FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, September 16, 2016

மோடி பிறந்த நாளை சாதனை நாளாக மாற்ற திட்டம்

15.09.2016, புதுடில்லி: பிரதமர் மோடி வரும் சனிக்கிழமை 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். குஜராத்தில் தனது பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டுள்ளார். அன்று, மாற்றுத்திறனாளிகள் 11 ஆயிரம் பேருக்கு உதவி வழங்கி, கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குஜராத்தின் நவ்சாரி என்ற இடத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் ரூ.7.5 கோடி அளவுக்கு மக்களுக்கு நிதியுதவி வழங்கப்பட உள்ளது. அங்கு ஆயிரம் பார்வையற்றவர்கள் விளக்குகளை ஏற்றி வைத்து சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 346 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே நேரத்தில் சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது சாதனை இருந்து வருகிறது. ஆனால், ஒரே நேரத்தில் ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆஸ்திரேலியாவில் ஒரே நேரத்தி்ல 500 பேருக்கு காது கேட்கும் கருவி வழங்கப்பட்டது. இதனை முறியடித்து ஆயிரம் பேருக்கு காது கேட்கும் கருவி வழங்கப்பட உள்ளது. மேலும் 11 ஆயிரம் பேருக்கு உதவிகள் வழங்கி சாதனை படைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் வாரணாசியில், 10,200 பேருக்கு உதவி வழங்கி, அது குறித்து கின்னஸ் சாதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இது தொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோவில் கின்னஸ் அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியதால், சாதனையாக ஏற்கப்படவில்லை. எனவே தற்போது அதுபோன்று குழப்பம் ஏற்படக்கூடாது என்பதற்காக , மாவட்ட கலெக்டருடன் இணைந்து மத்திய மாற்றுத்திறனாளிகள் அதிகாரி செயல்பட்டு வருகிறார்.

No comments:

Post a Comment