FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Saturday, September 10, 2016

மாற்றுத்திறனாளி அடையாள அட்டை: நலத்திட்ட உதவி பெற சிறப்பு முகாம்

08.09.2016, நாமக்கல்: 'மாவட்டத்திலுள்ள, அனைத்து மாற்றுத்திறனாளிகளும் அடையாள அட்டை பெறுவதற்கும், அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவி உபகரணங்கள் பெறவும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன' என, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: மாவட்டத்தில், இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாதவர்கள், அரசின் நலத்திட்ட உதவி மற்றும் உதவி உபகரணம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் அளிக்க உள்ளவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, வரும், 14ம் தேதி, ராசிபுரம்; 15ம் தேதி, நாமகிரிப்பேட்டை; 16ம் தேதி, வெண்ணந்தூர்; 17ம் தேதி, சேந்தமங்கலம்; 20ம் தேதி, எருமப்பட்டி; 21ம் தேதி, மோகனூர்; 22ம் தேதி, நாமக்கல்; 23ம் தேதி, ப.வேலூர்; 24ம் தேதி, கபிலர்மலை; 27ம் தேதி, திருச்செங்கோடு; 28ம் தேதி, மல்லசமுத்திரம்; 29ம் தேதி, பள்ளிபாளையம்; 30ம் தேதி, புதுச்சத்திரம்; அக்., 1ம் தேதி, எலச்சிபாளையம், 3ம் தேதி கொல்லிமலை ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகங்களில், மருத்துவ முகாம்கள் நடக்கவுள்ளன. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment