FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, September 2, 2016

மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது

02.09.2016 ராமநாதபுரம்,-ராமநாதபுரம் அருகே மாற்றுத்திறனாளி மருத்துவ சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே எருமைகுளத்தை சேர்ந்த கணபதி மகன் பாலமுருகன்(24). அவருடைய வலது கையில் உள்ள ஆள்காட்டி விரல் ஒரு விபத்தில் துண்டானது. இதையடுத்து அவர் மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ சான்றிதழ் பெற ராமநாதபுரம் மருத்துவ நலப்பணி இணை இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்திருந்தார். இந்த சான்றிதழை வழங்க அலுவலக உதவியாளர் ராமகிருஷ்ணன் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ரூ.5 ஆயிரம் இல்லையென்று கூறிய பாலமுருகன், ரூ.3 ஆயிரம் தர ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து அவர் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் பணத்தை கொடுத்தனர். பாலமுருகன் நேற்று அலுவலகத்தில் அந்த பணத்தை ராமகிருஷ்ணனிடம் கொடுக்க முயன்றார். அப்போது லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மதியழகன் தலைமையில் மறைந்திருந்த போலீசார், ராமகிருஷ்ணனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

No comments:

Post a Comment