FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Friday, September 2, 2016

மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது

02.09.2016 ராமநாதபுரம்,-ராமநாதபுரம் அருகே மாற்றுத்திறனாளி மருத்துவ சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே எருமைகுளத்தை சேர்ந்த கணபதி மகன் பாலமுருகன்(24). அவருடைய வலது கையில் உள்ள ஆள்காட்டி விரல் ஒரு விபத்தில் துண்டானது. இதையடுத்து அவர் மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ சான்றிதழ் பெற ராமநாதபுரம் மருத்துவ நலப்பணி இணை இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்திருந்தார். இந்த சான்றிதழை வழங்க அலுவலக உதவியாளர் ராமகிருஷ்ணன் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ரூ.5 ஆயிரம் இல்லையென்று கூறிய பாலமுருகன், ரூ.3 ஆயிரம் தர ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து அவர் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் பணத்தை கொடுத்தனர். பாலமுருகன் நேற்று அலுவலகத்தில் அந்த பணத்தை ராமகிருஷ்ணனிடம் கொடுக்க முயன்றார். அப்போது லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மதியழகன் தலைமையில் மறைந்திருந்த போலீசார், ராமகிருஷ்ணனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

No comments:

Post a Comment