FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, August 19, 2016

செய்திகள்உதவி தொகை விவகாரம்: அரசு உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள்; மாற்றுத்திறனாளிகள் அதிருப்தி

18.08.2016, ஈரோடு: அரசாணை வெளியிடப்பட்டு 6 மாதங்களாகியும் அமல்படுத்த அதிகாரிகள் மறுப்பதால் மாற்றுதிறனாளிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
மாற்றுதிறனாளிகளுக்கு ஊனத்தின் தன்மையை பொறுத்து மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. 40 சதவீத ஊனம் இருந்தாலே உதவித்தொகை வழங்க வேண்டும் என்று மாற்றுதிறனாளிகள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்ததோடு போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா 40 சதவீத ஊனம் இருந்தால் இனி உதவி தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த அரசாணை இதுவரை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் முன்வராததால் மாற்றுதிறனாளிகள் அதிருப்தியடைந்துள்ளனர். இது குறித்து ஈரோடு மாவட்ட சிஐடியு நிர்வாகி பொன்பாரதி கூறுகையில், ‘40 சதவீத ஊனம் இருந்தால் உதவி தொகை வழங்கலாம் என்ற அரசாணை கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால் இந்த அரசாணைப்படி உதவி தொகை கேட்டால் எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்று மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகள் கூறுகின்றனர். 6 மாதங்களாக இதே பதிலை தான் அதிகாரிகள் கூறிவருகின்றனர்.

வழக்கமாக சட்டசபையில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்டும் அறிவிப்புகள் எதுவும் நடைமுறைக்கு வருவதில்லை என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டை உறுதிபடுத்துவதாகத்தான் இதை பார்க்க முடிகின்றது. முதலமைச்சரின் உத்தரவையும், அரசாணையையும் அதிகாரிகள் உடனடியாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு பொன்பாரதி கூறினார்.

No comments:

Post a Comment