FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, September 16, 2016

திருப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

16.09.2016, திருப்பூர் : திருப்பூரில், மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும், 23ல் நடைபெறவுள்ளது.கலெக்டர் ஜெயந்தி அறிக்கை:திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வரும் 23 ம் தேதி காலை, 10:00 மணிக்கு, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. எழுத படிக்க தெரிந்த மாற்றுத்திறனாளிகள் முதல், முதுநிலை பட்டதாரிகள், ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் வரை, இதில் பங்கேற்று பயன் பெறலாம்.

முகாமில் பணி நியமனம் பெறப்பட்ட நபர்களுக்கு, தங்கள் வீட்டில் இருந்து பணிக்கு செல்லும் இடம் வரை, இலவசமாக பஸ் பாஸ் வழங்கப்படும். முகாமுக்கு வரும்போது, தங்களது வேலைவாய்ப்பு பதிவில், திருத்தங்கள் இருப்பின், அதை சரி செய்து கொள்ளலாம். கூடுதல் பதிவு செய்தல், வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெறுதல் ஆகிய பணிகளுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு, கலெக்டர் அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment