FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, August 28, 2016

சிறப்பு கல்வியியலில் குறுகியகால சான்றிதழ் படிப்புகள்: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. விரைவில் அறிமுகம்

27.08.2016
சிறப்பு கல்வியியல் தொடர்பான குறுகிய கால சான்றிதழ் படிப்புகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.பாஸ்கரன் தெரிவித்தார்.

சென்னை ராமாபுரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத குழந்தை கள் சிறப்பு பள்ளி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிறப்பு கல்வியியல் பட்டப் படிப்பு கல்வி மையமாக இருந்து வருகிறது. இக்கல்வி மையத்தை திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.பாஸ்கரன் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப் போது அப்பள்ளியின் தாளாளர் லதா ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர் கள் டாக்டர் எம்ஜிஆர் சிறப்பு கல்வியியல் கல்லூரி பேராசிரியர் கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறும்போது, “சிறப்பு கல்வி மற்றும் சிறப் பாசிரியர் பயிற்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், இந்திய மறுவாழ்வு கவுன்சில் அங்கீ காரத்துடன் பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடு, மனவளர்ச்சி குறைபாடு ஆகிய 3 பிரிவுகளில் சிறப்பு கல்வியியல் பட்டப் படிப்பை சர்வதேச தரத்தில் வழங்கி வருகிறது. மேலும், சிறப்பு கல்வியியல் தொடர்பான குறுகியகால சான்றிதழ் படிப்புகளை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம்” என்றார்.

No comments:

Post a Comment