FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Sunday, August 28, 2016

சிறப்பு கல்வியியலில் குறுகியகால சான்றிதழ் படிப்புகள்: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. விரைவில் அறிமுகம்

27.08.2016
சிறப்பு கல்வியியல் தொடர்பான குறுகிய கால சான்றிதழ் படிப்புகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.பாஸ்கரன் தெரிவித்தார்.

சென்னை ராமாபுரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத குழந்தை கள் சிறப்பு பள்ளி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிறப்பு கல்வியியல் பட்டப் படிப்பு கல்வி மையமாக இருந்து வருகிறது. இக்கல்வி மையத்தை திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.பாஸ்கரன் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப் போது அப்பள்ளியின் தாளாளர் லதா ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர் கள் டாக்டர் எம்ஜிஆர் சிறப்பு கல்வியியல் கல்லூரி பேராசிரியர் கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறும்போது, “சிறப்பு கல்வி மற்றும் சிறப் பாசிரியர் பயிற்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், இந்திய மறுவாழ்வு கவுன்சில் அங்கீ காரத்துடன் பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடு, மனவளர்ச்சி குறைபாடு ஆகிய 3 பிரிவுகளில் சிறப்பு கல்வியியல் பட்டப் படிப்பை சர்வதேச தரத்தில் வழங்கி வருகிறது. மேலும், சிறப்பு கல்வியியல் தொடர்பான குறுகியகால சான்றிதழ் படிப்புகளை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம்” என்றார்.

No comments:

Post a Comment