


சிறிய கஷ்டம் வந்தால்கூட நம்மில் பல பேர் சோர்ந்து துவண்டு விடுவோம். ஆதரவாக சாய்ந்துகொள்ள ஒரு தோள் கிடைக்காதா என்று ஏங்குவோம். ஆனால், காது கேட்காத, வாய் பேச முடியாத மாணவர் ஒருவன் இந்தக் குறைகளைச் சொல்லி அழுது கொண்டிருக்காமல், தேசிய அளவில் சாதனை புரிந்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறான்.திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் விஷ்ணுராம் தான் அந்த சாதனை மாணவன்.அம்மா வாய் பேச முடியாதவர். மூளை நோயால் பாதிக்கப்பட்டவர். அப்பா கூலித் தொழிலாளி. சாதிப்பதற்கான முகாந்திரமே இல்லாமல் முடங்கிக் கிடந்த விஷ்ணுராம், அப்பாவின் தீவிர பயிற்சியினாலும் இடைவிடாத ஊக்கத்தினாலும் கூடைப்பந்து வீரராக உருவெடுத்திருக்கிறார். சமீபத்தில் சட்டிஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற 14 வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி சார்பில் கலந்துகொண்ட விஷ்ணுராம், இந்த விளையாட்டுத் துறையின் சிறந்த ஆட்டக்காரருக்கான (மேன் ஆப் தி சீரீஸ்) விருது பெற்று, தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.தமது சாதனை குறித்து விஷ்ணுராம் சைகையிலேயே நம்மிடம் பேசினார்.அம்மா அப்பாவின் ஊக்கம் தான் என்னுடைய இந்த சாதனைக்குக் காரணம். நான் ஒருபோதும் மாற்றுத் திறனாளி மாணவன் என்று சிந்தித்தது இல்லை. இது என்னுடைய சாதனையின் தொடக்கம்தான். எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகள் செய்து, என் பெற்றோரின் கண்ணீரைத் துடைப்பேன்," பெற்றோரைக் கட்டிக் கொள்கிறார் விஷ்ணு ராம்.விஷ்ணுராமிடமிருந்து நாம் இன்னும் நிறைய விளங்கிக் கொள்ள வேண்டும்.

- ஆதலையூர் சூரியகுமார்

No comments:

Post a Comment