FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, September 16, 2016

மோடி பிறந்த நாளை சாதனை நாளாக மாற்ற திட்டம்

15.09.2016, புதுடில்லி: பிரதமர் மோடி வரும் சனிக்கிழமை 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். குஜராத்தில் தனது பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டுள்ளார். அன்று, மாற்றுத்திறனாளிகள் 11 ஆயிரம் பேருக்கு உதவி வழங்கி, கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குஜராத்தின் நவ்சாரி என்ற இடத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் ரூ.7.5 கோடி அளவுக்கு மக்களுக்கு நிதியுதவி வழங்கப்பட உள்ளது. அங்கு ஆயிரம் பார்வையற்றவர்கள் விளக்குகளை ஏற்றி வைத்து சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 346 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே நேரத்தில் சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது சாதனை இருந்து வருகிறது. ஆனால், ஒரே நேரத்தில் ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆஸ்திரேலியாவில் ஒரே நேரத்தி்ல 500 பேருக்கு காது கேட்கும் கருவி வழங்கப்பட்டது. இதனை முறியடித்து ஆயிரம் பேருக்கு காது கேட்கும் கருவி வழங்கப்பட உள்ளது. மேலும் 11 ஆயிரம் பேருக்கு உதவிகள் வழங்கி சாதனை படைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் வாரணாசியில், 10,200 பேருக்கு உதவி வழங்கி, அது குறித்து கின்னஸ் சாதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இது தொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோவில் கின்னஸ் அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியதால், சாதனையாக ஏற்கப்படவில்லை. எனவே தற்போது அதுபோன்று குழப்பம் ஏற்படக்கூடாது என்பதற்காக , மாவட்ட கலெக்டருடன் இணைந்து மத்திய மாற்றுத்திறனாளிகள் அதிகாரி செயல்பட்டு வருகிறார்.

No comments:

Post a Comment