FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, September 10, 2016

புதிய அரசாணையை அமல்படுத்த வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட 235 மாற்றுத்திறனாளிகள் கைது

07.09.2016, பழனி, புதிய அரசாணையை அமல்படுத்தி உதவித்தொகை வழங்கக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட 235 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.

புதிய அரசாணை

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்குவதில் அரசு கடைபிடிக்கும் நிபந்தனைகளை தளர்த்த வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் முற்றுகை போராட்டம் நடந்தது. இதில், மாற்றுத்திறனாளி ஒருவர் இறந்து போனார்.

இதன் எதிரொலியாக, தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டது. அதில், 40 சதவீதம் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நிபந்தனையின்றி உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் அரசாணை பிறப்பித்து 6 மாதம் ஆகியும் அமல்படுத்தப்படவில்லை. இதனால் உதவித்தொகை கிடைக்காமல் மாற்றுத்திறனாளிகள் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மறியல் போராட்டம்

இந்தநிலையில் புதிய அரசாணையை அமல்படுத்தி உதவித்தொகை வழங்கக்கோரி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பழனி தாலுகா அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் நேற்று காலை அங்கு வந்தனர். பின்னர் மாநில செயலாளர் நம்புராஜன் தலைமையில் சமூகநலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் தாலுகா அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

235 பேர் கைது

இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட மாநில செயலாளர் நம்புராஜன், மாவட்ட தலைவர் தர்மராஜ், மாவட்ட செயலாளர் பகத்சிங், நகர தலைவர் மாலதி, ஒன்றிய தலைவர் சதீஸ்குமார் உள்பட 235 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 140 பேர் பெண்கள் ஆவர். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment