FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, September 16, 2016

திருப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

16.09.2016, திருப்பூர் : திருப்பூரில், மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும், 23ல் நடைபெறவுள்ளது.கலெக்டர் ஜெயந்தி அறிக்கை:திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வரும் 23 ம் தேதி காலை, 10:00 மணிக்கு, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. எழுத படிக்க தெரிந்த மாற்றுத்திறனாளிகள் முதல், முதுநிலை பட்டதாரிகள், ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் வரை, இதில் பங்கேற்று பயன் பெறலாம்.

முகாமில் பணி நியமனம் பெறப்பட்ட நபர்களுக்கு, தங்கள் வீட்டில் இருந்து பணிக்கு செல்லும் இடம் வரை, இலவசமாக பஸ் பாஸ் வழங்கப்படும். முகாமுக்கு வரும்போது, தங்களது வேலைவாய்ப்பு பதிவில், திருத்தங்கள் இருப்பின், அதை சரி செய்து கொள்ளலாம். கூடுதல் பதிவு செய்தல், வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெறுதல் ஆகிய பணிகளுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு, கலெக்டர் அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment