FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, September 10, 2016

புதிய அரசாணையை அமல்படுத்த வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட 235 மாற்றுத்திறனாளிகள் கைது

07.09.2016, பழனி, புதிய அரசாணையை அமல்படுத்தி உதவித்தொகை வழங்கக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட 235 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.

புதிய அரசாணை

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்குவதில் அரசு கடைபிடிக்கும் நிபந்தனைகளை தளர்த்த வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் முற்றுகை போராட்டம் நடந்தது. இதில், மாற்றுத்திறனாளி ஒருவர் இறந்து போனார்.

இதன் எதிரொலியாக, தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டது. அதில், 40 சதவீதம் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நிபந்தனையின்றி உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் அரசாணை பிறப்பித்து 6 மாதம் ஆகியும் அமல்படுத்தப்படவில்லை. இதனால் உதவித்தொகை கிடைக்காமல் மாற்றுத்திறனாளிகள் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மறியல் போராட்டம்

இந்தநிலையில் புதிய அரசாணையை அமல்படுத்தி உதவித்தொகை வழங்கக்கோரி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பழனி தாலுகா அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் நேற்று காலை அங்கு வந்தனர். பின்னர் மாநில செயலாளர் நம்புராஜன் தலைமையில் சமூகநலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் தாலுகா அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

235 பேர் கைது

இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட மாநில செயலாளர் நம்புராஜன், மாவட்ட தலைவர் தர்மராஜ், மாவட்ட செயலாளர் பகத்சிங், நகர தலைவர் மாலதி, ஒன்றிய தலைவர் சதீஸ்குமார் உள்பட 235 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 140 பேர் பெண்கள் ஆவர். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment