FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, September 10, 2016

மாற்றுத்திறனாளி அடையாள அட்டை: நலத்திட்ட உதவி பெற சிறப்பு முகாம்

08.09.2016, நாமக்கல்: 'மாவட்டத்திலுள்ள, அனைத்து மாற்றுத்திறனாளிகளும் அடையாள அட்டை பெறுவதற்கும், அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவி உபகரணங்கள் பெறவும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன' என, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: மாவட்டத்தில், இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாதவர்கள், அரசின் நலத்திட்ட உதவி மற்றும் உதவி உபகரணம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் அளிக்க உள்ளவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, வரும், 14ம் தேதி, ராசிபுரம்; 15ம் தேதி, நாமகிரிப்பேட்டை; 16ம் தேதி, வெண்ணந்தூர்; 17ம் தேதி, சேந்தமங்கலம்; 20ம் தேதி, எருமப்பட்டி; 21ம் தேதி, மோகனூர்; 22ம் தேதி, நாமக்கல்; 23ம் தேதி, ப.வேலூர்; 24ம் தேதி, கபிலர்மலை; 27ம் தேதி, திருச்செங்கோடு; 28ம் தேதி, மல்லசமுத்திரம்; 29ம் தேதி, பள்ளிபாளையம்; 30ம் தேதி, புதுச்சத்திரம்; அக்., 1ம் தேதி, எலச்சிபாளையம், 3ம் தேதி கொல்லிமலை ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகங்களில், மருத்துவ முகாம்கள் நடக்கவுள்ளன. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment