FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, August 10, 2016

கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்

10.08.2016, நெல்லை, 
பராமரிப்பு உதவித்தொகை வழங்கக் கோரி நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்தினாளிகள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

முற்றுகை போராட்டம்

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் நெல்லை மாவட்ட பிரிவு சார்பில் நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகள் வரத்தொடங்கினர். பகல் 11 மணிக்கு மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் நம்புராஜன், மாவட்ட செயலாளர் குமாரசாமி, நெல்லை மருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வர் ராமகுரு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

கோரிக்கைகள்

40 சதவீதம் ஊனம் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நிபந்தனை இல்லாமல் மாதந்தோறும் பராமரிப்பு உதவித்தொகை ரூ.1,000 வழங்க வேண்டும். அதிக அளவு பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500 வழங்க வேண்டும், தென்காசி, சங்கரன்கோவில், அம்பை, சேரன்மாதேவி, வள்ளியூர் ஆகிய ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.

வீடு இல்லாதவர்களுக்கு இலவசமாக வீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. கோஷங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறாளிகள் தனித்தனியாக கோரிக்கை மனுக்களை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் கொடுத்தனர். பின்னர் அவர்கள் தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment