FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, September 6, 2016

மாற்றுத்திறனாளிகள் சுயம்வரம்: ஏராளமானோர் பங்கேற்பு

05.09.2016, பவானி: பவானியில், மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த, மாற்றுத்திறனாளிகள் தங்கள் மனதுக்கு பிடித்தவர்களை தேர்வு செய்தனர். பவானி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று, தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் மாநிலத் தலைவர் சிம்மசந்திரன் தலைமையில், சுயம்வரம் நடந்தது. இதில், ஈரோடு, சேலம், நாமக்கல் உட்பட, பல்வேறு மாவட்டங்களில் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், தங்கள் ஜோடிகளை தேர்வு செய்தனர். இதில், முதலாவதாக பவானி, தாளவாடி பகுதியைச் சேர்ந்த ராஜீ, முதியனூரைச் சேர்ந்த சில்பகுமாரி ஜோடி தேர்வானது. இதேபோல், பலரும் தங்களின் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்தனர். தேர்வான ஜோடிகளுக்கு வரும், 14ம் தேதியன்று சென்னையில், கீதா பவன் அறக்கட்டளை சார்பில், ஒவ்வொரு ஜோடிக்கும் தலா, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு கிராம் தங்கம், இரண்டு மாதத்திற்கான மளிகை செலவு மற்றும், 52 வகையான சீர்வரிசையுடன் இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment