FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, August 19, 2016

திருவாரூரில் மாற்றுத்திறனாளிகள் எத்தனை பேர்? கணக்கெடுத்து சிகிச்சையளிக்க ஆட்சியர் வலியுறுத்தல்

19.08.2016
திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை புள்ளிவிவரத்துடன் கணக்கெடுத்து அவர்களுக்கு தேவையான சிகிச்சையளிக்க வேண்டுமென்றார் ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.

திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை உடலியல் மற்றும் புனா்வாழ்வு மருத்துவத்துறை, இருதயவியல், நரம்பியல், சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வெளிநோயாளிகள் பிரிவை தொடக்கி வைத்து மேலும் அவர் பேசியது:

உடலியல் துறை தற்போது டெல்டா மாவட்டத்தில் திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளதன் மூலம் எலும்பு முறிவு, நரம்பியல் சம்பந்தமான நோய்கள், மூளை வளா்ச்சி, நாள்பட்ட வலி போன்றவற்றிற்கு சிகிச்சை பெறலாம். இதில் சிறுநீரகவியல் அறுவை சிகிச்சைப்பிரிவு திங்கள் வியாழன் இரு நாட்களில் காலை 10-12 மணி வரை.

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைப் பிரிவு செவ்வாய், வியாழன் ஆகிய இரு நாட்களில் காலை 10-12 மணி வரை, இருதயவியல் மருத்துவப்பிரிவு திங்கள், வியாழன் ஆகிய இரு நாட்களில் காலை 10-12 மணி வரை, நரம்பியல் மருத்துவப்பிரிவு செவ்வாய், வௌ்ளி ஆகிய இரு நாட்களில் காலை 10-12 மணி வரை செயல்படவுள்ளது.

மேலும் புனா்வாழ்வு மருத்துவத்துறை டெல்டா மாவட்டத்தில் இங்கு மட்டுமே இருப்பதால் டெல்டா மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளின் புள்ளி விவரங்களை கணக்கெடுத்து அவர்கள் மட்டுமின்றி பொது மக்களுக்குத் தேவையான முறையில் தேவையான வகையில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

அவசர சிகிச்சை தேவைப்படுபவா்கள் 9445551108 என்ற அவசர சிகிச்சை வழிகாட்டுதல் குழு எண்ணை தொடா்பு கொண்டால் தகுந்த முன்னேற்பாட்டுடன் தகுந்த சிகிச்சை அளிக்க இயலும் என்றார் நிர்மல்ராஜ்.
- NIKKEERAN 

No comments:

Post a Comment