FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, September 9, 2016

உணவகத்தில் ஆர்டர் செய்த மகள்: அசந்து போன தாய்

07.09.2016
அமெரிக்காவில் காது கேளாத இளம்பெண் ஒருவரிடம், உணவகத்தில் பணிப்பெண் கைஅசைவின் மூலம் வாதாடிய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் நார்த் கொரொலினா பகுதியில் உள்ள உணவகத்திற்கு தாய் மற்றும் மகள் சென்றுள்ளனர்.

இதில் தாயின் பெயர் புல்மென் என்றும் மகளின் பெயர் சிந்தியா வால்கர்(20) என்றும் அவருக்கு காது கேட்காது என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக சிந்தியாவின் தாயார் உணவகத்திற்கு செல்லும் போது சிந்தியாவிடம் கைஅசைவின் மூலம் என்ன வேண்டும் என்று கேட்பார்.

அது போல தற்போது இவர்கள் சென்றுள்ள உணவகத்தில் அவரின் தாயார் கைஅசைவின் மூலம் கேட்டுக் கொண்டிருந்த போது, உணவகத்தில் பணிபுரிந்த பணிபெண் ஒருவர், சிந்தியாவிடமே கைஅசைவின் மூலம் என்ன வேண்டும் என்றும், அதை புரிந்து கொண்டு அப்பெண்ணுக்கு தேவையானதை கொடுத்ததும் போன்ற வீடியோவை சிந்தியாவின் தாயார் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இது குறித்து சிந்தியாவின் தாயார் கூறியிருப்பதாவது, ஒரு உணவகத்திற்கு செல்லும் போது, என் மகளுக்கு தேவையான உணவை நானே தான் பதிவு செய்வேன்.

அது அவளுக்கு சற்று சங்கடமாக இருந்ததைப் போன்று உணர்ந்தாள், ஆனால் தற்போது இருவரும் சென்ற உணவகத்தில் என் மகளுக்கு தேவையானதை அவளே பதிவு செய்தது என்னை உணர்ச்சிவசப்படுத்தியது மற்றும் ஆச்சரியமாகவும் இருந்தது என கூறியிருந்தார்.

மேலும் அப்பணிப்பெண்ணின் பெயர் அனிஷ் எனவும், அவர் உறவினர் ஒருவர் காது கேளாமல் உள்ளார், அவரிடம் இருந்து தான் அனிஷ் பழகியதாக, உணவகத்தில் பணி புரியும் பெண் ஒருவர் தெரிவித்தார்.

இதே போன்று அனைத்து உணவகத்திலும் இருந்தால், காது கேளாதவர்களுக்கு சற்று எளிதாக இருக்கும் எனவும் சிந்தியாவின் தாயார் கூறியதாக தெரிவித்தனர்.


LANKASRI NEWS

No comments:

Post a Comment