FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Sunday, August 28, 2016

அரசு விடுதிகளில் சமையலர் பணி: செப்.6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

27.08.2016, சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் அழகுமீனா (கூடுதல் பொறுப்பு) வெளியிட்ட செய்தி குறிப்பு:சென்னை மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் விடுதிகளில் காலியாக உள்ள ஆண் மற்றும் பெண் சமையலர் பணியிடங்கள் (ஊதிய விகிதம் 4800-10,000 + தர ஊதியம் ரூ.1300) நேர்காணல் மூலம் நிரப்பப்பட உள்ளது. சென்னை மாவட்டத்தில் வசிக்கும், 18 முதல் 35 வயதிற்குட்பட்ட, சைவ, அசைவ உணவு சமைக்க தெரிந்த, தமிழில் எழுதப்படிக்க தெரிந்த ஆதிதிராவிடர், அருந்ததியினர் மற்றும் பழங்குடியினர்கள் விண்ணப்பிக்கலாம். 

தகுதி உள்ளவர்கள் தங்கள் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், பாலினம், பிறந்த தேதி, அஞ்சல் முகவரி, கல்வித்தகுதி, சாதி, முன்னுரிமை விவரம் (மாற்றுத்திறனாளி, விதவை, முன்னாள் ராணுவத்தினர், கலப்பு திருமணம், மொழிப்போர் தியாகி போன்றவைகள்) வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பின் அதன் பதிவு எண், குடும்ப அட்டை எண், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள், இருப்பிடச்சான்று ஆகிய விவரங்கள் மற்றும் உரிய சான்றிதழ் நகல்களுடன், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம், 2 வது தளத்தில் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரில் அணுக வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment