FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, September 13, 2016

மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் சுயம்வர விழா!

11.09.2016
கோயம்புத்தூரில் முதன் முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் சுயம்வர விழா நடைபெற்றது.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கான வாழ்க்கைத் துணையை தேர்வு செய்தனர்.

பார்வை குறைபாடு, செவித்திறன் மற்றும் கை கால் குறைபாடு மாற்றுத் திறனாளிகள் என, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் இதில் கலந்து கொண்டனர். வாழ்க்கைத் துணை தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அடுத்த கட்டமாக மருத்துவ பரிசோதனை , சட்ட ஆலோனை, மன ரீதியிலான ஆலோசனைகள் ஆகியவை வழங்கப்பட உள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் 51 வகை சீர் வரிசைகளுடன், டிசம்பர் 14 ஆம் தேதி திருமணம் நடைபெறும் என்றும் அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment