FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, August 2, 2016

தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டு சங்க நிர்வாகிகள் தேர்வு


01.08.2016, சென்னை:தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டு சங்கத்திற்கு, புதிதாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடைபெற்றது. அதில், 27 மாவட்டங்களில் இருந்து, 150 பேர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் தேர்வு நடந்தது. அதில், ஊட்டி எச்.எஸ்.மூர்த்தி தலைவராகவும், சென்னை ஜெ.சந்தோஷ் குமார், பொதுச் செயலராகவும் தேர்வு பெற்றனர். சென்னை வி.ஆர்., வெங்கடேசன், பொருளாளராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.

திருநெல்வேலி ஏ.எம்.அரசு முத்து, வேலுார் எல்.பாலாஜி ஆகியோர், துணைத் தலைவர்களாக தேர்வு பெற்றனர். ஏ.ஆர்.கலைமாறன், துணை சேர்மன் ஆக தேர்வானார்.

ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், தலா இரண்டு பேர் என, செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். சென்னை

ஆர்.சுரேஷ், சைகை மொழி பெயர்ப்பாளராக தேர்வு பெற்றார்.

No comments:

Post a Comment