FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, September 23, 2016

லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் தாலுகா அலுவலகம் முற்றுகை

22.09.2016, பென்னாகரம்: மாதாந்திர உதவித்தொகை வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர் என்று கூறி, மாற்றுத்திறனாளிகள் ஊர்வலமாக சென்று, பென்னாகரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபப்பை ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகாவில், 56 மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும் என்று கேட்டு, கடந்த, ஆறு மாதங்களுக்கு முன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், இவர்களுக்கு இதுவரை உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், லஞ்சம் கேட்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், நேற்று தங்களின் அடையாள அடையாள அட்டையை கழுத்தில் தொங்கவிட்டு, பென்னாகரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, தாலுகா அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று, தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கிருந்த பென்னாகரம் போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட முறையான அனுமதி பெற வேண்டும் என கூறினார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு, அரசு அதிகாரிகளுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் தாலுகா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, தர்மபுரி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்க மாவட்ட செயலாளர் கரூரான் கூறியதாவது: உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து, ஆறு மாதத்திற்கும் மேலாகியும் அதிகாரிகள் அதை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. உதவித்தொகை வழங்க எங்களிடம் லஞ்சம் கேட்கின்றனர். மாற்றுத்திறனாளிகளான எங்கள் மீது, அதிகாரிகள் இரக்கம் காட்டுவதில்லை. இதற்கு உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment