FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Sunday, August 28, 2016

கரம் பிடிக்க மனம் விரும்புதே...

27.08.2016, மதுரை, திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். தங்களது வாழ்விலும் திருமணம் நடக்குமா என்ற ஏக்கத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் நல் வாழ்க்கை அமையும் என எடுத்து காட்டும் வகையில் மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நடந்தது.திருமணம் செய்ய விரும்பும் மாற்றுதிறனாளிகள் தங்களுக்கு எந்த மாதிரியான துணை தேவை என கூறி ஜோடியினை தேர்வு செய்தனர். 'இவர்களை பார்த்து 'பாவம் என பரிதாபபட வேண்டாம். வாழ்க்கை துணையாக்கி ஒருவருக்கொருவர் துணையாக இருந்து வாழ்ந்து காட்டுங்கள்' என்ற அறிவிப்பு பங்கேற்றவர்களை உற்சாகப்படுத்தியது.
அன்னநடை நடந்து கொஞ்சும் மொழி பேசி இளம்பெண்கள் சிலர் சுயம்வரத்திற்கு வந்து 'எங்களுக்கு மாற்றுத்திறனாளி மாப்பிள்ளை தேவை' எனக்கூறி கைதட்டலை பெற்றனர்.

கடந்த ஆண்டு சுயம்வரத்தில் புகைப்பட கலைஞர் வாசுதேவன், மாற்றுத்திறனாளி பூங்கோதையை வாழ்க்கை துணையாக்கினார். தற்போது தங்கை பூங்கொடிக்கு மாற்றுத்திறனாளி மண
மகனை தேர்வு செய்ய வந்திருந்தார்.

''மாற்றுத்திறனாளி மனைவியுடன் மகிழ்ச்சியாக உள்ளேன். என் தங்கையும் இதுபோல் மகிழ்ச்சியாக வாழ மாற்றுத்திறனாளியை விரும்புகிறார். அவரது வாழ்வில் ஒருவருக்கு உதவும் பாக்கியம் கிடைக்கும்,'' என்கிறார் வாசுதேவன்.

பட்டதாரி பாக்கியலட்சுமி,''மாற்றுத்திறனாளிக்கு உதவ வேண்டும் என்பது சிறுவயது முதலே ஆர்வம். அதனால் மாற்றுத்திறனாளி தேர்வு செய்கிறேன்'' என்றார். கேட்டரிங் படித்த ராஜா மாற்றுத்திறனாளி பெண்ணை தேர்வு செய்ய வந்திருந்தார்.
சுயம்வரத்தில் தேர்வாகும் ஜோடிகளுக்கு பூ வைத்தல், நிச்சயதார்த்தம் என சடங்குகள் முடிந்து, டிசம்பரில் சென்னையில் திருமணம் நடக்க உள்ளது. ஜோடிக்கு ஒன்றரை லட்ச ரூபாய் சீர்வரிசை பொருட்கள் வழங்க மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

No comments:

Post a Comment