FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, September 9, 2016

உணவகத்தில் ஆர்டர் செய்த மகள்: அசந்து போன தாய்

07.09.2016
அமெரிக்காவில் காது கேளாத இளம்பெண் ஒருவரிடம், உணவகத்தில் பணிப்பெண் கைஅசைவின் மூலம் வாதாடிய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் நார்த் கொரொலினா பகுதியில் உள்ள உணவகத்திற்கு தாய் மற்றும் மகள் சென்றுள்ளனர்.

இதில் தாயின் பெயர் புல்மென் என்றும் மகளின் பெயர் சிந்தியா வால்கர்(20) என்றும் அவருக்கு காது கேட்காது என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக சிந்தியாவின் தாயார் உணவகத்திற்கு செல்லும் போது சிந்தியாவிடம் கைஅசைவின் மூலம் என்ன வேண்டும் என்று கேட்பார்.

அது போல தற்போது இவர்கள் சென்றுள்ள உணவகத்தில் அவரின் தாயார் கைஅசைவின் மூலம் கேட்டுக் கொண்டிருந்த போது, உணவகத்தில் பணிபுரிந்த பணிபெண் ஒருவர், சிந்தியாவிடமே கைஅசைவின் மூலம் என்ன வேண்டும் என்றும், அதை புரிந்து கொண்டு அப்பெண்ணுக்கு தேவையானதை கொடுத்ததும் போன்ற வீடியோவை சிந்தியாவின் தாயார் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இது குறித்து சிந்தியாவின் தாயார் கூறியிருப்பதாவது, ஒரு உணவகத்திற்கு செல்லும் போது, என் மகளுக்கு தேவையான உணவை நானே தான் பதிவு செய்வேன்.

அது அவளுக்கு சற்று சங்கடமாக இருந்ததைப் போன்று உணர்ந்தாள், ஆனால் தற்போது இருவரும் சென்ற உணவகத்தில் என் மகளுக்கு தேவையானதை அவளே பதிவு செய்தது என்னை உணர்ச்சிவசப்படுத்தியது மற்றும் ஆச்சரியமாகவும் இருந்தது என கூறியிருந்தார்.

மேலும் அப்பணிப்பெண்ணின் பெயர் அனிஷ் எனவும், அவர் உறவினர் ஒருவர் காது கேளாமல் உள்ளார், அவரிடம் இருந்து தான் அனிஷ் பழகியதாக, உணவகத்தில் பணி புரியும் பெண் ஒருவர் தெரிவித்தார்.

இதே போன்று அனைத்து உணவகத்திலும் இருந்தால், காது கேளாதவர்களுக்கு சற்று எளிதாக இருக்கும் எனவும் சிந்தியாவின் தாயார் கூறியதாக தெரிவித்தனர்.


LANKASRI NEWS

No comments:

Post a Comment