FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Saturday, September 10, 2016

புதிய அரசாணையை அமல்படுத்த வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட 235 மாற்றுத்திறனாளிகள் கைது

07.09.2016, பழனி, புதிய அரசாணையை அமல்படுத்தி உதவித்தொகை வழங்கக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட 235 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.

புதிய அரசாணை

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்குவதில் அரசு கடைபிடிக்கும் நிபந்தனைகளை தளர்த்த வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் முற்றுகை போராட்டம் நடந்தது. இதில், மாற்றுத்திறனாளி ஒருவர் இறந்து போனார்.

இதன் எதிரொலியாக, தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டது. அதில், 40 சதவீதம் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நிபந்தனையின்றி உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் அரசாணை பிறப்பித்து 6 மாதம் ஆகியும் அமல்படுத்தப்படவில்லை. இதனால் உதவித்தொகை கிடைக்காமல் மாற்றுத்திறனாளிகள் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மறியல் போராட்டம்

இந்தநிலையில் புதிய அரசாணையை அமல்படுத்தி உதவித்தொகை வழங்கக்கோரி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பழனி தாலுகா அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் நேற்று காலை அங்கு வந்தனர். பின்னர் மாநில செயலாளர் நம்புராஜன் தலைமையில் சமூகநலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் தாலுகா அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

235 பேர் கைது

இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட மாநில செயலாளர் நம்புராஜன், மாவட்ட தலைவர் தர்மராஜ், மாவட்ட செயலாளர் பகத்சிங், நகர தலைவர் மாலதி, ஒன்றிய தலைவர் சதீஸ்குமார் உள்பட 235 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 140 பேர் பெண்கள் ஆவர். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment