FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, September 10, 2016

மாற்றுத்திறனாளி அடையாள அட்டை: நலத்திட்ட உதவி பெற சிறப்பு முகாம்

08.09.2016, நாமக்கல்: 'மாவட்டத்திலுள்ள, அனைத்து மாற்றுத்திறனாளிகளும் அடையாள அட்டை பெறுவதற்கும், அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவி உபகரணங்கள் பெறவும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன' என, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: மாவட்டத்தில், இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாதவர்கள், அரசின் நலத்திட்ட உதவி மற்றும் உதவி உபகரணம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் அளிக்க உள்ளவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, வரும், 14ம் தேதி, ராசிபுரம்; 15ம் தேதி, நாமகிரிப்பேட்டை; 16ம் தேதி, வெண்ணந்தூர்; 17ம் தேதி, சேந்தமங்கலம்; 20ம் தேதி, எருமப்பட்டி; 21ம் தேதி, மோகனூர்; 22ம் தேதி, நாமக்கல்; 23ம் தேதி, ப.வேலூர்; 24ம் தேதி, கபிலர்மலை; 27ம் தேதி, திருச்செங்கோடு; 28ம் தேதி, மல்லசமுத்திரம்; 29ம் தேதி, பள்ளிபாளையம்; 30ம் தேதி, புதுச்சத்திரம்; அக்., 1ம் தேதி, எலச்சிபாளையம், 3ம் தேதி கொல்லிமலை ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகங்களில், மருத்துவ முகாம்கள் நடக்கவுள்ளன. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment