FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, August 19, 2016

செய்திகள்உதவி தொகை விவகாரம்: அரசு உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள்; மாற்றுத்திறனாளிகள் அதிருப்தி

18.08.2016, ஈரோடு: அரசாணை வெளியிடப்பட்டு 6 மாதங்களாகியும் அமல்படுத்த அதிகாரிகள் மறுப்பதால் மாற்றுதிறனாளிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
மாற்றுதிறனாளிகளுக்கு ஊனத்தின் தன்மையை பொறுத்து மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. 40 சதவீத ஊனம் இருந்தாலே உதவித்தொகை வழங்க வேண்டும் என்று மாற்றுதிறனாளிகள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்ததோடு போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா 40 சதவீத ஊனம் இருந்தால் இனி உதவி தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த அரசாணை இதுவரை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் முன்வராததால் மாற்றுதிறனாளிகள் அதிருப்தியடைந்துள்ளனர். இது குறித்து ஈரோடு மாவட்ட சிஐடியு நிர்வாகி பொன்பாரதி கூறுகையில், ‘40 சதவீத ஊனம் இருந்தால் உதவி தொகை வழங்கலாம் என்ற அரசாணை கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால் இந்த அரசாணைப்படி உதவி தொகை கேட்டால் எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்று மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகள் கூறுகின்றனர். 6 மாதங்களாக இதே பதிலை தான் அதிகாரிகள் கூறிவருகின்றனர்.

வழக்கமாக சட்டசபையில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்டும் அறிவிப்புகள் எதுவும் நடைமுறைக்கு வருவதில்லை என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டை உறுதிபடுத்துவதாகத்தான் இதை பார்க்க முடிகின்றது. முதலமைச்சரின் உத்தரவையும், அரசாணையையும் அதிகாரிகள் உடனடியாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு பொன்பாரதி கூறினார்.

No comments:

Post a Comment