FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Friday, September 2, 2016

மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது

02.09.2016 ராமநாதபுரம்,-ராமநாதபுரம் அருகே மாற்றுத்திறனாளி மருத்துவ சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே எருமைகுளத்தை சேர்ந்த கணபதி மகன் பாலமுருகன்(24). அவருடைய வலது கையில் உள்ள ஆள்காட்டி விரல் ஒரு விபத்தில் துண்டானது. இதையடுத்து அவர் மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ சான்றிதழ் பெற ராமநாதபுரம் மருத்துவ நலப்பணி இணை இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்திருந்தார். இந்த சான்றிதழை வழங்க அலுவலக உதவியாளர் ராமகிருஷ்ணன் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ரூ.5 ஆயிரம் இல்லையென்று கூறிய பாலமுருகன், ரூ.3 ஆயிரம் தர ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து அவர் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் பணத்தை கொடுத்தனர். பாலமுருகன் நேற்று அலுவலகத்தில் அந்த பணத்தை ராமகிருஷ்ணனிடம் கொடுக்க முயன்றார். அப்போது லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மதியழகன் தலைமையில் மறைந்திருந்த போலீசார், ராமகிருஷ்ணனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

No comments:

Post a Comment