FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, September 28, 2016

'காது கொடுத்துக் கேட்போம்': இன்று உலக காது கேளாதோர் தினம்

ஒலியை உணர்வதற்கு காதுகள் மிக அவசியம். இதில் சிரமம் ஏற்பட்டால், அதுவே காது கேளாமை. உலகளவில் 36 கோடி பேர் இப்பிரச்னையால் தவிக்கின்றனர். சமூகத்தில் இவர்
களுக்கு உரிய வசதிகள் செய்து தர வலியுறுத்தி செப்., 25ல்(கடைசி ஞாயிறு), உலக காது கேளாதோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இத்தினத்தை உலக காது கேளாதோர் அமைப்பு, 1958ல் உருவாக்கியது. முழுமையாகவோ,
பாதியாகவோ ஒலியை உணர அல்லது புரிந்து கொள்ள முடியாதவர்கள் காது கேளாதவர் எனப்
படுகிறார். சிலர் நாம் சொல்வதை திரும்ப திரும்ப கேட்பார்கள்.

அப்படியெனில் அவர்களுக்கு காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
இளைஞர்களின் காது கேட்கும் திறன் சாதாரணமாக 20 ஹெர்ட்ஸில் இருந்து 20 ஆயிரம் ஹெர்ட்ஸ் வரை உள்ளது.

காரணங்கள்

அதிக சப்தத்தை கேட்பதால் கூட காது கேட்கும் திறன் பாதிக்கிறது. உலக மக்கள் தொகையில் 5 சதவீதம் பேர் இந்த வகையில் பாதிக்கப்படுகின்றனர். பெற்றோருக்கு இக்குறைபாடு இருப்பின் குழந்தையையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. அடிக்கடி சளி, தொண்டை வலி ஏற்பட்டாலும் காது கேட்காமல் போகலாம்.

குழந்தைகளுக்கு காது கேளாமை இருந்தால் உடனே டாக்டரிடம் பரிசோதிக்க வேண்டும்.
இல்லையெனில் இது குழந்தையின் பேச்சுத்திறனை பாதிக்கும். அலைபேசி கதிர்வீச்சு
காரணமாக கூட கேட்கும் திறன் பாதிக்கப்படலாம்.

இதை செய்யாதீர்கள்

காதில் அழுக்கை சுத்தம் செய்கிறோம் என்ற பேரில் குச்சியை பயன்படுத்துவது, எண்ணெய்
ஊற்றுவது, கேட்கும் திறனை பாதிக்கும். இதற்கு பதிலாக அதற்கென தயாரிக்கப்பட்டுள்ள 'பஞ்ச்' உள்ள குச்சியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பலத்த சத்தம் ஏற்படும் இடங்களில் வேலை செய்வோர், ஒலித்தடுப்பு கருவிகளை பொருத்திக் கொண்டால், காது கேளாமையில் இருந்து தப்பிக்கலாம்.

கருவிகள்

தற்போது அறிவியல் வளர்ச்சியால் 'புரோகிராம்' செய்யப்பட்ட காது கேட்கும் கருவிகள் வந்து விட்டன. இதை 'ஹெட் போன்' போல மாற்றிக் கொள்ள முடியாது. இதற்கு சில காலம் பயற்சி பெற வேண்டும்.

ஈ.என்.டி., டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் இதனை பொருத்திக் கொள்ளலாம். காது கேளாதவர்களின் கேட்கும் திறனை பொறுத்து, இக்கருவியின் ஒலி அளவு நிர்ணயிக்கப் படுகிறது. இது நிரந்தரமாக காது கேளாமை பிரச்னையை தீர்க்காது. காது கேட்பதற்கு இக்கருவி உதவும்.

No comments:

Post a Comment