FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, August 28, 2016

கரம் பிடிக்க மனம் விரும்புதே...

27.08.2016, மதுரை, திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். தங்களது வாழ்விலும் திருமணம் நடக்குமா என்ற ஏக்கத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் நல் வாழ்க்கை அமையும் என எடுத்து காட்டும் வகையில் மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நடந்தது.திருமணம் செய்ய விரும்பும் மாற்றுதிறனாளிகள் தங்களுக்கு எந்த மாதிரியான துணை தேவை என கூறி ஜோடியினை தேர்வு செய்தனர். 'இவர்களை பார்த்து 'பாவம் என பரிதாபபட வேண்டாம். வாழ்க்கை துணையாக்கி ஒருவருக்கொருவர் துணையாக இருந்து வாழ்ந்து காட்டுங்கள்' என்ற அறிவிப்பு பங்கேற்றவர்களை உற்சாகப்படுத்தியது.
அன்னநடை நடந்து கொஞ்சும் மொழி பேசி இளம்பெண்கள் சிலர் சுயம்வரத்திற்கு வந்து 'எங்களுக்கு மாற்றுத்திறனாளி மாப்பிள்ளை தேவை' எனக்கூறி கைதட்டலை பெற்றனர்.

கடந்த ஆண்டு சுயம்வரத்தில் புகைப்பட கலைஞர் வாசுதேவன், மாற்றுத்திறனாளி பூங்கோதையை வாழ்க்கை துணையாக்கினார். தற்போது தங்கை பூங்கொடிக்கு மாற்றுத்திறனாளி மண
மகனை தேர்வு செய்ய வந்திருந்தார்.

''மாற்றுத்திறனாளி மனைவியுடன் மகிழ்ச்சியாக உள்ளேன். என் தங்கையும் இதுபோல் மகிழ்ச்சியாக வாழ மாற்றுத்திறனாளியை விரும்புகிறார். அவரது வாழ்வில் ஒருவருக்கு உதவும் பாக்கியம் கிடைக்கும்,'' என்கிறார் வாசுதேவன்.

பட்டதாரி பாக்கியலட்சுமி,''மாற்றுத்திறனாளிக்கு உதவ வேண்டும் என்பது சிறுவயது முதலே ஆர்வம். அதனால் மாற்றுத்திறனாளி தேர்வு செய்கிறேன்'' என்றார். கேட்டரிங் படித்த ராஜா மாற்றுத்திறனாளி பெண்ணை தேர்வு செய்ய வந்திருந்தார்.
சுயம்வரத்தில் தேர்வாகும் ஜோடிகளுக்கு பூ வைத்தல், நிச்சயதார்த்தம் என சடங்குகள் முடிந்து, டிசம்பரில் சென்னையில் திருமணம் நடக்க உள்ளது. ஜோடிக்கு ஒன்றரை லட்ச ரூபாய் சீர்வரிசை பொருட்கள் வழங்க மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

No comments:

Post a Comment