FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, September 10, 2016

புதிய அரசாணையை அமல்படுத்த வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட 235 மாற்றுத்திறனாளிகள் கைது

07.09.2016, பழனி, புதிய அரசாணையை அமல்படுத்தி உதவித்தொகை வழங்கக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட 235 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.

புதிய அரசாணை

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்குவதில் அரசு கடைபிடிக்கும் நிபந்தனைகளை தளர்த்த வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் முற்றுகை போராட்டம் நடந்தது. இதில், மாற்றுத்திறனாளி ஒருவர் இறந்து போனார்.

இதன் எதிரொலியாக, தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டது. அதில், 40 சதவீதம் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நிபந்தனையின்றி உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் அரசாணை பிறப்பித்து 6 மாதம் ஆகியும் அமல்படுத்தப்படவில்லை. இதனால் உதவித்தொகை கிடைக்காமல் மாற்றுத்திறனாளிகள் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மறியல் போராட்டம்

இந்தநிலையில் புதிய அரசாணையை அமல்படுத்தி உதவித்தொகை வழங்கக்கோரி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பழனி தாலுகா அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் நேற்று காலை அங்கு வந்தனர். பின்னர் மாநில செயலாளர் நம்புராஜன் தலைமையில் சமூகநலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் தாலுகா அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

235 பேர் கைது

இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட மாநில செயலாளர் நம்புராஜன், மாவட்ட தலைவர் தர்மராஜ், மாவட்ட செயலாளர் பகத்சிங், நகர தலைவர் மாலதி, ஒன்றிய தலைவர் சதீஸ்குமார் உள்பட 235 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 140 பேர் பெண்கள் ஆவர். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment