FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, August 19, 2016

திருவாரூரில் மாற்றுத்திறனாளிகள் எத்தனை பேர்? கணக்கெடுத்து சிகிச்சையளிக்க ஆட்சியர் வலியுறுத்தல்

19.08.2016
திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை புள்ளிவிவரத்துடன் கணக்கெடுத்து அவர்களுக்கு தேவையான சிகிச்சையளிக்க வேண்டுமென்றார் ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.

திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை உடலியல் மற்றும் புனா்வாழ்வு மருத்துவத்துறை, இருதயவியல், நரம்பியல், சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வெளிநோயாளிகள் பிரிவை தொடக்கி வைத்து மேலும் அவர் பேசியது:

உடலியல் துறை தற்போது டெல்டா மாவட்டத்தில் திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளதன் மூலம் எலும்பு முறிவு, நரம்பியல் சம்பந்தமான நோய்கள், மூளை வளா்ச்சி, நாள்பட்ட வலி போன்றவற்றிற்கு சிகிச்சை பெறலாம். இதில் சிறுநீரகவியல் அறுவை சிகிச்சைப்பிரிவு திங்கள் வியாழன் இரு நாட்களில் காலை 10-12 மணி வரை.

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைப் பிரிவு செவ்வாய், வியாழன் ஆகிய இரு நாட்களில் காலை 10-12 மணி வரை, இருதயவியல் மருத்துவப்பிரிவு திங்கள், வியாழன் ஆகிய இரு நாட்களில் காலை 10-12 மணி வரை, நரம்பியல் மருத்துவப்பிரிவு செவ்வாய், வௌ்ளி ஆகிய இரு நாட்களில் காலை 10-12 மணி வரை செயல்படவுள்ளது.

மேலும் புனா்வாழ்வு மருத்துவத்துறை டெல்டா மாவட்டத்தில் இங்கு மட்டுமே இருப்பதால் டெல்டா மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளின் புள்ளி விவரங்களை கணக்கெடுத்து அவர்கள் மட்டுமின்றி பொது மக்களுக்குத் தேவையான முறையில் தேவையான வகையில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

அவசர சிகிச்சை தேவைப்படுபவா்கள் 9445551108 என்ற அவசர சிகிச்சை வழிகாட்டுதல் குழு எண்ணை தொடா்பு கொண்டால் தகுந்த முன்னேற்பாட்டுடன் தகுந்த சிகிச்சை அளிக்க இயலும் என்றார் நிர்மல்ராஜ்.
- NIKKEERAN 

No comments:

Post a Comment