FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, August 19, 2016

திருவாரூரில் மாற்றுத்திறனாளிகள் எத்தனை பேர்? கணக்கெடுத்து சிகிச்சையளிக்க ஆட்சியர் வலியுறுத்தல்

19.08.2016
திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை புள்ளிவிவரத்துடன் கணக்கெடுத்து அவர்களுக்கு தேவையான சிகிச்சையளிக்க வேண்டுமென்றார் ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.

திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை உடலியல் மற்றும் புனா்வாழ்வு மருத்துவத்துறை, இருதயவியல், நரம்பியல், சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வெளிநோயாளிகள் பிரிவை தொடக்கி வைத்து மேலும் அவர் பேசியது:

உடலியல் துறை தற்போது டெல்டா மாவட்டத்தில் திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளதன் மூலம் எலும்பு முறிவு, நரம்பியல் சம்பந்தமான நோய்கள், மூளை வளா்ச்சி, நாள்பட்ட வலி போன்றவற்றிற்கு சிகிச்சை பெறலாம். இதில் சிறுநீரகவியல் அறுவை சிகிச்சைப்பிரிவு திங்கள் வியாழன் இரு நாட்களில் காலை 10-12 மணி வரை.

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைப் பிரிவு செவ்வாய், வியாழன் ஆகிய இரு நாட்களில் காலை 10-12 மணி வரை, இருதயவியல் மருத்துவப்பிரிவு திங்கள், வியாழன் ஆகிய இரு நாட்களில் காலை 10-12 மணி வரை, நரம்பியல் மருத்துவப்பிரிவு செவ்வாய், வௌ்ளி ஆகிய இரு நாட்களில் காலை 10-12 மணி வரை செயல்படவுள்ளது.

மேலும் புனா்வாழ்வு மருத்துவத்துறை டெல்டா மாவட்டத்தில் இங்கு மட்டுமே இருப்பதால் டெல்டா மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளின் புள்ளி விவரங்களை கணக்கெடுத்து அவர்கள் மட்டுமின்றி பொது மக்களுக்குத் தேவையான முறையில் தேவையான வகையில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

அவசர சிகிச்சை தேவைப்படுபவா்கள் 9445551108 என்ற அவசர சிகிச்சை வழிகாட்டுதல் குழு எண்ணை தொடா்பு கொண்டால் தகுந்த முன்னேற்பாட்டுடன் தகுந்த சிகிச்சை அளிக்க இயலும் என்றார் நிர்மல்ராஜ்.
- NIKKEERAN 

No comments:

Post a Comment