FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Tuesday, September 6, 2016

மாற்றுத்திறனாளிகள் சுயம்வரம்: ஏராளமானோர் பங்கேற்பு

05.09.2016, பவானி: பவானியில், மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த, மாற்றுத்திறனாளிகள் தங்கள் மனதுக்கு பிடித்தவர்களை தேர்வு செய்தனர். பவானி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று, தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் மாநிலத் தலைவர் சிம்மசந்திரன் தலைமையில், சுயம்வரம் நடந்தது. இதில், ஈரோடு, சேலம், நாமக்கல் உட்பட, பல்வேறு மாவட்டங்களில் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், தங்கள் ஜோடிகளை தேர்வு செய்தனர். இதில், முதலாவதாக பவானி, தாளவாடி பகுதியைச் சேர்ந்த ராஜீ, முதியனூரைச் சேர்ந்த சில்பகுமாரி ஜோடி தேர்வானது. இதேபோல், பலரும் தங்களின் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்தனர். தேர்வான ஜோடிகளுக்கு வரும், 14ம் தேதியன்று சென்னையில், கீதா பவன் அறக்கட்டளை சார்பில், ஒவ்வொரு ஜோடிக்கும் தலா, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு கிராம் தங்கம், இரண்டு மாதத்திற்கான மளிகை செலவு மற்றும், 52 வகையான சீர்வரிசையுடன் இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment