FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, September 6, 2016

மாற்றுத்திறனாளிகள் சுயம்வரம்: ஏராளமானோர் பங்கேற்பு

05.09.2016, பவானி: பவானியில், மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த, மாற்றுத்திறனாளிகள் தங்கள் மனதுக்கு பிடித்தவர்களை தேர்வு செய்தனர். பவானி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று, தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் மாநிலத் தலைவர் சிம்மசந்திரன் தலைமையில், சுயம்வரம் நடந்தது. இதில், ஈரோடு, சேலம், நாமக்கல் உட்பட, பல்வேறு மாவட்டங்களில் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், தங்கள் ஜோடிகளை தேர்வு செய்தனர். இதில், முதலாவதாக பவானி, தாளவாடி பகுதியைச் சேர்ந்த ராஜீ, முதியனூரைச் சேர்ந்த சில்பகுமாரி ஜோடி தேர்வானது. இதேபோல், பலரும் தங்களின் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்தனர். தேர்வான ஜோடிகளுக்கு வரும், 14ம் தேதியன்று சென்னையில், கீதா பவன் அறக்கட்டளை சார்பில், ஒவ்வொரு ஜோடிக்கும் தலா, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு கிராம் தங்கம், இரண்டு மாதத்திற்கான மளிகை செலவு மற்றும், 52 வகையான சீர்வரிசையுடன் இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment