FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, September 9, 2016

உணவகத்தில் ஆர்டர் செய்த மகள்: அசந்து போன தாய்

07.09.2016
அமெரிக்காவில் காது கேளாத இளம்பெண் ஒருவரிடம், உணவகத்தில் பணிப்பெண் கைஅசைவின் மூலம் வாதாடிய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் நார்த் கொரொலினா பகுதியில் உள்ள உணவகத்திற்கு தாய் மற்றும் மகள் சென்றுள்ளனர்.

இதில் தாயின் பெயர் புல்மென் என்றும் மகளின் பெயர் சிந்தியா வால்கர்(20) என்றும் அவருக்கு காது கேட்காது என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக சிந்தியாவின் தாயார் உணவகத்திற்கு செல்லும் போது சிந்தியாவிடம் கைஅசைவின் மூலம் என்ன வேண்டும் என்று கேட்பார்.

அது போல தற்போது இவர்கள் சென்றுள்ள உணவகத்தில் அவரின் தாயார் கைஅசைவின் மூலம் கேட்டுக் கொண்டிருந்த போது, உணவகத்தில் பணிபுரிந்த பணிபெண் ஒருவர், சிந்தியாவிடமே கைஅசைவின் மூலம் என்ன வேண்டும் என்றும், அதை புரிந்து கொண்டு அப்பெண்ணுக்கு தேவையானதை கொடுத்ததும் போன்ற வீடியோவை சிந்தியாவின் தாயார் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இது குறித்து சிந்தியாவின் தாயார் கூறியிருப்பதாவது, ஒரு உணவகத்திற்கு செல்லும் போது, என் மகளுக்கு தேவையான உணவை நானே தான் பதிவு செய்வேன்.

அது அவளுக்கு சற்று சங்கடமாக இருந்ததைப் போன்று உணர்ந்தாள், ஆனால் தற்போது இருவரும் சென்ற உணவகத்தில் என் மகளுக்கு தேவையானதை அவளே பதிவு செய்தது என்னை உணர்ச்சிவசப்படுத்தியது மற்றும் ஆச்சரியமாகவும் இருந்தது என கூறியிருந்தார்.

மேலும் அப்பணிப்பெண்ணின் பெயர் அனிஷ் எனவும், அவர் உறவினர் ஒருவர் காது கேளாமல் உள்ளார், அவரிடம் இருந்து தான் அனிஷ் பழகியதாக, உணவகத்தில் பணி புரியும் பெண் ஒருவர் தெரிவித்தார்.

இதே போன்று அனைத்து உணவகத்திலும் இருந்தால், காது கேளாதவர்களுக்கு சற்று எளிதாக இருக்கும் எனவும் சிந்தியாவின் தாயார் கூறியதாக தெரிவித்தனர்.


LANKASRI NEWS

No comments:

Post a Comment