FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, August 19, 2016

செய்திகள்உதவி தொகை விவகாரம்: அரசு உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள்; மாற்றுத்திறனாளிகள் அதிருப்தி

18.08.2016, ஈரோடு: அரசாணை வெளியிடப்பட்டு 6 மாதங்களாகியும் அமல்படுத்த அதிகாரிகள் மறுப்பதால் மாற்றுதிறனாளிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
மாற்றுதிறனாளிகளுக்கு ஊனத்தின் தன்மையை பொறுத்து மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. 40 சதவீத ஊனம் இருந்தாலே உதவித்தொகை வழங்க வேண்டும் என்று மாற்றுதிறனாளிகள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்ததோடு போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா 40 சதவீத ஊனம் இருந்தால் இனி உதவி தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த அரசாணை இதுவரை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் முன்வராததால் மாற்றுதிறனாளிகள் அதிருப்தியடைந்துள்ளனர். இது குறித்து ஈரோடு மாவட்ட சிஐடியு நிர்வாகி பொன்பாரதி கூறுகையில், ‘40 சதவீத ஊனம் இருந்தால் உதவி தொகை வழங்கலாம் என்ற அரசாணை கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால் இந்த அரசாணைப்படி உதவி தொகை கேட்டால் எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்று மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகள் கூறுகின்றனர். 6 மாதங்களாக இதே பதிலை தான் அதிகாரிகள் கூறிவருகின்றனர்.

வழக்கமாக சட்டசபையில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்டும் அறிவிப்புகள் எதுவும் நடைமுறைக்கு வருவதில்லை என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டை உறுதிபடுத்துவதாகத்தான் இதை பார்க்க முடிகின்றது. முதலமைச்சரின் உத்தரவையும், அரசாணையையும் அதிகாரிகள் உடனடியாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு பொன்பாரதி கூறினார்.

No comments:

Post a Comment