FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, September 16, 2016

மோடி பிறந்த நாளை சாதனை நாளாக மாற்ற திட்டம்

15.09.2016, புதுடில்லி: பிரதமர் மோடி வரும் சனிக்கிழமை 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். குஜராத்தில் தனது பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டுள்ளார். அன்று, மாற்றுத்திறனாளிகள் 11 ஆயிரம் பேருக்கு உதவி வழங்கி, கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குஜராத்தின் நவ்சாரி என்ற இடத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் ரூ.7.5 கோடி அளவுக்கு மக்களுக்கு நிதியுதவி வழங்கப்பட உள்ளது. அங்கு ஆயிரம் பார்வையற்றவர்கள் விளக்குகளை ஏற்றி வைத்து சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 346 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே நேரத்தில் சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது சாதனை இருந்து வருகிறது. ஆனால், ஒரே நேரத்தில் ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆஸ்திரேலியாவில் ஒரே நேரத்தி்ல 500 பேருக்கு காது கேட்கும் கருவி வழங்கப்பட்டது. இதனை முறியடித்து ஆயிரம் பேருக்கு காது கேட்கும் கருவி வழங்கப்பட உள்ளது. மேலும் 11 ஆயிரம் பேருக்கு உதவிகள் வழங்கி சாதனை படைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் வாரணாசியில், 10,200 பேருக்கு உதவி வழங்கி, அது குறித்து கின்னஸ் சாதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இது தொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோவில் கின்னஸ் அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியதால், சாதனையாக ஏற்கப்படவில்லை. எனவே தற்போது அதுபோன்று குழப்பம் ஏற்படக்கூடாது என்பதற்காக , மாவட்ட கலெக்டருடன் இணைந்து மத்திய மாற்றுத்திறனாளிகள் அதிகாரி செயல்பட்டு வருகிறார்.

No comments:

Post a Comment