FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, August 19, 2016

சமஉரிமை மறுக்கப்படுவதை முதல்வர் அறிவாரா?' -மாற்றுத் திறனாளிகளின் ஆதங்கம்

மாற்றுத் திறனாளிகளுக்கு சம உரிமை வழங்குகிறோம்' என்ற பெயரில் புறக்கணிக்கும் வேலைகளே தொடர்ந்து நடக்கின்றன. ' அம்மா திட்டம் என்ற பெயரில் நலத்திட்ட உதவிகளை வழங்காமல், பயனாளிகளைக் குறைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்' என வேதனைப்படுகின்றனர் மாற்றுத் திறனாளிகள்.

தமிழக சட்டமன்றத்தில் கடந்த 10-ம் தேதி, சமூகநலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் முடிவடைந்ததும், மாற்றுத் திறனாளிகள் தொடர்பான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.' இதில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது குறித்தோ, பணியிடங்களை நிரப்புவது குறித்தோ எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை' என வேதனைப்படுகின்றனர் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சங்கத்தின் பொதுச் மாநில செயலாளர் நம்புராஜன்,

" அரசு கணக்கீட்டின்படி தமிழ்நாட்டில் 13 லட்சம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். ஆனால், மாநிலம் முழுவதும் 45 லட்சம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில், 'மாற்றுத்திறனாளிகள் சம உரிமையுடன் வாழ நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்திருந்தார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், நாட்டிலேயே மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்புக் கவனம் எடுத்து வருவது தமிழக அரசுதான் என பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். நன்றாகப் படித்து முடித்தும், வேலையில்லாமல் தவிக்கும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளது. அரசிடம் வேலை கேட்டுத் தொடர்ந்து போராடி வருகின்றனர். சட்டப்படியான அரசு வேலைவாய்ப்புகளைக் கண்டறியாமல், அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதைப்பற்றி எல்லாம் மானியக் கோரிக்கை விவாதத்தில் சாதகமான அறிக்கை எதுவும் வைக்கப்படவில்லை.

மேலும், 'நாற்பது சதவீதம் ஊனம் உள்ளவர்களுக்கு மாத உதவித் தொகை வழங்கப்படும் என கடந்த ஆட்சியில் அறிவித்தார்' முதல்வர். கடந்த பிப்ரவரி 22 அன்று அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால், இதுவரையில் ஒரு நபருக்குக் கூட புதிய உத்தரவின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படவில்லை. ஏற்கெனவே மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை பெற்று வந்த பல்லாயிரம் பேருக்கு உதவித் தொகை நிறுத்தப்பட்டுவிட்டது.

மாவட்டம்தோறும் மூன்றாயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். 'அம்மா திட்டம் மூலம் உதவித்தொகை தருவோம்' என எழுத்துப்பூர்வமான உத்தரவு வழங்கப்பட்டவர்களுக்கும் உதவி வந்து சேரவில்லை. மனநலம் பாதித்தவர்களை மாற்றுத் திறனாளிகள் கணக்கிலேயே அரசு சேர்க்கவில்லை. இவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது அரசின் கொள்கை இல்லை என்று அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகிறது. இது மாற்றுத் திறனாளிகளின் சட்டத்தையே மறுப்பதாகும். சட்டமன்றக் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் எதுவும் அமல்படுத்தப்படாமல், வெறும் அறிவிப்புகளாகவே இருப்பதை முதலமைச்சர் அறிவாரா?" எனக் கொந்தளித்தார்.

-ஆ.விஜயானந்த்

No comments:

Post a Comment