FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, September 9, 2016

உணவகத்தில் ஆர்டர் செய்த மகள்: அசந்து போன தாய்

07.09.2016
அமெரிக்காவில் காது கேளாத இளம்பெண் ஒருவரிடம், உணவகத்தில் பணிப்பெண் கைஅசைவின் மூலம் வாதாடிய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் நார்த் கொரொலினா பகுதியில் உள்ள உணவகத்திற்கு தாய் மற்றும் மகள் சென்றுள்ளனர்.

இதில் தாயின் பெயர் புல்மென் என்றும் மகளின் பெயர் சிந்தியா வால்கர்(20) என்றும் அவருக்கு காது கேட்காது என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக சிந்தியாவின் தாயார் உணவகத்திற்கு செல்லும் போது சிந்தியாவிடம் கைஅசைவின் மூலம் என்ன வேண்டும் என்று கேட்பார்.

அது போல தற்போது இவர்கள் சென்றுள்ள உணவகத்தில் அவரின் தாயார் கைஅசைவின் மூலம் கேட்டுக் கொண்டிருந்த போது, உணவகத்தில் பணிபுரிந்த பணிபெண் ஒருவர், சிந்தியாவிடமே கைஅசைவின் மூலம் என்ன வேண்டும் என்றும், அதை புரிந்து கொண்டு அப்பெண்ணுக்கு தேவையானதை கொடுத்ததும் போன்ற வீடியோவை சிந்தியாவின் தாயார் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இது குறித்து சிந்தியாவின் தாயார் கூறியிருப்பதாவது, ஒரு உணவகத்திற்கு செல்லும் போது, என் மகளுக்கு தேவையான உணவை நானே தான் பதிவு செய்வேன்.

அது அவளுக்கு சற்று சங்கடமாக இருந்ததைப் போன்று உணர்ந்தாள், ஆனால் தற்போது இருவரும் சென்ற உணவகத்தில் என் மகளுக்கு தேவையானதை அவளே பதிவு செய்தது என்னை உணர்ச்சிவசப்படுத்தியது மற்றும் ஆச்சரியமாகவும் இருந்தது என கூறியிருந்தார்.

மேலும் அப்பணிப்பெண்ணின் பெயர் அனிஷ் எனவும், அவர் உறவினர் ஒருவர் காது கேளாமல் உள்ளார், அவரிடம் இருந்து தான் அனிஷ் பழகியதாக, உணவகத்தில் பணி புரியும் பெண் ஒருவர் தெரிவித்தார்.

இதே போன்று அனைத்து உணவகத்திலும் இருந்தால், காது கேளாதவர்களுக்கு சற்று எளிதாக இருக்கும் எனவும் சிந்தியாவின் தாயார் கூறியதாக தெரிவித்தனர்.


LANKASRI NEWS

No comments:

Post a Comment