FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Tuesday, September 13, 2016

மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் சுயம்வர விழா!

11.09.2016
கோயம்புத்தூரில் முதன் முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் சுயம்வர விழா நடைபெற்றது.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கான வாழ்க்கைத் துணையை தேர்வு செய்தனர்.

பார்வை குறைபாடு, செவித்திறன் மற்றும் கை கால் குறைபாடு மாற்றுத் திறனாளிகள் என, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் இதில் கலந்து கொண்டனர். வாழ்க்கைத் துணை தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அடுத்த கட்டமாக மருத்துவ பரிசோதனை , சட்ட ஆலோனை, மன ரீதியிலான ஆலோசனைகள் ஆகியவை வழங்கப்பட உள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் 51 வகை சீர் வரிசைகளுடன், டிசம்பர் 14 ஆம் தேதி திருமணம் நடைபெறும் என்றும் அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment