FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, August 19, 2016

திருவாரூரில் மாற்றுத்திறனாளிகள் எத்தனை பேர்? கணக்கெடுத்து சிகிச்சையளிக்க ஆட்சியர் வலியுறுத்தல்

19.08.2016
திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை புள்ளிவிவரத்துடன் கணக்கெடுத்து அவர்களுக்கு தேவையான சிகிச்சையளிக்க வேண்டுமென்றார் ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.

திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை உடலியல் மற்றும் புனா்வாழ்வு மருத்துவத்துறை, இருதயவியல், நரம்பியல், சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வெளிநோயாளிகள் பிரிவை தொடக்கி வைத்து மேலும் அவர் பேசியது:

உடலியல் துறை தற்போது டெல்டா மாவட்டத்தில் திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளதன் மூலம் எலும்பு முறிவு, நரம்பியல் சம்பந்தமான நோய்கள், மூளை வளா்ச்சி, நாள்பட்ட வலி போன்றவற்றிற்கு சிகிச்சை பெறலாம். இதில் சிறுநீரகவியல் அறுவை சிகிச்சைப்பிரிவு திங்கள் வியாழன் இரு நாட்களில் காலை 10-12 மணி வரை.

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைப் பிரிவு செவ்வாய், வியாழன் ஆகிய இரு நாட்களில் காலை 10-12 மணி வரை, இருதயவியல் மருத்துவப்பிரிவு திங்கள், வியாழன் ஆகிய இரு நாட்களில் காலை 10-12 மணி வரை, நரம்பியல் மருத்துவப்பிரிவு செவ்வாய், வௌ்ளி ஆகிய இரு நாட்களில் காலை 10-12 மணி வரை செயல்படவுள்ளது.

மேலும் புனா்வாழ்வு மருத்துவத்துறை டெல்டா மாவட்டத்தில் இங்கு மட்டுமே இருப்பதால் டெல்டா மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளின் புள்ளி விவரங்களை கணக்கெடுத்து அவர்கள் மட்டுமின்றி பொது மக்களுக்குத் தேவையான முறையில் தேவையான வகையில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

அவசர சிகிச்சை தேவைப்படுபவா்கள் 9445551108 என்ற அவசர சிகிச்சை வழிகாட்டுதல் குழு எண்ணை தொடா்பு கொண்டால் தகுந்த முன்னேற்பாட்டுடன் தகுந்த சிகிச்சை அளிக்க இயலும் என்றார் நிர்மல்ராஜ்.
- NIKKEERAN 

No comments:

Post a Comment