FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, August 19, 2016

செய்திகள்உதவி தொகை விவகாரம்: அரசு உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள்; மாற்றுத்திறனாளிகள் அதிருப்தி

18.08.2016, ஈரோடு: அரசாணை வெளியிடப்பட்டு 6 மாதங்களாகியும் அமல்படுத்த அதிகாரிகள் மறுப்பதால் மாற்றுதிறனாளிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
மாற்றுதிறனாளிகளுக்கு ஊனத்தின் தன்மையை பொறுத்து மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. 40 சதவீத ஊனம் இருந்தாலே உதவித்தொகை வழங்க வேண்டும் என்று மாற்றுதிறனாளிகள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்ததோடு போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா 40 சதவீத ஊனம் இருந்தால் இனி உதவி தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த அரசாணை இதுவரை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் முன்வராததால் மாற்றுதிறனாளிகள் அதிருப்தியடைந்துள்ளனர். இது குறித்து ஈரோடு மாவட்ட சிஐடியு நிர்வாகி பொன்பாரதி கூறுகையில், ‘40 சதவீத ஊனம் இருந்தால் உதவி தொகை வழங்கலாம் என்ற அரசாணை கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால் இந்த அரசாணைப்படி உதவி தொகை கேட்டால் எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்று மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகள் கூறுகின்றனர். 6 மாதங்களாக இதே பதிலை தான் அதிகாரிகள் கூறிவருகின்றனர்.

வழக்கமாக சட்டசபையில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்டும் அறிவிப்புகள் எதுவும் நடைமுறைக்கு வருவதில்லை என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டை உறுதிபடுத்துவதாகத்தான் இதை பார்க்க முடிகின்றது. முதலமைச்சரின் உத்தரவையும், அரசாணையையும் அதிகாரிகள் உடனடியாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு பொன்பாரதி கூறினார்.

No comments:

Post a Comment