FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, September 10, 2016

மாற்றுத்திறனாளி அடையாள அட்டை: நலத்திட்ட உதவி பெற சிறப்பு முகாம்

08.09.2016, நாமக்கல்: 'மாவட்டத்திலுள்ள, அனைத்து மாற்றுத்திறனாளிகளும் அடையாள அட்டை பெறுவதற்கும், அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவி உபகரணங்கள் பெறவும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன' என, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: மாவட்டத்தில், இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாதவர்கள், அரசின் நலத்திட்ட உதவி மற்றும் உதவி உபகரணம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் அளிக்க உள்ளவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, வரும், 14ம் தேதி, ராசிபுரம்; 15ம் தேதி, நாமகிரிப்பேட்டை; 16ம் தேதி, வெண்ணந்தூர்; 17ம் தேதி, சேந்தமங்கலம்; 20ம் தேதி, எருமப்பட்டி; 21ம் தேதி, மோகனூர்; 22ம் தேதி, நாமக்கல்; 23ம் தேதி, ப.வேலூர்; 24ம் தேதி, கபிலர்மலை; 27ம் தேதி, திருச்செங்கோடு; 28ம் தேதி, மல்லசமுத்திரம்; 29ம் தேதி, பள்ளிபாளையம்; 30ம் தேதி, புதுச்சத்திரம்; அக்., 1ம் தேதி, எலச்சிபாளையம், 3ம் தேதி கொல்லிமலை ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகங்களில், மருத்துவ முகாம்கள் நடக்கவுள்ளன. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment