FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, August 28, 2016

சிறப்பு கல்வியியலில் குறுகியகால சான்றிதழ் படிப்புகள்: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. விரைவில் அறிமுகம்

27.08.2016
சிறப்பு கல்வியியல் தொடர்பான குறுகிய கால சான்றிதழ் படிப்புகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.பாஸ்கரன் தெரிவித்தார்.

சென்னை ராமாபுரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத குழந்தை கள் சிறப்பு பள்ளி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிறப்பு கல்வியியல் பட்டப் படிப்பு கல்வி மையமாக இருந்து வருகிறது. இக்கல்வி மையத்தை திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.பாஸ்கரன் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப் போது அப்பள்ளியின் தாளாளர் லதா ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர் கள் டாக்டர் எம்ஜிஆர் சிறப்பு கல்வியியல் கல்லூரி பேராசிரியர் கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறும்போது, “சிறப்பு கல்வி மற்றும் சிறப் பாசிரியர் பயிற்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், இந்திய மறுவாழ்வு கவுன்சில் அங்கீ காரத்துடன் பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடு, மனவளர்ச்சி குறைபாடு ஆகிய 3 பிரிவுகளில் சிறப்பு கல்வியியல் பட்டப் படிப்பை சர்வதேச தரத்தில் வழங்கி வருகிறது. மேலும், சிறப்பு கல்வியியல் தொடர்பான குறுகியகால சான்றிதழ் படிப்புகளை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம்” என்றார்.

No comments:

Post a Comment