FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, September 1, 2016

மானாமதுரையில் மாற்றுத்திறனாளிகள் கைவண்ணத்தில் விநாயகர் சிலைகள்: பொதுமக்களிடையே வரவேற்பு!!

28.08.2016, மானாமதுரை: மானாமதுரையில் மாற்றுத் திறனாளிகள் கைவண்ணத்தில் பல்வேறு வடிவத்தில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன. இந்த ஆண்டின் புதுவரவாக கடல்கன்னி விநாயகர் உருவச்சிலை வடிவமைக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதரையில் மாற்றுத் திறனாளிகளான பாண்டியராஜன், தங்கமணி ஆகியோர் சீசனுக்கு தகுந்தாற்போல் பல்வேறு பொருட்களை தயாரிக்கின்றனர். விநாயகர் சதுர்த்திக்காக இவர்கள் தயாரிக்கும் பிள்ளையார் சிலைகளுக்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பும் உள்ளது. ஒரு கையில்லாத பாண்டியராஜன் ஒற்றை கை கொண்டு, சிலைகளை கலைநுட்பத்துடன் வடிவமைக்கிறார்.

சென்னையில் திருவொற்றியூர், எர்ணாவூர், மணலி உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள், தொழிற்பேட்டையை போல் தயாராகி வருகின்றன. 3 அடி முதல் 12 அடி வரை விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றது. இந்த ஆண்டின் புதுவரவாக கடல்கன்னி விநாயகர் தயாராகி வருகிறது என்று சிலை வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுவதால், மரவள்ளிகிழங்கு மாவு போன்ற ரசாயனம் கலக்காத மூலப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment