FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, September 16, 2016

திருப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

16.09.2016, திருப்பூர் : திருப்பூரில், மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும், 23ல் நடைபெறவுள்ளது.கலெக்டர் ஜெயந்தி அறிக்கை:திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வரும் 23 ம் தேதி காலை, 10:00 மணிக்கு, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. எழுத படிக்க தெரிந்த மாற்றுத்திறனாளிகள் முதல், முதுநிலை பட்டதாரிகள், ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் வரை, இதில் பங்கேற்று பயன் பெறலாம்.

முகாமில் பணி நியமனம் பெறப்பட்ட நபர்களுக்கு, தங்கள் வீட்டில் இருந்து பணிக்கு செல்லும் இடம் வரை, இலவசமாக பஸ் பாஸ் வழங்கப்படும். முகாமுக்கு வரும்போது, தங்களது வேலைவாய்ப்பு பதிவில், திருத்தங்கள் இருப்பின், அதை சரி செய்து கொள்ளலாம். கூடுதல் பதிவு செய்தல், வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெறுதல் ஆகிய பணிகளுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு, கலெக்டர் அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment