FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Sunday, August 28, 2016

சிறப்பு கல்வியியலில் குறுகியகால சான்றிதழ் படிப்புகள்: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. விரைவில் அறிமுகம்

27.08.2016
சிறப்பு கல்வியியல் தொடர்பான குறுகிய கால சான்றிதழ் படிப்புகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.பாஸ்கரன் தெரிவித்தார்.

சென்னை ராமாபுரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத குழந்தை கள் சிறப்பு பள்ளி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிறப்பு கல்வியியல் பட்டப் படிப்பு கல்வி மையமாக இருந்து வருகிறது. இக்கல்வி மையத்தை திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.பாஸ்கரன் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப் போது அப்பள்ளியின் தாளாளர் லதா ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர் கள் டாக்டர் எம்ஜிஆர் சிறப்பு கல்வியியல் கல்லூரி பேராசிரியர் கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறும்போது, “சிறப்பு கல்வி மற்றும் சிறப் பாசிரியர் பயிற்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், இந்திய மறுவாழ்வு கவுன்சில் அங்கீ காரத்துடன் பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடு, மனவளர்ச்சி குறைபாடு ஆகிய 3 பிரிவுகளில் சிறப்பு கல்வியியல் பட்டப் படிப்பை சர்வதேச தரத்தில் வழங்கி வருகிறது. மேலும், சிறப்பு கல்வியியல் தொடர்பான குறுகியகால சான்றிதழ் படிப்புகளை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம்” என்றார்.

No comments:

Post a Comment