FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, August 2, 2016

தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டு சங்க நிர்வாகிகள் தேர்வு


01.08.2016, சென்னை:தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டு சங்கத்திற்கு, புதிதாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடைபெற்றது. அதில், 27 மாவட்டங்களில் இருந்து, 150 பேர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் தேர்வு நடந்தது. அதில், ஊட்டி எச்.எஸ்.மூர்த்தி தலைவராகவும், சென்னை ஜெ.சந்தோஷ் குமார், பொதுச் செயலராகவும் தேர்வு பெற்றனர். சென்னை வி.ஆர்., வெங்கடேசன், பொருளாளராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.

திருநெல்வேலி ஏ.எம்.அரசு முத்து, வேலுார் எல்.பாலாஜி ஆகியோர், துணைத் தலைவர்களாக தேர்வு பெற்றனர். ஏ.ஆர்.கலைமாறன், துணை சேர்மன் ஆக தேர்வானார்.

ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், தலா இரண்டு பேர் என, செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். சென்னை

ஆர்.சுரேஷ், சைகை மொழி பெயர்ப்பாளராக தேர்வு பெற்றார்.

No comments:

Post a Comment