FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, September 16, 2016

DEAF மாற்றுத்திறனாளி மனைவியை அரிவாள் மனையால் வெட்டிய கணவர் கைது



15.09.2016, வாழப்பாடி: வாழப்பாடி அருகே, சாப்பாடு போடாததால், மாற்றுத்திறனாளி மனைவியை, அரிவாள்மனையால் வெட்டிய கணவரை, போலீசார் கைது செய்தனர்.
வாழப்பாடி, காளியம்மன் நகர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஆறுமுகம், 43. இவரது மனைவி தேவி, 35; வாய் பேச முடியாதவர்.நேற்று முன்தினம், வீட்டிற்கு வந்த ஆறுமுகம், மனைவியிடம் சாப்பாடு போடும்படி கூறியுள்ளார். கணவர் கூப்பிட்டது தெரியாமல், பாக்கு வெட்டும் வேலை செய்து கொண்டிருந்தார். ஆத்திரமடைந்த ஆறுமுகம், அருகில் இருந்த அரிவாள்மனையை எடுத்து, தேவியை வெட்டினார். கழுத்து, தோள்பட்டை பகுதியில் பலத்த காயமடைந்த தேவியை, அருகில் இருந்தவர்கள், வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வாழப்பாடி போலீசார், வழக்கு பதிவு செய்து, ஆறுமுகத்தை கைது செய்தனர்.

No comments:

Post a Comment