FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, September 23, 2016

லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் தாலுகா அலுவலகம் முற்றுகை

22.09.2016, பென்னாகரம்: மாதாந்திர உதவித்தொகை வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர் என்று கூறி, மாற்றுத்திறனாளிகள் ஊர்வலமாக சென்று, பென்னாகரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபப்பை ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகாவில், 56 மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும் என்று கேட்டு, கடந்த, ஆறு மாதங்களுக்கு முன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், இவர்களுக்கு இதுவரை உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், லஞ்சம் கேட்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், நேற்று தங்களின் அடையாள அடையாள அட்டையை கழுத்தில் தொங்கவிட்டு, பென்னாகரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, தாலுகா அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று, தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கிருந்த பென்னாகரம் போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட முறையான அனுமதி பெற வேண்டும் என கூறினார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு, அரசு அதிகாரிகளுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் தாலுகா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, தர்மபுரி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்க மாவட்ட செயலாளர் கரூரான் கூறியதாவது: உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து, ஆறு மாதத்திற்கும் மேலாகியும் அதிகாரிகள் அதை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. உதவித்தொகை வழங்க எங்களிடம் லஞ்சம் கேட்கின்றனர். மாற்றுத்திறனாளிகளான எங்கள் மீது, அதிகாரிகள் இரக்கம் காட்டுவதில்லை. இதற்கு உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment