FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, September 1, 2016

மானாமதுரையில் மாற்றுத்திறனாளிகள் கைவண்ணத்தில் விநாயகர் சிலைகள்: பொதுமக்களிடையே வரவேற்பு!!

28.08.2016, மானாமதுரை: மானாமதுரையில் மாற்றுத் திறனாளிகள் கைவண்ணத்தில் பல்வேறு வடிவத்தில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன. இந்த ஆண்டின் புதுவரவாக கடல்கன்னி விநாயகர் உருவச்சிலை வடிவமைக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதரையில் மாற்றுத் திறனாளிகளான பாண்டியராஜன், தங்கமணி ஆகியோர் சீசனுக்கு தகுந்தாற்போல் பல்வேறு பொருட்களை தயாரிக்கின்றனர். விநாயகர் சதுர்த்திக்காக இவர்கள் தயாரிக்கும் பிள்ளையார் சிலைகளுக்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பும் உள்ளது. ஒரு கையில்லாத பாண்டியராஜன் ஒற்றை கை கொண்டு, சிலைகளை கலைநுட்பத்துடன் வடிவமைக்கிறார்.

சென்னையில் திருவொற்றியூர், எர்ணாவூர், மணலி உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள், தொழிற்பேட்டையை போல் தயாராகி வருகின்றன. 3 அடி முதல் 12 அடி வரை விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றது. இந்த ஆண்டின் புதுவரவாக கடல்கன்னி விநாயகர் தயாராகி வருகிறது என்று சிலை வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுவதால், மரவள்ளிகிழங்கு மாவு போன்ற ரசாயனம் கலக்காத மூலப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment