FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, September 23, 2016

லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் தாலுகா அலுவலகம் முற்றுகை

22.09.2016, பென்னாகரம்: மாதாந்திர உதவித்தொகை வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர் என்று கூறி, மாற்றுத்திறனாளிகள் ஊர்வலமாக சென்று, பென்னாகரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபப்பை ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகாவில், 56 மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும் என்று கேட்டு, கடந்த, ஆறு மாதங்களுக்கு முன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், இவர்களுக்கு இதுவரை உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், லஞ்சம் கேட்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், நேற்று தங்களின் அடையாள அடையாள அட்டையை கழுத்தில் தொங்கவிட்டு, பென்னாகரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, தாலுகா அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று, தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கிருந்த பென்னாகரம் போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட முறையான அனுமதி பெற வேண்டும் என கூறினார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு, அரசு அதிகாரிகளுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் தாலுகா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, தர்மபுரி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்க மாவட்ட செயலாளர் கரூரான் கூறியதாவது: உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து, ஆறு மாதத்திற்கும் மேலாகியும் அதிகாரிகள் அதை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. உதவித்தொகை வழங்க எங்களிடம் லஞ்சம் கேட்கின்றனர். மாற்றுத்திறனாளிகளான எங்கள் மீது, அதிகாரிகள் இரக்கம் காட்டுவதில்லை. இதற்கு உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment